05-29-2005, 09:50 AM
புலிகளின் விமானப் படையால் போர் அபாயமா?: மறுக்கிறது கண்காணிப்புக் குழு
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் போர் ஏற்படும் சூழல் இருப்பதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி ஸ்தாபனம் வெளியிட்ட செய்திகளை கண்காணிப்புக் குழு நிராகரித்துள்ளது.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இதுபோன்ற சிறிதும் யோசிக்காத, இத்தகைய தொணியில் தெரிவிக்காத கருத்துகளை ஏ.எஃப்.பி செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து நாம் அவற்றை பார்வையிடாத நிலையில் எதையும் உறுதி செய்யவில்லை என்றும் புலிகளின் வான்படை சிறிலங்கா வான்தளத்தை பயன்படுத்தினால் அது சர்வதேச விதிகளுக்கு எதிரானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று போர் நிறுத்த கண்காணிப்புக்குத் தலைவர் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி தெரிவித்தது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு சிக்கலான நிலைமையில் இருக்கின்ற சூழலில் உணர்வுகளை எரியூட்டுகிற வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டாம் என்றும் அனைத்து ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Puthinam
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் போர் ஏற்படும் சூழல் இருப்பதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி ஸ்தாபனம் வெளியிட்ட செய்திகளை கண்காணிப்புக் குழு நிராகரித்துள்ளது.
போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் இதுபோன்ற சிறிதும் யோசிக்காத, இத்தகைய தொணியில் தெரிவிக்காத கருத்துகளை ஏ.எஃப்.பி செய்தி ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை குறித்து நாம் அவற்றை பார்வையிடாத நிலையில் எதையும் உறுதி செய்யவில்லை என்றும் புலிகளின் வான்படை சிறிலங்கா வான்தளத்தை பயன்படுத்தினால் அது சர்வதேச விதிகளுக்கு எதிரானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று போர் நிறுத்த கண்காணிப்புக்குத் தலைவர் தெரிவித்ததாக ஏ.எஃப்.பி தெரிவித்தது.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஒரு சிக்கலான நிலைமையில் இருக்கின்ற சூழலில் உணர்வுகளை எரியூட்டுகிற வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டாம் என்றும் அனைத்து ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

