05-27-2005, 04:51 PM
Quote:உங்களுக்குள் முதலில் எழுந்த எத்தனை கருத்துக்களோடு பின்னாடி அதே நோக்கம் கருதி எழுந்த கருத்துக்களுடன் முரண்பட்டிருப்பீர்கள்..அதாவது நீங்க முதலில் சரியென்று நினைத்து பின்னர் தவறென்று உணர்ந்தவை கண்டவை...! அதற்காக உங்களை நீங்களே பிரிய முடியுமாங்க...! உங்க மனசையே நீங்க தள்ளி வைச்சு சந்தோசம் அனுபவிப்பீங்களா...??! முடியாதில்லா அப்படிதாங்க இருப்பாங்க உண்மையான கணவன் மனைவி... இல்லை காதலன் காதலி...! அவர்களுக்கு விவாகரத்தோ இல்லை விட்டிட்டு வேற ஒன்று தேடுவதோ வாழ்வின் இலச்சியமாக இருக்காது... தங்களுக்கிடையேயான புரிந்துணர்வை அதிகரித்து சந்தோசமாக வாழ்வதே நோக்கமாக இருக்கும்...!
உலகில் எத்தனை பேர் விவாகரத்து வாங்கிறாங்க...சிறிய தொகையினர்தான்... மிச்சம் மீதிப் பேர் எப்படிங்க வாழ்றாங்க...! அதுபோக வாங்கப்படுகிற விவாகரத்துக்களுக்கு சுயநலமிகுதி தான் இப்ப பெரிதும் காரணம்...என்னால தனிய வாழ முடியும் நீ என்ன கேட்கிறது...இதுதான் முக்கிய காரணம்... மற்றவர்களைப் புரிந்து கொள்ளவே அவகாசம் கொடுக்காத மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்..இவர்கள் மனிதாபிமானச் சிந்தனை...சமூகச் சிந்தனையற்ற...ஒருவகை நோயாளிகள்...என்றுதான் கருத வேண்டும்...! அவர்களை அப்படி கருதுவதால் எந்தத் தவறும் இல்லை...!
கருத்து முரண்பாடு மட்டும் தானா விவாகரத்திற்கு காரணம். அது முக்கியமான காரணம். மற்றக்காரணங்களும் இருக்கே.. வேறை வேறை காரணங்களும் இருக்கு.. அதேன்.. முரண்பாடுகளுக்க வேதனையான வாழ்க்கை என்று தான் கேக்கிறம். இப்ப எங்கட கருத்தோடையே நாங்க அடிக்கடி முரண்படுறம் என்றால் எங்களுக்குள்ள உறுதியின்மை என்று தானே அர்த்தம். சொந்த கருத்தோட உறுதியாய் வாழ முடியாத ஒருவர் எப்படிங்க மற்றவரின்கருத்தை அனுசரித்து உடன்பட்டு போகமுடியும். இப்ப கணவனோ காதலனோ மனைவியோ காதலியோ இதுகளை கனநாளைக்கு பொறுப்பாங்களா என்ன..?? ஒரு கட்டத்தில வெறுப்பு வந்தே தீரும். ஆரம்பத்தில வேணும் என்றால் வராமல் இருக்கலாம் பிறகு கொஞ்சக்காலம் வராத மாதிரி நடிக்கலாம். இப்படி நடிக்கத்தொடங்கும் போதே ஆரம்பமாகிடும் விரிசல். விரிசல் பிறகு நெருக்கடிகள் அதை இதைகொண்டுவந்து அது ஈகோவாகி.. நீபெரிசு நான் பெரிசென்றாகி.. ஒரு கட்டத்திற்கு பிறகு இதுவே வாழ்க்கையாகிடும். ஏன் அந்த வாழ்க்கை. ஆஆ பிடிக்கல இனிச்சரிவராது பிரிஞ்சிட்டா. நமக்கு மட்டும் அல்ல நம்மைச்சுத்தியிருக்கவங்க.. அக்கம்பக்கம் அயலவர்கள் உறவினர்கள் என்று.எல்லாருக்கும் நின்மதி. என்ன நான் சொல்லுறது.
இப்ப விவகாரத்து வாங்காதவங்க எல்லாரும் சந்தோசமாய் வாழுறாங்க என்றாங்க அர்த்தம். இல்லவே இல்லை பிள்ளைகள் குட்டிகள். அப்பா அம்மா.. மானம் கெளவரம் என்று எதையே ஒன்றை மனசில வைச்சிட்டு அதுக்குள்ள நெருக்கடிகளை அனுபவிச்சிட்டிருக்காங்க. இது தான்க கூடாது மனிசரின் மனத்தில் இருந்து உடல்நிளைக்கும் கூட. எத்தனை நாளைக்கு புழுங்க முடியும் சொல்லுங்க முடிவெடுத்திட்டா முடிச்சிட்டா. கிட்ட இருந்து இருக்கிற கொஞ்ச நெஞ்ச அன்பையும் இழக்கிறதை விட்டிட்டு. மீதீயோட நல்லாய் வாழ்ந்த நாட்களை நினைச்சாவது வாழ்ந்திடலாம். இதை நோயாளி என்று மற்றவைக்கு தோன்றலாம். இது தான் முடிஞ்சவரை மற்றத்துணைக்கு செய்கிற சிறிய உதவி. ஏன் என்றால் வாழ்க்கையில நின்மதி தான் முக்கியம். அதைவிட வேறை என்ன வேணும்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

