05-25-2005, 08:13 AM
samsan Wrote:இங்கே எழுதியிருக்கிறது எல்லாவற்றையும் நான் வாசிக்கவில்லை. அதனால் அதன் போக்கை நான் அறியேன். என்கருத்துப்படி மறுமணம் செய்வது ஒன்றும் தீய செயலல்லவே. என்னைப்பொருத்தவரைக்கும். ஒருவர் மறுமணம் செய்ய விரும்பும் பட்சத்தில் இந்த சமூகம் என்ன சொல்லுவது. அதற்கு அவர் என்ன பயம்கொள்வது. இது சாத்தியமானதா சாத்தியமில்லாததா என அறிந்து அவர்தான் முடிவெடுக்கவேண்டும்.
இதைக்கேள்வியாக கேட்பதைவிட்டுவிட்டு கட்டளையிடவேண்டியதுதான்.
ம்ம் அது கணவனை இழந்தவர்களுக்கு அது சரி.... கணவனை மாற்றுவோருக்கு??...நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன் அதற்கான பதில் ...... நான் ஒன்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கல்லோடும் புல்லோடும் வாழ்க்கை நடத்த சொல்வதாய் எண்ண வேண்டாம். இங்கு தேவையற்ற பிரச்சினைகளுக்காய் விவாகரத்து ஏற்ப்படுகிறது அது மட்டுமன்றி.. விவாகரத்துக்கு விண்ணப்பிக்க மன்னனே அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறார்கள் சிலர்....
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

