05-22-2005, 08:19 PM
தெற்காசியாவின் கட்டுப்பாட்டை படிப்படியாக இந்தியா இழக்கிறது
- இந்திய ஆய்வாளர்
இந்தியாவிடம் தெளிவான வெளிநாட்டு கொள்கைகள் இல்லை என்றும் இதன் காரணமாக அந்நிய சக்திகள் தெற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இந்திய ஆய்வாளர் ஒருவர் இதன் மூலம் இந்தியா படிப்படியாக தெற்காசியப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை இழந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையிடாத கொள்ளை காரணமாகவே நோர்வே மத்தியஸ்த முயற்ச்சிக்கு அழைக்கப்பட்டது என்றும் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டிய இந்தியா தனது இயலாமை காரணமாக நோர்வேயிடம் இலங்கை விவகாரத்தை கையளிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்தியா தொடர்ந்தும் இது போன்ற தலையிடாக் கொள்கைகளை கடைப்பிடிக்குமானால் தெற்காசிய பிராந்தியத்தின் ஆதிக்கம் பாகிஸ்தானிடம் செல்வதை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் வான்படை குறித்தும்ää கடற்புலிகளின் வளர்ச்சி குறித்தும் தனது கவலையை நோர்வே தரப்பிடம் தெரிவிக்கும் நிலைக்கு இந்தியா பலவீனப்பட்டுள்ளதையே அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்து காட்டுவதாகவும் அந்த ஆய்வாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: சங்கதி
- இந்திய ஆய்வாளர்
இந்தியாவிடம் தெளிவான வெளிநாட்டு கொள்கைகள் இல்லை என்றும் இதன் காரணமாக அந்நிய சக்திகள் தெற்காசியப் பிராந்தியத்தில் ஆதிக்கம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் இந்திய ஆய்வாளர் ஒருவர் இதன் மூலம் இந்தியா படிப்படியாக தெற்காசியப் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை இழந்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையிடாத கொள்ளை காரணமாகவே நோர்வே மத்தியஸ்த முயற்ச்சிக்கு அழைக்கப்பட்டது என்றும் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டிய இந்தியா தனது இயலாமை காரணமாக நோர்வேயிடம் இலங்கை விவகாரத்தை கையளிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்தியா தொடர்ந்தும் இது போன்ற தலையிடாக் கொள்கைகளை கடைப்பிடிக்குமானால் தெற்காசிய பிராந்தியத்தின் ஆதிக்கம் பாகிஸ்தானிடம் செல்வதை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் வான்படை குறித்தும்ää கடற்புலிகளின் வளர்ச்சி குறித்தும் தனது கவலையை நோர்வே தரப்பிடம் தெரிவிக்கும் நிலைக்கு இந்தியா பலவீனப்பட்டுள்ளதையே அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் எடுத்து காட்டுவதாகவும் அந்த ஆய்வாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி: சங்கதி

