05-21-2005, 02:32 PM
வான்புலிகள் அமைப்பு இந்திய, இலங்கை இறைமைக்கு பாரிய அச்சுறுத்தல்
<b>கடும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி வலியுறுத்தல்</b>
வான் புலிகள் அமைப்பானது, இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாயிருப்பதால், அவர்கள் விடயத்தில் இனியும் பொறுமை காக்காது, இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா விடுதலைப் புலிகளுக்கெதிராக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரியான கேணல் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக பதவி வகித்தவரும் இராணுவ புலனாய்வுத் துறைசார் நிபுணரும், ஓய்வு பெற்ற கேணலுமான ஆர். ஹரிஹரன் இந்தியாவின் `இந்து' நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
`புலிகளின் வான்படை வலுவும் அதன் அபாயமும்' என்ற தலைப்பில் அவர் வரைந்துள்ள அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளவும் தமது இராணுவ பலத்தை மேலும், வலுப்படுத்தவும் சமாதான முயற்சிகளை பயன்படுத்தும் விடுதலைப்புலிகளின் வழமையான பாணிக்கு தற்போதைய காலப்பகுதியும் ஏதுவாக அமைந்துள்ளது.
தமது படைகளின் மன உறுதியைப் பேணுவது, புதிய நடவடிக்கைகள் தொடர்பான வியூகங்களை உருவாக்குவது, எதிரியை தந்திரோபாயமாக நிலை குலையச் செய்வது போன்ற வழிகளின் ஊடாக விடுதலைப்புலிகள் தம்மை இக்காலப்பகுதியில் வலுப்படுத்தியுள்ளனர்.
சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2004 ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை,புலிகள் சுமார் 11 கப்பல்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர்.
திறனற்ற கண்காணிப்புக் குழு, அறிக்கைகளில் மட்டுமே தனது பணியை ஆற்றும் கையாலாகாத அமைப்பாக செயற்பட்டு வருகிறது.
தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் இழுபறியால் சமாதான முயற்சிகள் மேலும் காலம் தாழ்த்தப்படுவது புலிகள் பெருமளவான நிதி, சக்தி, நேரம் போன்ற வளங்களை மூலதனமாகக் கொண்டு வான் புலிகள் அமைப்பை நேர்த்தியாக நிறுவ ஒரு வகையில் வழி கோலியுள்ளது.
இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியிலேயே விடுதலைப்புலிகளுக்கு வான் படை அமைக்கும் இலக்கு இருந்தது.
சிறிய விமானங்களுக்கான உதிரிப் பாகங்களை அப்போதே நாம் விடுதலைப்புலிகளின் இரகசிய இடங்களிலிருந்து மீட்டிருந்தோம். விடுதலைப்புலிகளின் தொழில் நுட்ப பொறியியல் பகுதி ஒன்றிலிருந்து இலங்கை இராணுவமும் அப்போது விடுதலைப்புலிகளின் விமான உதிரிப்பாகங்களை மீட்டிருந்தது.
1988 இன் பிற்பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணை, ராடார் தொழில் நுட்பம், கடற்படை என பின்னர் வளர்ச்சி கண்ட விடுதலைப்புலிகள் இன்று `வான் புலிகள்' அமைப்பையும் அமைத்து தம்மை ஒரு முழுமையான இராணுவமாக உருவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கட்டுப்பாடுகள் தடைகள் அமுலில் உள்ளபோதும் விடுதலைப்புலிகள் பெருமளவான நிதி மற்றும் தொழில் நுட்ப வளங்களை கொண்டு வந்து தமது திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இது இலங்கைக்கோ, அதற்கு மிகவும் அயலில் உள்ள இந்தியாவுக்கோ ஆரோக்கியமான விடயங்கள் அல்ல. தம்மை ஒரு முழுமையான படைக் கட்டமைப்பாக கட்டியெழுப்பியிருக்கும் விடுதலைப்புலிகள் அடுத்த தடவை அரசுடன் சமாதான பேச்சுக்களுக்காக வரும்போது பேரம் பேசக் கூடிய வலுவான சக்தியாக இருக்கப் போகிறார்கள்.
இது இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியா மீது கொமாண்டோ பாணியிலான வான் தாக்குதலை மேற்கொள்ளவல்ல வலுவைக் கொண்டுள்ள விடுதலைப்புலிகளின் வான் படை சக்தி குறித்து இந்திய அரசு விழிப்படைய வேண்டும். தனது படைகளை கண்காணிப்புப் பணிகளில் உசாராக்கி நாட்டின் பாதுகாப்பு மீதான அவதானத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் எங்கிருந்து விமான உதிரிப்பாகங்களை பெறுகிறார்கள், வான் கலங்களுக்கு எங்கிருந்து எரிபொருள் பெறுகிறார்கள், வான் புலிகளுக்கு எங்கு பயிற்சியளிக்கப்படுகின்றன என்பன குறித்த தகவல்களையும் இந்தியா தனது புலனாய்வு அமைப்புக்களை உசாராக்குவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
தினக்குரல்
<b>கடும் நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி வலியுறுத்தல்</b>
வான் புலிகள் அமைப்பானது, இந்தியாவினதும் இலங்கையினதும் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாயிருப்பதால், அவர்கள் விடயத்தில் இனியும் பொறுமை காக்காது, இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா விடுதலைப் புலிகளுக்கெதிராக கடும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் இராணுவ அதிகாரியான கேணல் ஹரிஹரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக பதவி வகித்தவரும் இராணுவ புலனாய்வுத் துறைசார் நிபுணரும், ஓய்வு பெற்ற கேணலுமான ஆர். ஹரிஹரன் இந்தியாவின் `இந்து' நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
`புலிகளின் வான்படை வலுவும் அதன் அபாயமும்' என்ற தலைப்பில் அவர் வரைந்துள்ள அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆயுதக் கொள்வனவுகளை மேற்கொள்ளவும் தமது இராணுவ பலத்தை மேலும், வலுப்படுத்தவும் சமாதான முயற்சிகளை பயன்படுத்தும் விடுதலைப்புலிகளின் வழமையான பாணிக்கு தற்போதைய காலப்பகுதியும் ஏதுவாக அமைந்துள்ளது.
தமது படைகளின் மன உறுதியைப் பேணுவது, புதிய நடவடிக்கைகள் தொடர்பான வியூகங்களை உருவாக்குவது, எதிரியை தந்திரோபாயமாக நிலை குலையச் செய்வது போன்ற வழிகளின் ஊடாக விடுதலைப்புலிகள் தம்மை இக்காலப்பகுதியில் வலுப்படுத்தியுள்ளனர்.
சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2004 ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை,புலிகள் சுமார் 11 கப்பல்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளனர்.
திறனற்ற கண்காணிப்புக் குழு, அறிக்கைகளில் மட்டுமே தனது பணியை ஆற்றும் கையாலாகாத அமைப்பாக செயற்பட்டு வருகிறது.
தென்னிலங்கையில் காணப்படும் அரசியல் இழுபறியால் சமாதான முயற்சிகள் மேலும் காலம் தாழ்த்தப்படுவது புலிகள் பெருமளவான நிதி, சக்தி, நேரம் போன்ற வளங்களை மூலதனமாகக் கொண்டு வான் புலிகள் அமைப்பை நேர்த்தியாக நிறுவ ஒரு வகையில் வழி கோலியுள்ளது.
இந்திய அமைதிப் படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப் பகுதியிலேயே விடுதலைப்புலிகளுக்கு வான் படை அமைக்கும் இலக்கு இருந்தது.
சிறிய விமானங்களுக்கான உதிரிப் பாகங்களை அப்போதே நாம் விடுதலைப்புலிகளின் இரகசிய இடங்களிலிருந்து மீட்டிருந்தோம். விடுதலைப்புலிகளின் தொழில் நுட்ப பொறியியல் பகுதி ஒன்றிலிருந்து இலங்கை இராணுவமும் அப்போது விடுதலைப்புலிகளின் விமான உதிரிப்பாகங்களை மீட்டிருந்தது.
1988 இன் பிற்பகுதியில் விமான எதிர்ப்பு ஏவுகணை, ராடார் தொழில் நுட்பம், கடற்படை என பின்னர் வளர்ச்சி கண்ட விடுதலைப்புலிகள் இன்று `வான் புலிகள்' அமைப்பையும் அமைத்து தம்மை ஒரு முழுமையான இராணுவமாக உருவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் கட்டுப்பாடுகள் தடைகள் அமுலில் உள்ளபோதும் விடுதலைப்புலிகள் பெருமளவான நிதி மற்றும் தொழில் நுட்ப வளங்களை கொண்டு வந்து தமது திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இது இலங்கைக்கோ, அதற்கு மிகவும் அயலில் உள்ள இந்தியாவுக்கோ ஆரோக்கியமான விடயங்கள் அல்ல. தம்மை ஒரு முழுமையான படைக் கட்டமைப்பாக கட்டியெழுப்பியிருக்கும் விடுதலைப்புலிகள் அடுத்த தடவை அரசுடன் சமாதான பேச்சுக்களுக்காக வரும்போது பேரம் பேசக் கூடிய வலுவான சக்தியாக இருக்கப் போகிறார்கள்.
இது இந்தியாவினதும் இலங்கையினதும் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையை உருவாக்கியுள்ளது. இந்தியா மீது கொமாண்டோ பாணியிலான வான் தாக்குதலை மேற்கொள்ளவல்ல வலுவைக் கொண்டுள்ள விடுதலைப்புலிகளின் வான் படை சக்தி குறித்து இந்திய அரசு விழிப்படைய வேண்டும். தனது படைகளை கண்காணிப்புப் பணிகளில் உசாராக்கி நாட்டின் பாதுகாப்பு மீதான அவதானத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்.
விடுதலைப்புலிகள் எங்கிருந்து விமான உதிரிப்பாகங்களை பெறுகிறார்கள், வான் கலங்களுக்கு எங்கிருந்து எரிபொருள் பெறுகிறார்கள், வான் புலிகளுக்கு எங்கு பயிற்சியளிக்கப்படுகின்றன என்பன குறித்த தகவல்களையும் இந்தியா தனது புலனாய்வு அமைப்புக்களை உசாராக்குவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

