09-22-2003, 12:22 PM
Chandravathanaa Wrote:<b>சிலேடை, மடக்கு......... என்பன
அந்தக் காலந்தொட்டு இந்தக்காலம் வரை புலவரிடையே நிலவி வரும் இலக்கியக் குறும்புகள்.</b>.
இவைகளை யாரும் பெரிது படுத்துவதில்லை. மாறாக அதன் பொருளுணர்ந்து
அதற்கு மேலான சிலேடையால் திரும்பக் கொடுப்பதே புலவர்களின் பண்பு.
இங்கு நளாயினி ஒரு கவிஞர். அவர் சொன்ன கவிதையில் குருவி பொறுக்கி எடுப்பது என்ற அர்த்தமும் தொனிக்கிறது.
<b>குருவி கொத்தித் தின்பதும் பொறுக்கி உண்பதும் விசேடமான விடயங்களல்ல. </b>
இதே நேரம் வேறு வேறு இணையங்ளில் பொறுக்கி எடுத்தது என்று சொல்வது கூட பெரிய தப்பான விடயமல்ல.
<b>இதற்கு போய் குருவி இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணியது
உண்மையிலேயே குருவியின் இயலாமையின் வெளிப்பாட்டையே எமக்கு அப்பட்டமாகக் காட்டியுள்ளது.
கவியுள் சிலேடை கலந்த நளாயினிக்கு [b]பாராட்டுக்குப் பதிலாக</b>
<b>ஒரு எச்சரிக்கை </b>கொடுக்கப் பட்டதை என்னால் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நானும் முதல் நளாயிளியம்மாவின் சிலேடை வரிகளைப் பார்த்து சிரித்துவிட்டு இருந்துவிட்டேன்...
இதைப்பற்றி என்ன சொல்லுறியள் மாமி?
[quote=nalayini]
ஆனால் நான் வேணுமென்றே இரட்டை அர்த்தம் பட பொறுக்கி..! என எழுதியதற்கு என்னால் மன்னிப்போ அல்லது தெரியாமல் தவறிழைத்தேன் என்றோ என்னால் கேக்க முடியாது.
இதுக்கு எச்சரிக்கை ஒன்று கொடுத்ததே தவறு!!!
இந்த பண்பில்லா திமிர் வளர்க்கத்தான் பெண்ணியமோ?

