05-12-2005, 04:20 AM
Quote:பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!
பாலபோதினி
படிக்கும் காலத்தில்
பாலமித்திரா கதை
அம்புலிமாமா
பார்க்கும் வயதில்
அம்புலிமாமா கதை
என்ன
அந்த நாளில்
இந்த மழலை
திருவிளையாடலா.. ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:மனமதனை மகிழ வைக்கும்
மழைக்காலம்
பாடப்புத்தகங்களுக்கு
வேட்டு வைக்கும் காலமது...!
படித்த பாடங்கள் கப்பலாக
மழை நீரில் தத்தளித்து
கரை சேர்ந்திட துடிதுடிக்கும்...!
கப்பல் செய்த களிப்பு
இறுதியாண்டு பரீட்சையினை
மறக்கடிக்க செய்துவிடும்...!
ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!
வேட்டுச் சத்தம் கேட்டு
கதிகலங்கிய காலத்தில்
பாடப் புத்தகங்களுக்கே
வேட்டு வைக்கும்
மழலையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கப்பல் செய்து
கடல் கடந்து
சாதனை படைத்தது போல்
பாடப் புத்தகத்தை
மழை நீரில் விட்டு
விடுப்பு பார்த்து விட்டு
ஆண்டிறுதியில்
அம்மா அடுப்பு
பத்தவைக்க விட்டதை
சொல்ல வில்லைப் போல் இருக்கிறதே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
துடுக்காய் ரொக்கற்
விட்ட
சோழியன் அண்ணா
மிடுக்காய்
இன்றும் பட்டி மன்றத்தில்
நடுவர் கதிரையில் கூட
அமராமால்
தொழில் நுட்பத்தில்
ரொக்கற்றை தானே
கண்டு பிடித்தது போல்
ஓடிக் கொண்டே இருக்கிறாரே
உற்சாகமாக. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இனிக்க இனிக்க
குடித்த குளிர்கழியை
இன்னும்
மறக்காமல் இருக்கிறாராம்
எங்கள் மதன்
எதுக்கு,
என்றால்,
இப்போ குடிப்பது
இனிக்கவில்லையாம்.
எது?
Quote:ஞாபங்கள் தாலாட்டும்
ஞாபகங்கள் தீ மூட்டும்
அப்படியா?
தாலாட்டையே இன்னும்
மறக்காமல்
தாவரங்களையே
தாலாட்டி திரியும்
தவப் புதல்வன்
காண்பதை எல்லாம்
தன் கண்ணுக்குள்
சீ.. கருவிக்குள்
அடக்கி
பொக்கிசமாக்குகிறார்.
மறக்காமல் இருக்கவா?
அந்த நாள்
ஞாபகங்களை
நியாயமாய் சொல்லாமல்
எல்லோரும் சொல்பவற்றை
தன்னது
என்பது போல
துடுக்காய் பேசிவிட்டு
தனிக்காட்டு இராணியாய்
யாழிலை திரியுறாவாம்
யாரது.?
மன்னரிடம் தான் கேக்கணும்..
சோடா போத்தில்
பற்றி
எல்லாம்
சுருக்கமாய் சொல்கிறார்,
ஈஸ்வாரா..!
உனக்கே,
இது நியாயமா.
வேண்டாம்பா வம்பு,
எனக்கு.
Quote:கடல் அலைகள் கரையோடு சரியும்...மன அலைகள் உடலோடு இருக்கும் உயிர் வரை...!
தன் மன அலைகளை களக் கடலில் பரப்பி விட்ட மழலைத் தங்கைக்கு வாழ்த்துக்கள்...!
மலரை
மயக்கவென
அலைந்த அந்த காலங்களை
மறக்காமல் சொல்கிறார்
மறவர் தாம் என
மார்தட்டி நிக்கும்
பறவை இனம்,
பாவம்
எங்கள் மன்னர்
படைமுன்
பரிதாப பட்டு நின்ற
அந்த நினைவுகளை
மறந்துவிட்டார் போலும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மழலை கவிதை அருமை வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்.
[b][size=18]

