05-04-2005, 07:24 PM
நல்ல தமிழ் 2
சீன மெய்யியலறிஞர் (தத்துவஞானி) கன்பூசியசிடம் அவருடைய மாணவரொருவர், ''தேச ஆற்றுகையை ஒப்படைத்தால் தாங்கள் செய்யும் முதல் வேலை என்ன?"" என்றார்.
''நிச்சயமாக மொழியைச் சீர்திருத்துவதுதான்"
என்றார் கன்பூசியசு. அங்குக்குழுமி இருந்தோர் மிக்க வியப்படைந்து, ''மொழிக்கும் ஆற்றுகைக்கும் தொடர்பு என்னவோ? " எனக்கேட்டனர்.'
' மொழி, செம்மை பெறாவிடில் ஒருவர் எதைச்சொல்ல விரும்புகிறாரோ அதைக் கேட்கிறவர் தெளிவுற - ஐயந்திரிபற அறிந்துகொள்ளும் முறையிற் சொல்லமுடியாது. எண்ணப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்படவேண்டுமோ அது செய்யப்படமாட்டாது; நிறைவேற வேண்டுவது நிறைவேறாது போகும். ஒழுக்கமும் பண்பும் குறையும்; நீதியும் நெறிமுறையுந் திரியும்; மயக்கமும் குழப்பமும் உண்டாகும். எனவே, சொல்லப்படுவதில் ஐயம் எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்கவேண்டும். ஆகவே, மொழி செம்மையுற வேண்டுவது, எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது" என்றார் கன்பூசியசு.
வணக்கம்!
தமிழை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிச் சொல்வதாகச் சொன்னேன்.
வன்னியில், சரியான ஆராய்ச்சிகளின்றி ஒரு சொல்லை அவர்கள் முன்மொழிகிறார்களோ என்ற ஐயம் உண்டு. உண்மையில் அவர்களுக்கு வெளியுலகத்தோடு இப்போதுதான் தொடர்பு எற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரபூர்வமாய் வெளியிடப்பட்ட சில சொற்களைப் பற்றி அறியாமல் இப்படி தாங்கள் உருவாக்கிய அல்லது சரியென தாங்கள் நினைத்த ஒரு சொல்லை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, 'பாண்' என்று நாம் அழைக்கும் (பலர், இதைப் பாண் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் புதிதாக ஒரு சொல் உருவாக்குவான் என்று கேட்கிறார்கள்) Bread ஐ 'வெதுப்பி' என்ற பெயரால் அவர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். ஆனால் சிறிதுகாலத்தின்பின்,
“வெதுப்பி என்பது தவறு, இன்னொன்றை வேக வைப்பதுதான் வெதுப்பி. பாணை வேக வைக்கும் போறணையைத்தான் வெதுப்பி என்று சொல்லலாம். பாணை வெதும்பி என்றுதான் சொல்வது சிறந்தது”
என்று ஒரு கருத்து வந்தது. எனக்கும் அக்கருத்து சரிபோலவே தெரிகிறது. ஆனாலும் எந்த மாற்றமுமின்றி வெதுப்பி என்பதே பாவனையிலிருந்து வருகிறது. அதுபோலவே, போக்கு வரவுக் கழகமா அல்லது போக்கு வரத்துக் கழகமா என்ற விவாதத்துக்குபின் இன்று போக்குவரவுக் கழகம் என்ற பேரே நிலைத்து விட்டது.
ஆகவே இனிமேல் நடைமுறைப்படுத்தும் சொற்களையாவது உரியபடி ஆராயந்து அங்கீகாரத்தோடு செய்ய வேண்டும். முனைவர் கு. அரசேந்தினோடும் ஏனைய மொழி வல்லுநர்களோடும் தமிழேந்திக்கு இருக்கும் உறவு இவ்விடயம் நிச்சயம் நல்ல ஒரு திசையிலேயே போகவைக்கும் என நம்பலாம்.
அடுத்து, மக்களுக்கு இப்புதிய பெயர்கள் போய்ச்சேரும் வழிவகைகளை ஊக்குவித்தல். இன்று கொழும்பிலிருந்து வன்னிக்குட் போகும் பயணிகளுக்குத் திடீரென நிறையப் புதுச்சொற்களை எதிர்கொள்ளும் அனுபவம் ஏற்படும். அவர்களின் படிவங்கள் தூயதமிழ்ப் பெயர்களைக்கொண்டே இருக்கும். வரிசம்பந்தப்பட்ட பதிவுகளில் இருக்கும் பெயர்கள் அம்மக்கள் முன்னொருபோதும் கேட்டிராத சொற்கள். அவற்றை நிரப்புகையில் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குவதாகச் சொல்கிறார்கள். பிறகு அங்கிங்கு விசாரித்துத்தான் அவற்றை நிரப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் முன்னர் கேள்விப்படாத சொல்லாயினும் முக்கால்வாசியாவது அனுமானிக்கக் கூடியதாகவே இருக்கும். அவ்வளவுக்கு தமிழறிவு பின்தங்கியிருந்தால் என்ன செய்ய முடியும்? எனினும் அவர்களுக்கு அவற்றை விளங்கக் கூடியவாறு ஒரு பொதுஇடத்தில் பெரிதாக ஆங்கிலப்பெயர்களை எழுதிவிடலாம். படிவம் நிச்சயம் தமிழில்தான் இருக்க வேண்டும்.
கொழும்பிலிருக்கும் என் உறவுக்காரப் பெண்ணொருத்தி (11 வயது) முதன்முதல் வவுனியா கடந்து யாழ்ப்பாணம் போய் வந்திருந்தாள். அவளை நான் கொழும்பிற் சந்தித்தபோது சில சொற்களைச் சொல்லி அதன் பொருளைக் கேட்டாள். நானும் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது, அவள் ஏறத்தாள 20 சொற்களை எழுதி வைத்திருந்தாள். அனைத்தும் யாழ். பயணத்தின்போது அவள் ஓமந்தையில் அறிந்த புதிய தமிழ்ச் சொற்கள். இப்போது அவளுக்கு அந்தச் சொற்களின் அர்த்தம் புரியும். ஆக பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சில சொற்கள் மக்களைச் சென்றடைகிறது. இதற்காகவே அவர்களைக் கொஞ்சம் சிரமப்பட வைத்தால் என்ன? கஸ்டப்பட்டுப் படிக்கிறதுகள் மனசில நீண்ட நான் நிக்குமெல்லோ?
தமிழை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் கையில் வேண்டும். சும்மா அறவழிப்போராட்டம் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதிலெல்லாம் இந்தவிடயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எம்.ஜி.ஆர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நல்ல எடுத்துக்காட்டு. தமிழில்தான் பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெற முடியாது என்று சொல்லத்தக்க ஆட்சியதிகாரம் வேண்டும். அதைவிட்டு பலமாக வேருன்றிய மதங்களையும் எதிர்த்துக்கொண்டு மக்கள் திருந்துவார்கள் புரிந்து கொள்வார்கள் என்றெல்லாம் காத்திருக்கக் காலமில்லை. ஐம்பதாயிரம் தமிழ்ப்பெயர்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்கள். அதுமட்டுமே போதுமா என்ன? (பெயர் விடயத்தில் மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.)
பழகத்தொடங்குகையில் கடினமாக இருப்பதாகத் தெரியும். எதிர்ப்புகள் வரும். அவ்வளவுதான். பின் எல்லாமே இயல்புக்கு வந்துவிடும். அதுவே சரியாகியும்விடும். விவிலியத்தை வைத்தே நாம் இந்த உண்மையை அறியலாம்.
ஜீசஸ் என்பது இயேசு என்றும்,
ஜோசப் என்பது சூசை என்றும்,
மேரி என்பது மரியாள் என்றும்,
ஜோன் என்பது அருளப்பன் என்றும்,
போல் என்பது சின்னப்பன் என்றும்,
அன்ரனி என்பது அந்தோணி என்றும்,
தோமஸ் என்பது தோமையார் அல்லது தொம்மை என்றும்
இன்னுமின்னும் பல சொற்கள் தமிழ்வடிவத்துக்கு ஏற்றாற்போல் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இன்று அவ்வளவு சொற்களையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளவில்லையா? இன்றும் அந்தோணியாரும் தோமையாரும் மரியாளும் சூசையப்பரும் தானே எம்மிடையே பாவனையிலிருக்கும் சொற்கள்.
பாப்பரசரின் கொழும்பு வருகை வரைக்கும் அவரது பெயர் ஜோன் போல் என்பது எனக்குத் தெரியாது. இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் என்பது மட்டுமே நான் அறிந்து வைத்திருந்த பேர். எப்படி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தமிழ்ப்பேர் வைத்திருக்கலாம் என்ற அளவுகூட நான் சிந்திக்கவில்லை. கால ஓட்டத்தில் நாம் பழகிவிட்டோம். முற்றிலும் சம்பந்தமேயில்லாத ஒலிவடிவங்களைக்கூட எமக்குச் சொல்லித்தந்தபடி கிரகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம். ஆக மாற்றம் என்பது சாத்தியமே. எமக்கான சொல்லைப் புகுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பதும் சாத்தியமே. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இதற்குமேல், ஏன் தூயதமிழில் பேச வேண்டும்? எழுத வேண்டும்? பெயர் வைக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்னாற் பதில் சொல்ல முடியாது. பதில் தெரியாது என்றே வைத்துக்கொள்ளுங்கள். (பொடிச்சி பெயர்வைத்தல் சம்பந்தமாகத் தன்பதிவில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளா.)
---------------------------------------------------------------
அதிகம் கதைத்துவிட்டேன் போலுள்ளது. இத்தோடு முடிக்கிறேன். அதற்கு முதல் சம்பந்தமில்லாத ஒரு சுவையான சம்பவத்தைக்கூறி முடிக்கிறேன்.
என் தூரத்து உறவுக் குடும்பமொன்று யாழ் போயிருக்கிறது. ஏறத்தாள 15 வருடங்களாகக் கொழும்பிலேயே வசித்த குடும்பம் முதன்முதல் யாழ்ப்பாணம் போயினம். அந்த மனுசிக்கு வயது 50 வரும். போற நேரத்தில ஓமந்தைச் சோதனைச் சாவடியில வரிசம்பந்தமான விடயங்கள் கையாளுற இடத்தில (இதை ஆயப்பகுதி எண்டு புலிகள் சொல்லுவின) இவ படிவம் நிரப்பிறா. அது தமிழில கேள்வியளிருக்கிற படிவம். ஆனா இவ ஆங்கிலத்திலதான் நிரப்பிறா. அதப் பாத்த ஒருத்தர் இவவிட்ட தமிழிலயே நிரப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். இவ ஏலாது எண்டிருக்கிறா.
" தமிழ் வாசிச்சு விளங்கிறியள். ஏன் தமிழில நிரப்ப ஏலாது?"
எண்டு கேக்க, அவ சொன்னாவாம்:
"ஐசே! எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும். ஆனா எழுத வராது. அதுதான் இங்கிலீசில எழுதிறன்"
எண்டிருக்கிறா.அவரும் சரியெண்டு போட்டு அங்கிலப் படிவமொண்டக் குடுத்து இதில நிரப்புங்கோ எண்டு சொல்ல, இவவும் அந்தப் படிவத்திலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா.
வந்தவ சும்மா வந்திருக்கலாம். இஞ்சால வந்து நிண்ட மச்சாள்க்காரியிட்ட,
“அவங்கள் என்ன தமிழில எழுதட்டாம் எண்டு நிக்கினம். நான் ஏலாதெண்டிட்டன்.”
“பிறகென்னண்டு வந்தனியள். தமிழில எழுதிப்போட்டோ?”
“ச்சா… நானேன் எழுதப்போறன். நான் எழுதத்தெரியாதெண்டே நிண்டன். பிறகு அவங்களா இங்கிலீஸ் போமொண்டு தந்து இங்கிலீசிலயே எழுதுங்கோ எண்டு விட்டுட்டாங்கள். சேட்ட தானே அவைக்கு?”
எண்டு பெரிய வீறாப்பாச் சொல்லிக்கொண்டு இஞ்சால வந்து வாகனத்தில ஏற வெளிக்கிட, திரும்ப ஒரு பெடியன் வந்து அவவக் கூப்பிட்டுக்கொண்டு போயிருக்கிறான்.
போய் ஒரு 20 நிமிசம் கழிச்சு மனுசி வந்திருக்கு. என்ன நடந்து திருப்பி அவவக்கூட்டிக்கொண்டு போனாங்களோ தெரியாது. ஆனா அங்க இவவ தமிழிலயே படிவத்த நிரப்பித் தரச்சொல்லிப் போட்டாங்கள். அப்பிடியில்லயெண்டா நீங்கள் உங்கால போகேலாது எண்டு காட்டமாச் சொல்லிப்போட்டாங்கள். பத்து நிமிசம் இருந்து பாத்தவ பிறகு சரியெண்டு தமிழிலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா. எனக்கும் உது விளங்காத புதிராத்தான் இருக்கு. அவ கதைச்சத ஆரோ கேட்டிருக்க வேணும்.
யாழ்ப்பாணத்திலயிருந்து அவ வன்னியால திரும்பி வரேல. நேரா விமானத்தில கொழும்பு வந்திட்டா. இப்ப அவ வாற போற ஆக்களுக்கு ஒரு விசயத்தச் சொல்லிக்கொண்டிருக்கிறா.
“நீங்கள் புலியளிட்ட சரியான கவனமா இருக்கோணும். அவங்கள் மரங்களிலயெல்லாம் ஒட்டுக்கேக்கிற கருவியள் வச்சிருக்கிறாங்கள்.”
[size=18]
நன்றி வசந்தன்
சீன மெய்யியலறிஞர் (தத்துவஞானி) கன்பூசியசிடம் அவருடைய மாணவரொருவர், ''தேச ஆற்றுகையை ஒப்படைத்தால் தாங்கள் செய்யும் முதல் வேலை என்ன?"" என்றார்.
''நிச்சயமாக மொழியைச் சீர்திருத்துவதுதான்"
என்றார் கன்பூசியசு. அங்குக்குழுமி இருந்தோர் மிக்க வியப்படைந்து, ''மொழிக்கும் ஆற்றுகைக்கும் தொடர்பு என்னவோ? " எனக்கேட்டனர்.'
' மொழி, செம்மை பெறாவிடில் ஒருவர் எதைச்சொல்ல விரும்புகிறாரோ அதைக் கேட்கிறவர் தெளிவுற - ஐயந்திரிபற அறிந்துகொள்ளும் முறையிற் சொல்லமுடியாது. எண்ணப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்படவேண்டுமோ அது செய்யப்படமாட்டாது; நிறைவேற வேண்டுவது நிறைவேறாது போகும். ஒழுக்கமும் பண்பும் குறையும்; நீதியும் நெறிமுறையுந் திரியும்; மயக்கமும் குழப்பமும் உண்டாகும். எனவே, சொல்லப்படுவதில் ஐயம் எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்கவேண்டும். ஆகவே, மொழி செம்மையுற வேண்டுவது, எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது" என்றார் கன்பூசியசு.
வணக்கம்!
தமிழை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிச் சொல்வதாகச் சொன்னேன்.
வன்னியில், சரியான ஆராய்ச்சிகளின்றி ஒரு சொல்லை அவர்கள் முன்மொழிகிறார்களோ என்ற ஐயம் உண்டு. உண்மையில் அவர்களுக்கு வெளியுலகத்தோடு இப்போதுதான் தொடர்பு எற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரபூர்வமாய் வெளியிடப்பட்ட சில சொற்களைப் பற்றி அறியாமல் இப்படி தாங்கள் உருவாக்கிய அல்லது சரியென தாங்கள் நினைத்த ஒரு சொல்லை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகப் படுகிறது.
எடுத்துக்காட்டாக, 'பாண்' என்று நாம் அழைக்கும் (பலர், இதைப் பாண் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் புதிதாக ஒரு சொல் உருவாக்குவான் என்று கேட்கிறார்கள்) Bread ஐ 'வெதுப்பி' என்ற பெயரால் அவர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். ஆனால் சிறிதுகாலத்தின்பின்,
“வெதுப்பி என்பது தவறு, இன்னொன்றை வேக வைப்பதுதான் வெதுப்பி. பாணை வேக வைக்கும் போறணையைத்தான் வெதுப்பி என்று சொல்லலாம். பாணை வெதும்பி என்றுதான் சொல்வது சிறந்தது”
என்று ஒரு கருத்து வந்தது. எனக்கும் அக்கருத்து சரிபோலவே தெரிகிறது. ஆனாலும் எந்த மாற்றமுமின்றி வெதுப்பி என்பதே பாவனையிலிருந்து வருகிறது. அதுபோலவே, போக்கு வரவுக் கழகமா அல்லது போக்கு வரத்துக் கழகமா என்ற விவாதத்துக்குபின் இன்று போக்குவரவுக் கழகம் என்ற பேரே நிலைத்து விட்டது.
ஆகவே இனிமேல் நடைமுறைப்படுத்தும் சொற்களையாவது உரியபடி ஆராயந்து அங்கீகாரத்தோடு செய்ய வேண்டும். முனைவர் கு. அரசேந்தினோடும் ஏனைய மொழி வல்லுநர்களோடும் தமிழேந்திக்கு இருக்கும் உறவு இவ்விடயம் நிச்சயம் நல்ல ஒரு திசையிலேயே போகவைக்கும் என நம்பலாம்.
அடுத்து, மக்களுக்கு இப்புதிய பெயர்கள் போய்ச்சேரும் வழிவகைகளை ஊக்குவித்தல். இன்று கொழும்பிலிருந்து வன்னிக்குட் போகும் பயணிகளுக்குத் திடீரென நிறையப் புதுச்சொற்களை எதிர்கொள்ளும் அனுபவம் ஏற்படும். அவர்களின் படிவங்கள் தூயதமிழ்ப் பெயர்களைக்கொண்டே இருக்கும். வரிசம்பந்தப்பட்ட பதிவுகளில் இருக்கும் பெயர்கள் அம்மக்கள் முன்னொருபோதும் கேட்டிராத சொற்கள். அவற்றை நிரப்புகையில் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குவதாகச் சொல்கிறார்கள். பிறகு அங்கிங்கு விசாரித்துத்தான் அவற்றை நிரப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் முன்னர் கேள்விப்படாத சொல்லாயினும் முக்கால்வாசியாவது அனுமானிக்கக் கூடியதாகவே இருக்கும். அவ்வளவுக்கு தமிழறிவு பின்தங்கியிருந்தால் என்ன செய்ய முடியும்? எனினும் அவர்களுக்கு அவற்றை விளங்கக் கூடியவாறு ஒரு பொதுஇடத்தில் பெரிதாக ஆங்கிலப்பெயர்களை எழுதிவிடலாம். படிவம் நிச்சயம் தமிழில்தான் இருக்க வேண்டும்.
கொழும்பிலிருக்கும் என் உறவுக்காரப் பெண்ணொருத்தி (11 வயது) முதன்முதல் வவுனியா கடந்து யாழ்ப்பாணம் போய் வந்திருந்தாள். அவளை நான் கொழும்பிற் சந்தித்தபோது சில சொற்களைச் சொல்லி அதன் பொருளைக் கேட்டாள். நானும் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது, அவள் ஏறத்தாள 20 சொற்களை எழுதி வைத்திருந்தாள். அனைத்தும் யாழ். பயணத்தின்போது அவள் ஓமந்தையில் அறிந்த புதிய தமிழ்ச் சொற்கள். இப்போது அவளுக்கு அந்தச் சொற்களின் அர்த்தம் புரியும். ஆக பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சில சொற்கள் மக்களைச் சென்றடைகிறது. இதற்காகவே அவர்களைக் கொஞ்சம் சிரமப்பட வைத்தால் என்ன? கஸ்டப்பட்டுப் படிக்கிறதுகள் மனசில நீண்ட நான் நிக்குமெல்லோ?
தமிழை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் கையில் வேண்டும். சும்மா அறவழிப்போராட்டம் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதிலெல்லாம் இந்தவிடயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எம்.ஜி.ஆர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நல்ல எடுத்துக்காட்டு. தமிழில்தான் பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெற முடியாது என்று சொல்லத்தக்க ஆட்சியதிகாரம் வேண்டும். அதைவிட்டு பலமாக வேருன்றிய மதங்களையும் எதிர்த்துக்கொண்டு மக்கள் திருந்துவார்கள் புரிந்து கொள்வார்கள் என்றெல்லாம் காத்திருக்கக் காலமில்லை. ஐம்பதாயிரம் தமிழ்ப்பெயர்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்கள். அதுமட்டுமே போதுமா என்ன? (பெயர் விடயத்தில் மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.)
பழகத்தொடங்குகையில் கடினமாக இருப்பதாகத் தெரியும். எதிர்ப்புகள் வரும். அவ்வளவுதான். பின் எல்லாமே இயல்புக்கு வந்துவிடும். அதுவே சரியாகியும்விடும். விவிலியத்தை வைத்தே நாம் இந்த உண்மையை அறியலாம்.
ஜீசஸ் என்பது இயேசு என்றும்,
ஜோசப் என்பது சூசை என்றும்,
மேரி என்பது மரியாள் என்றும்,
ஜோன் என்பது அருளப்பன் என்றும்,
போல் என்பது சின்னப்பன் என்றும்,
அன்ரனி என்பது அந்தோணி என்றும்,
தோமஸ் என்பது தோமையார் அல்லது தொம்மை என்றும்
இன்னுமின்னும் பல சொற்கள் தமிழ்வடிவத்துக்கு ஏற்றாற்போல் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இன்று அவ்வளவு சொற்களையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளவில்லையா? இன்றும் அந்தோணியாரும் தோமையாரும் மரியாளும் சூசையப்பரும் தானே எம்மிடையே பாவனையிலிருக்கும் சொற்கள்.
பாப்பரசரின் கொழும்பு வருகை வரைக்கும் அவரது பெயர் ஜோன் போல் என்பது எனக்குத் தெரியாது. இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் என்பது மட்டுமே நான் அறிந்து வைத்திருந்த பேர். எப்படி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தமிழ்ப்பேர் வைத்திருக்கலாம் என்ற அளவுகூட நான் சிந்திக்கவில்லை. கால ஓட்டத்தில் நாம் பழகிவிட்டோம். முற்றிலும் சம்பந்தமேயில்லாத ஒலிவடிவங்களைக்கூட எமக்குச் சொல்லித்தந்தபடி கிரகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம். ஆக மாற்றம் என்பது சாத்தியமே. எமக்கான சொல்லைப் புகுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பதும் சாத்தியமே. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இதற்குமேல், ஏன் தூயதமிழில் பேச வேண்டும்? எழுத வேண்டும்? பெயர் வைக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்னாற் பதில் சொல்ல முடியாது. பதில் தெரியாது என்றே வைத்துக்கொள்ளுங்கள். (பொடிச்சி பெயர்வைத்தல் சம்பந்தமாகத் தன்பதிவில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளா.)
---------------------------------------------------------------
அதிகம் கதைத்துவிட்டேன் போலுள்ளது. இத்தோடு முடிக்கிறேன். அதற்கு முதல் சம்பந்தமில்லாத ஒரு சுவையான சம்பவத்தைக்கூறி முடிக்கிறேன்.
என் தூரத்து உறவுக் குடும்பமொன்று யாழ் போயிருக்கிறது. ஏறத்தாள 15 வருடங்களாகக் கொழும்பிலேயே வசித்த குடும்பம் முதன்முதல் யாழ்ப்பாணம் போயினம். அந்த மனுசிக்கு வயது 50 வரும். போற நேரத்தில ஓமந்தைச் சோதனைச் சாவடியில வரிசம்பந்தமான விடயங்கள் கையாளுற இடத்தில (இதை ஆயப்பகுதி எண்டு புலிகள் சொல்லுவின) இவ படிவம் நிரப்பிறா. அது தமிழில கேள்வியளிருக்கிற படிவம். ஆனா இவ ஆங்கிலத்திலதான் நிரப்பிறா. அதப் பாத்த ஒருத்தர் இவவிட்ட தமிழிலயே நிரப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். இவ ஏலாது எண்டிருக்கிறா.
" தமிழ் வாசிச்சு விளங்கிறியள். ஏன் தமிழில நிரப்ப ஏலாது?"
எண்டு கேக்க, அவ சொன்னாவாம்:
"ஐசே! எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும். ஆனா எழுத வராது. அதுதான் இங்கிலீசில எழுதிறன்"
எண்டிருக்கிறா.அவரும் சரியெண்டு போட்டு அங்கிலப் படிவமொண்டக் குடுத்து இதில நிரப்புங்கோ எண்டு சொல்ல, இவவும் அந்தப் படிவத்திலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா.
வந்தவ சும்மா வந்திருக்கலாம். இஞ்சால வந்து நிண்ட மச்சாள்க்காரியிட்ட,
“அவங்கள் என்ன தமிழில எழுதட்டாம் எண்டு நிக்கினம். நான் ஏலாதெண்டிட்டன்.”
“பிறகென்னண்டு வந்தனியள். தமிழில எழுதிப்போட்டோ?”
“ச்சா… நானேன் எழுதப்போறன். நான் எழுதத்தெரியாதெண்டே நிண்டன். பிறகு அவங்களா இங்கிலீஸ் போமொண்டு தந்து இங்கிலீசிலயே எழுதுங்கோ எண்டு விட்டுட்டாங்கள். சேட்ட தானே அவைக்கு?”
எண்டு பெரிய வீறாப்பாச் சொல்லிக்கொண்டு இஞ்சால வந்து வாகனத்தில ஏற வெளிக்கிட, திரும்ப ஒரு பெடியன் வந்து அவவக் கூப்பிட்டுக்கொண்டு போயிருக்கிறான்.
போய் ஒரு 20 நிமிசம் கழிச்சு மனுசி வந்திருக்கு. என்ன நடந்து திருப்பி அவவக்கூட்டிக்கொண்டு போனாங்களோ தெரியாது. ஆனா அங்க இவவ தமிழிலயே படிவத்த நிரப்பித் தரச்சொல்லிப் போட்டாங்கள். அப்பிடியில்லயெண்டா நீங்கள் உங்கால போகேலாது எண்டு காட்டமாச் சொல்லிப்போட்டாங்கள். பத்து நிமிசம் இருந்து பாத்தவ பிறகு சரியெண்டு தமிழிலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா. எனக்கும் உது விளங்காத புதிராத்தான் இருக்கு. அவ கதைச்சத ஆரோ கேட்டிருக்க வேணும்.
யாழ்ப்பாணத்திலயிருந்து அவ வன்னியால திரும்பி வரேல. நேரா விமானத்தில கொழும்பு வந்திட்டா. இப்ப அவ வாற போற ஆக்களுக்கு ஒரு விசயத்தச் சொல்லிக்கொண்டிருக்கிறா.
“நீங்கள் புலியளிட்ட சரியான கவனமா இருக்கோணும். அவங்கள் மரங்களிலயெல்லாம் ஒட்டுக்கேக்கிற கருவியள் வச்சிருக்கிறாங்கள்.”
[size=18]
நன்றி வசந்தன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

