05-02-2005, 02:58 PM
<img src='http://www.puthumai.com/images/stories/couples/vivek_aiswarya02.jpg' border='0' alt='user posted image'>
இந்தி நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யாராய்_விவேக் ஓபராய் திருமணம் செய்ய முடிவு டி.வி. பேட்டியில் அறிவிப்பு
பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராயும்_விவேக் ஓபராயும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். இந்த தகவலை டெலிவிஷன் பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்தார்.
ஐஸ்வர்யாராயுடன் காதல்
உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டு பின்னர் சினிமா உலகில் நுழைந்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். இவருக்கும் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த காதல் முறிந்தது.
அதன்பிறகு நடிகர் விவேக் ஓபராய்க்கும்_ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் உருவானது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் இந்திப் படங்களில் ஜோடியாக நடித்து உள்ளனர்.
திருமணம்
இந்த காதல் ஜோடி விரைவில் வாழ்க்கையிலும் இணைய இருக்கிறது.
ஐஸ்வர்யாராயைஇ தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஹஆஜ்தக்' டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் விவேக் ஓபராய் கூறினார். "2 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் ஏற்பட்டபோது சிலர் இந்த காதல் நீடிக்காது என்று கூறினார்கள். ஆனால் இப்போதும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என்றும் பேட்டியின் போது விவேக் ஓபராய் கூறினார்.
ஐஸ்வர்யாராய் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் சேர்ந்து நடிப்பீர்களா?
ஐஸ்வர்யாராயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்டதற்குஇ "படத்தில் எனக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் இயக்குனர்களுக்குத்தான் உள்ளது. நல்ல திரைக்கதையுடன் இயக்குனர்கள் என்னையும் ஐஸ்வர்யாராயையும் ஜோடியாக நடிக்க வைக்க முன்வந்தால் நடிப்போம்" என்றார்.
சல்மான்கானுடன் நீங்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்குஇ "தற்போது அவருடன் சேர்ந்து நடிக்கும் மனநிலையில் நான் இல்லை. ஆனால் வாழ்க்கை நீண்டது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது" என்று விவேக் ஓபராய் தத்துவார்த்தமாக பதில் அளித்தார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் உலகிலேயே மிகவும் அழகான பெண் ஐஸ்வர்யாராய்தான் என தான் கருதவில்லை என்றார். உலகி லேயே மிகவும் அழகான பெண் தனது தாயார் தான் என்றும் அடுத்து மதுபாலா என்றும் 3_வது இடம்தான் ஐஸ்வர்யா ராய்க்கு என்றும் கூறினார்.
சுனாமி நிவாரண பணி
தமிழ்நாட்டில் சுனாமி நிவாரண பணிகள் மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு விவேக் ஓபராய் பதில் அளிக்கையில்இ விளம்பரத்துக்காக தான் அந்த பணியை செய்யவில்லை என்றும் இந்த பிரச்சினையில் தனக்கும் தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கூறினார்.
"சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க அம்மா ஜெயலலிதா எனக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்தார். என்னுடன் பிரச்சினை இருந்தால் அவர் எனக்கு இந்த உதவியை செய்து இருப்பாரா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஓய்வு பெற்ற பிறகுதான் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளாக தான் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாக வும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து 3 மாதங்கள் தான் நிவாரண பணியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தினதந்தி-
சுட்டது.. புதுமை.கொம்
தம்பி மாருக்கு கொண்டாட்டமே
இந்தி நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யாராய்_விவேக் ஓபராய் திருமணம் செய்ய முடிவு டி.வி. பேட்டியில் அறிவிப்பு
பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யாராயும்_விவேக் ஓபராயும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளனர். இந்த தகவலை டெலிவிஷன் பேட்டியில் நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்தார்.
ஐஸ்வர்யாராயுடன் காதல்
உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டு பின்னர் சினிமா உலகில் நுழைந்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யாராய். இவருக்கும் பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த காதல் முறிந்தது.
அதன்பிறகு நடிகர் விவேக் ஓபராய்க்கும்_ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் உருவானது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இருவரும் இந்திப் படங்களில் ஜோடியாக நடித்து உள்ளனர்.
திருமணம்
இந்த காதல் ஜோடி விரைவில் வாழ்க்கையிலும் இணைய இருக்கிறது.
ஐஸ்வர்யாராயைஇ தான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஹஆஜ்தக்' டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் விவேக் ஓபராய் கூறினார். "2 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் இடையே காதல் ஏற்பட்டபோது சிலர் இந்த காதல் நீடிக்காது என்று கூறினார்கள். ஆனால் இப்போதும் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்" என்றும் பேட்டியின் போது விவேக் ஓபராய் கூறினார்.
ஐஸ்வர்யாராய் தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் சேர்ந்து நடிப்பீர்களா?
ஐஸ்வர்யாராயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்டதற்குஇ "படத்தில் எனக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் இயக்குனர்களுக்குத்தான் உள்ளது. நல்ல திரைக்கதையுடன் இயக்குனர்கள் என்னையும் ஐஸ்வர்யாராயையும் ஜோடியாக நடிக்க வைக்க முன்வந்தால் நடிப்போம்" என்றார்.
சல்மான்கானுடன் நீங்கள் இணைந்து நடிக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்குஇ "தற்போது அவருடன் சேர்ந்து நடிக்கும் மனநிலையில் நான் இல்லை. ஆனால் வாழ்க்கை நீண்டது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது" என்று விவேக் ஓபராய் தத்துவார்த்தமாக பதில் அளித்தார்.
மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் உலகிலேயே மிகவும் அழகான பெண் ஐஸ்வர்யாராய்தான் என தான் கருதவில்லை என்றார். உலகி லேயே மிகவும் அழகான பெண் தனது தாயார் தான் என்றும் அடுத்து மதுபாலா என்றும் 3_வது இடம்தான் ஐஸ்வர்யா ராய்க்கு என்றும் கூறினார்.
சுனாமி நிவாரண பணி
தமிழ்நாட்டில் சுனாமி நிவாரண பணிகள் மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு விவேக் ஓபராய் பதில் அளிக்கையில்இ விளம்பரத்துக்காக தான் அந்த பணியை செய்யவில்லை என்றும் இந்த பிரச்சினையில் தனக்கும் தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் கூறினார்.
"சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க அம்மா ஜெயலலிதா எனக்கு நிலம் ஒதுக்கிக் கொடுத்தார். என்னுடன் பிரச்சினை இருந்தால் அவர் எனக்கு இந்த உதவியை செய்து இருப்பாரா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஓய்வு பெற்ற பிறகுதான் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளாக தான் சமூக சேவையில் ஈடுபட்டு வருவதாக வும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுடன் சேர்ந்து 3 மாதங்கள் தான் நிவாரண பணியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தினதந்தி-
சுட்டது.. புதுமை.கொம்
தம்பி மாருக்கு கொண்டாட்டமே
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

