04-27-2005, 06:19 PM
<b>சந்திரமுகி' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இலங்கை தொழில் அதிபர் </b>
சுவிட்சர்லாந்து நாட்டி லிருந்து இலங்கை தொழில் அதிபர் ஒருவர் சந்திரமுகி படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கமிஷனரிடம் புகார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள சந்திரமுகி படம் கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயா ரித்துள்ளது. சந்திரமுகி வெளியானவுட னேயே அந்த படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளிவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி யும், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் திரை யிடப்பட்டுள்ளதால், அங்கிருந்து இன்டர்நெட் மூலமும் வெளி யாக வாய்ப்பு உள்ளது என்றும், இதை கண்காணித்து தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜிடம், சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார் பில் புகார் மனு கொடுக்கப்பட் டது. இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் நடராஜ் உத்தர விட்டார். சந்திரமுகி படத்தின் திருட்டு வி.சி.டி.க்களை போலீசார் ஏராளமாக தொடர்ந்து கைப் பற்றி வருகிறார்கள். இன்டர்நெட்டில் அந்தப் படம் வெளியாகிறதா? என்பதை கண்காணிக்க மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீ சாருக்கு கமிஷனர் உத்தரவிட் டார். துணை கமிஷனர் ராஜேந் திரன், உதவி கமிஷனர் பாலு ஆகி யோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் கண் காணித்து வந்தனர். அப்போது www.lankasri.com என்ற இணையதளத்தில் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. இலங்கை தொழில் அதிபர் இந்த இணைய தளத்தின் அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்தது. சிவஞான ஸ்ரீகேசன் என்ற இலங்கை தொழில் அதிபர் அந்த இணைய தளத்தை நடத்தி வருவதும் கண்டறியப்பட்டது. puffile.com என்ற இணைய தளம் மற்றும் 5 தமிழ் இணைய தளம் உள்பட மொத்தம் 14 வெளிநாட்டு இணையதளங் களில் சந்திரமுகி, மும்பை எக்ஸ் பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இவைகளை யும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடும் நடவடிக்கை இணையதளங்கள் மூலம் இன்டர்நெட்டில் இந்த தமிழ்ப் படங்களை யாராவது பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ``சைபர் கிரைம்" போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ``பிரவுசிங் சென்டர்கள்" எனப் படும் இன்டர்நெட் மையங்களில் சந்திரமுகி காட்டப்படுகிறதா? என்றும் ரகசியமாக கண்காணிக் கப்படுகிறது. ``வைரஸ்" நோய் இன்டர்நெட்டில் இதுபோன்ற தமிழ்ப் படங்களை பார்த்தால், அதை பார்க்கப் பயன்படும் கம்ப்யூட்டர்களை ``வைரஸ் நோய்" தாக்கும் அபாயம் உள் ளது என்றும் போலீசார் கூறி னார்கள்.
தினதந்தி
சுவிட்சர்லாந்து நாட்டி லிருந்து இலங்கை தொழில் அதிபர் ஒருவர் சந்திரமுகி படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கமிஷனரிடம் புகார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள சந்திரமுகி படம் கடந்த தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயா ரித்துள்ளது. சந்திரமுகி வெளியானவுட னேயே அந்த படத்தின் திருட்டு வி.சி.டி.க்கள் வெளிவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி யும், அமெரிக்கா, ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் திரை யிடப்பட்டுள்ளதால், அங்கிருந்து இன்டர்நெட் மூலமும் வெளி யாக வாய்ப்பு உள்ளது என்றும், இதை கண்காணித்து தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும், சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜிடம், சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார் பில் புகார் மனு கொடுக்கப்பட் டது. இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் நடராஜ் உத்தர விட்டார். சந்திரமுகி படத்தின் திருட்டு வி.சி.டி.க்களை போலீசார் ஏராளமாக தொடர்ந்து கைப் பற்றி வருகிறார்கள். இன்டர்நெட்டில் அந்தப் படம் வெளியாகிறதா? என்பதை கண்காணிக்க மத்திய குற்றப் பிரிவின் சைபர் கிரைம் போலீ சாருக்கு கமிஷனர் உத்தரவிட் டார். துணை கமிஷனர் ராஜேந் திரன், உதவி கமிஷனர் பாலு ஆகி யோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் கண் காணித்து வந்தனர். அப்போது www.lankasri.com என்ற இணையதளத்தில் சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. இலங்கை தொழில் அதிபர் இந்த இணைய தளத்தின் அலுவலகம் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்தது. சிவஞான ஸ்ரீகேசன் என்ற இலங்கை தொழில் அதிபர் அந்த இணைய தளத்தை நடத்தி வருவதும் கண்டறியப்பட்டது. puffile.com என்ற இணைய தளம் மற்றும் 5 தமிழ் இணைய தளம் உள்பட மொத்தம் 14 வெளிநாட்டு இணையதளங் களில் சந்திரமுகி, மும்பை எக்ஸ் பிரஸ், சச்சின் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இவைகளை யும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். கடும் நடவடிக்கை இணையதளங்கள் மூலம் இன்டர்நெட்டில் இந்த தமிழ்ப் படங்களை யாராவது பார்ப்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ``சைபர் கிரைம்" போலீ சார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ``பிரவுசிங் சென்டர்கள்" எனப் படும் இன்டர்நெட் மையங்களில் சந்திரமுகி காட்டப்படுகிறதா? என்றும் ரகசியமாக கண்காணிக் கப்படுகிறது. ``வைரஸ்" நோய் இன்டர்நெட்டில் இதுபோன்ற தமிழ்ப் படங்களை பார்த்தால், அதை பார்க்கப் பயன்படும் கம்ப்யூட்டர்களை ``வைரஸ் நோய்" தாக்கும் அபாயம் உள் ளது என்றும் போலீசார் கூறி னார்கள்.
தினதந்தி

