04-22-2005, 11:35 AM
தேச விரோதிகளின் பின்னணியில் இந்தியா
பிரவீனா
சுறுவில் காட்டுப் பகுதியான வண்ணத்துறையடி காட்டுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தேச விரோதிகள் பலியான சம்பவம் சிறிலங்காப் படைப் புலனாய்வுக்கு பெரும் பின்னடைவையும் சிறிலங்கா அரச படைகள் இது வரை காலமும் மூடிவந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையிலும் மற்றுமொரு மர்மம் மறைந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மர்மமாக மறைக்கப்பட்ட நான்கு சடலங்களும் இந்தியர்களது சடலங்களாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியானால் தேசவிரோதிகளிற்கு பின்னணியில் இந்தியா உள்ளதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.
தீவுச்சேனையில் தேசவிரோதக் கும்பல் முகாமிட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் கடந்த மாதம் பொலநறுவை மா வட்டத்திலுள்ள தீவுச்சேனைப் பகுதிக்குச் சென்று அங்கு தேசவிரோத ஆயுதக் குழு இருப்பதை புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காப் படைத்தரப்பின் பேச்சாளர் தீவுச்சேனையில் எந்த ஒரு ஆயுதக் குழுவும் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கவில்லையெனத் தெரிவித்திருந்த போதும் உண்மைகள் ஊடகங்கள் வாயிலாகக் கசியத் தொடங்கின.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த மட்டக்களப்பு மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஜோர்ன்சன் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பிரிதிநிதி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேசத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்த முயற்சித்த படைத்தரப்பு தீவுச்சேனைப் பகுதியில் கொட்டில்கள் அமைத்து படையினருடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுவை அவசர அவசரமாக இடமாற்றினர்.
பொலநறுவை மாவட்டம் திம்புலாகலப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அரலகன்வில பொலிஸ் பிரிவிலுள்ள சொறுவில் தமிழ்க் கிராமத்திற்கு தெற்காக ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள வண்ணத்துறை ஆற்றோரமாக இந்தக் கும்பலின் முகாம் அமைக்கப்பட்டது. மீண்டும் ஊடகவியலாளர்கள் உள்நுழைந்து இந்த ஆயுதக் கும்பல் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் வெளிவரக் கூடாது எனக் கருதியே வண்ணத்துறையடிக் காட்டுப் பகுதிக்கு இவர்கள் அனுப்பப்பட்டார்களாம்.
அத்துடன் படை முகாம்கள் சிங் கள ஊர்காவல் படையினர் சிங்கள கிராம மக்களுக்கும் இக்குழுவினர் தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என படை அதிகாரிகளால் அறிவூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காட்டுப் பகுதியில் ஐந்து கொட்டில்கள் இருந்துள்ளன. இவற்றில் காணப்பட்ட தடயங்களின் அடிப்படையில் 11 பேர் இருந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
அங்கு 11 சோடி பாதணிகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் யாரால் நடாத்தப்பட்டது. என்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் காணப்பட்டன.
ஒன்று தாக்குதல் அணி சென்று முகாமைத் தாக்கியிருக்கலாம். அல்லது உள்ளிருந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம். இதில் விடுதலைப்புலிகள் தரப்பில் இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தெரியப்பட்டதை அடுத்து உள்ளிருந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தாக்குதலின் போது ஐவரது சடலங்களே படைத்தரப்பினரால் மீட்கப்பட்டன. இருவர் காயமடைந்து பொலநறுவைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே.
எனினும் மீட்கப்பட்ட ஐவரது சடலங்களில் விஜயன் என்பவரது சடலமும் மர்மமான முறையில் மறைக்கப்பட்ட நான்கு பேரது சடலங்கள் பற்றியும் வாசகர்கள் அறிந்திருக்க வேண்டியதே இப்பத்தியின் நோக்கமாகும்.
இதில் உயிரிழந்த விஜயன் என அழைக்கப்படும் ராஜேந்திரன் பேரின்பநாதன் தேசவிரோதக்கும்பலான ஈ.என்.டி.எல்.எவ்ச் சேர்ந்தவர். திருமலையைச் சேர்ந்த இவர் ஈ.என்.டி.எல்.எவ் பின் முக்கிய சகாவாகக் கருதப்பட்டவர்.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழின விடுதலை விரோதச் சக்திகளை பலப்படுத்தி விடுதலைப்புலிகளை அழித்தொழித்து விடலாம் என இந்தியா கனவு கண்டது. இதற்கான நடவடிக்கையில் இந்திய ~~றோ|| முன்னின்று செயற்பட்டது.
இக்கால கட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை உருவாக்கினர்.
பரந்தன் ராஜன் தலைமையிலான இந்த ஈ.என்.டி.எல்.எவ் இந்திய ~~றோ||வின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது. இந்தியப்படை தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த கால கட்டத்தில் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு கிழக்கில் மேற்கொண்ட தேச விரோத அராஜகத்தனங்கள் சொல்லில் அடங்காதவை.
விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பைவிட தமிழ்த் தேச விரோதச் சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஒரு படையை உருவாக்கி மோதவிடுவதற்கான முயற்சிகள் ~றோ|வின் சதித்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட போது பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கிழக்கில் வீதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு இந்தியப் படை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் இவ்வாறு தமிழ் இளைஞர்களை கைது செய்வதிலும் கட்டாயப் பயிற்சி வழங்குவதிலும் ஈ.என்.டி.எல்.எவ் கடுமையாக நடந்து கொண்டது. தமிழ் மக்கள் ~~புள்ளை புடிக்கிறானுகள்|| என திட்டித் தீர்த்தனர். ~றோ|வின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ~~தமிழ்த் தேசிய இராணுவம்|| இந்தியப் படை வெளியேற்றதுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம்.
அதே காலகட்டத்தில் ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் புளொட்ää ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இந்தியப் படை யுடன் சேர்ந்து அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட போது கணிசமான தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து வலுச் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் படை வெளியேற்றத்தைத் தொடர்ந்து கிழக்கில் முக்கிய வர்த்தகர்கள் பிரமுகர்களிடம் பெரும் தொகைப் பணத்தை ஆயுதமுனையில் மிரட்டி பறித்த ஈ.என்.டி.எல்.எவ் இந்திய இராணுவத்துடன் வெளியேறி சேலத்தில் நிலை கொண்டது. அந்தக் காலகட்டத்தில் தான் சொறுவில் தாக்குதலில் பலியான விஜயனும் சென்றிருந்தார். பின்னர் ஏனைய தமிழ்க் குழுக்கள் சிறிலங்கா சிங்கள அரசியல் தலைமைகளுடனும்ää உறவுகளைப் பேணி இலங்கையில் காலூன்றிய போது ஈ.என்.டி.எல்.எவ் இந்தியாவிலிருந்து கொண்டு ~றோ|வுடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணி வந்தது. தற்போது கூட பலியான விஜயனின் குடும்பத்தினர் சேலத்தில் உள்ளனர்.
இத்தகைய நிலையில் சொறுவில் தாக்குதலின் பின்னர் கிடைக்கப்பெற்ற தடயங்களிலிருந்து மறைக்கப்பட்ட நான்கு சடலங்களும் இந்தியர்களுடைதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அங்கு மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து இந்திய வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு சாக்குகளில் துப்பாக்கி ரவைகள் இராணுவ உருமறைப்பு வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில் பல பதவியா இராணுவ அதிகாரிகளின் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களுடையது. மற்றும் சில புகைப்படங்கள் இராணுவ அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவையாகும்.
இவை எல்லாவற்றையும் நன்கு அவதானிக்கும் போது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்திய சிறிலங்கா அரசுகள் தேசவிரோத சக்திகளின் துணையுடன் மிகப்பெரிய சதி முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினையில் சுயலாப அரசியல் நலன்களுக்காக மூக்கை நுழைத்த இந்தியா இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்து தலையிடாக் கொள்கையைக் கடைப் பிடித்து வருகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு துன்பியல் நிகழ்வு என விடுதலைப்புலிகளால் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் எத்தகைய ஆரோக்கியமான சூழலையும் கொண்டிருக்கவில்லை.
மாறாக சிறிலங்கா அரசுக்கு போர்க்கப்பல்களையும் சிறிலங்காக் கடற்படையினருக்கு மேலதிக பயிற்சிகளையும் வழங்குவதிலேயே இந்திய அக்கறை காட்டி வருகிறது.
மறுபுறம் சமாதான முயற்சிகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையல் இனவாதத்தை கக்கி வரும் ஜே.வி.பி போன்ற பேரினவாதச் சக்திகள் இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில்தான் சொறுவில் வண்ணத்துறையடி ஆற்றோரமாக உள்ள தேசவிரோதிகளின் முகாமிலிருந்து மீட்கப்பட்ட இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறன.
சிறிலங்கா அரசிற்கு வழங்கும் நேரடி இராணுவ உதவியோடு ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் தேச விரோதச் சக்திகளைப் பலப்படுத்தி அதன் மூலம் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடாத்தி புலிகளுக்கு நெருக்குவாரங்களைக் கொடுக்கும் சதித்திட்டத்தில் இந்தியா ஈடுபடுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
போர்நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்றாண்டுகளாகின்றன. சமாதானப் பேச்சு வார்த்தைகள் சிங்கள ஆளும் தரப்பினால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தாலும் தமிழர் தாயகம் சிதைவடைந்து நலிவடைந்து கிடக்கிறது.
எனவே ஐரோப்பிய சமூகம் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருக்கும் நிலையில் பாரதம் பாராமுகமாக இருப்பது கவலைக்குரியது.
இலங்கையின் அண்டை நாடு என்ற வகையிலும் தமிழக மக்களின் உ ணர்வுகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது தார்மீக கடமையாகும் அல்லாதுவிடின் உபத்திரமாவது செய்யாதிருப்பது மேன்மை தரும்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
பிரவீனா
சுறுவில் காட்டுப் பகுதியான வண்ணத்துறையடி காட்டுப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தேச விரோதிகள் பலியான சம்பவம் சிறிலங்காப் படைப் புலனாய்வுக்கு பெரும் பின்னடைவையும் சிறிலங்கா அரச படைகள் இது வரை காலமும் மூடிவந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையிலும் மற்றுமொரு மர்மம் மறைந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் மர்மமாக மறைக்கப்பட்ட நான்கு சடலங்களும் இந்தியர்களது சடலங்களாக இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படியானால் தேசவிரோதிகளிற்கு பின்னணியில் இந்தியா உள்ளதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.
தீவுச்சேனையில் தேசவிரோதக் கும்பல் முகாமிட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. ஆங்கில ஊடகவியலாளர் ஒருவர் கடந்த மாதம் பொலநறுவை மா வட்டத்திலுள்ள தீவுச்சேனைப் பகுதிக்குச் சென்று அங்கு தேசவிரோத ஆயுதக் குழு இருப்பதை புகைப்படங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் சிறிலங்காப் படைத்தரப்பின் பேச்சாளர் தீவுச்சேனையில் எந்த ஒரு ஆயுதக் குழுவும் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கவில்லையெனத் தெரிவித்திருந்த போதும் உண்மைகள் ஊடகங்கள் வாயிலாகக் கசியத் தொடங்கின.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த மட்டக்களப்பு மாவட்ட போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஜோர்ன்சன் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுப் பிரிதிநிதி ஒருவர் தெரிவித்ததை அடுத்து அப்பிரதேசத்தை சுத்திகரித்து தெளிவுபடுத்த முயற்சித்த படைத்தரப்பு தீவுச்சேனைப் பகுதியில் கொட்டில்கள் அமைத்து படையினருடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழுவை அவசர அவசரமாக இடமாற்றினர்.
பொலநறுவை மாவட்டம் திம்புலாகலப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அரலகன்வில பொலிஸ் பிரிவிலுள்ள சொறுவில் தமிழ்க் கிராமத்திற்கு தெற்காக ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள வண்ணத்துறை ஆற்றோரமாக இந்தக் கும்பலின் முகாம் அமைக்கப்பட்டது. மீண்டும் ஊடகவியலாளர்கள் உள்நுழைந்து இந்த ஆயுதக் கும்பல் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் வெளிவரக் கூடாது எனக் கருதியே வண்ணத்துறையடிக் காட்டுப் பகுதிக்கு இவர்கள் அனுப்பப்பட்டார்களாம்.
அத்துடன் படை முகாம்கள் சிங் கள ஊர்காவல் படையினர் சிங்கள கிராம மக்களுக்கும் இக்குழுவினர் தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என படை அதிகாரிகளால் அறிவூட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் காட்டுப் பகுதியில் ஐந்து கொட்டில்கள் இருந்துள்ளன. இவற்றில் காணப்பட்ட தடயங்களின் அடிப்படையில் 11 பேர் இருந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
அங்கு 11 சோடி பாதணிகள் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் யாரால் நடாத்தப்பட்டது. என்பது தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் காணப்பட்டன.
ஒன்று தாக்குதல் அணி சென்று முகாமைத் தாக்கியிருக்கலாம். அல்லது உள்ளிருந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம். இதில் விடுதலைப்புலிகள் தரப்பில் இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தெரியப்பட்டதை அடுத்து உள்ளிருந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத்தாக்குதலின் போது ஐவரது சடலங்களே படைத்தரப்பினரால் மீட்கப்பட்டன. இருவர் காயமடைந்து பொலநறுவைவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே.
எனினும் மீட்கப்பட்ட ஐவரது சடலங்களில் விஜயன் என்பவரது சடலமும் மர்மமான முறையில் மறைக்கப்பட்ட நான்கு பேரது சடலங்கள் பற்றியும் வாசகர்கள் அறிந்திருக்க வேண்டியதே இப்பத்தியின் நோக்கமாகும்.
இதில் உயிரிழந்த விஜயன் என அழைக்கப்படும் ராஜேந்திரன் பேரின்பநாதன் தேசவிரோதக்கும்பலான ஈ.என்.டி.எல்.எவ்ச் சேர்ந்தவர். திருமலையைச் சேர்ந்த இவர் ஈ.என்.டி.எல்.எவ் பின் முக்கிய சகாவாகக் கருதப்பட்டவர்.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் தமிழின விடுதலை விரோதச் சக்திகளை பலப்படுத்தி விடுதலைப்புலிகளை அழித்தொழித்து விடலாம் என இந்தியா கனவு கண்டது. இதற்கான நடவடிக்கையில் இந்திய ~~றோ|| முன்னின்று செயற்பட்டது.
இக்கால கட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் புளொட் அமைப்பிலிருந்து பிரிந்தவர்கள் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பை உருவாக்கினர்.
பரந்தன் ராஜன் தலைமையிலான இந்த ஈ.என்.டி.எல்.எவ் இந்திய ~~றோ||வின் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது. இந்தியப்படை தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த கால கட்டத்தில் ஈ.என்.டி.எல்.எவ் அமைப்பு கிழக்கில் மேற்கொண்ட தேச விரோத அராஜகத்தனங்கள் சொல்லில் அடங்காதவை.
விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பைவிட தமிழ்த் தேச விரோதச் சக்திகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஒரு படையை உருவாக்கி மோதவிடுவதற்கான முயற்சிகள் ~றோ|வின் சதித்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட போது பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கிழக்கில் வீதிகளில் வைத்து கைது செய்யப்பட்டு இந்தியப் படை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தக் கால கட்டத்தில் இவ்வாறு தமிழ் இளைஞர்களை கைது செய்வதிலும் கட்டாயப் பயிற்சி வழங்குவதிலும் ஈ.என்.டி.எல்.எவ் கடுமையாக நடந்து கொண்டது. தமிழ் மக்கள் ~~புள்ளை புடிக்கிறானுகள்|| என திட்டித் தீர்த்தனர். ~றோ|வின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ~~தமிழ்த் தேசிய இராணுவம்|| இந்தியப் படை வெளியேற்றதுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகளாக்கப்பட்டு பின்னர் விடுதலைப்புலிகள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயம்.
அதே காலகட்டத்தில் ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் புளொட்ää ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அமைப்புக்கள் இந்தியப் படை யுடன் சேர்ந்து அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட போது கணிசமான தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து வலுச் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியப் படை வெளியேற்றத்தைத் தொடர்ந்து கிழக்கில் முக்கிய வர்த்தகர்கள் பிரமுகர்களிடம் பெரும் தொகைப் பணத்தை ஆயுதமுனையில் மிரட்டி பறித்த ஈ.என்.டி.எல்.எவ் இந்திய இராணுவத்துடன் வெளியேறி சேலத்தில் நிலை கொண்டது. அந்தக் காலகட்டத்தில் தான் சொறுவில் தாக்குதலில் பலியான விஜயனும் சென்றிருந்தார். பின்னர் ஏனைய தமிழ்க் குழுக்கள் சிறிலங்கா சிங்கள அரசியல் தலைமைகளுடனும்ää உறவுகளைப் பேணி இலங்கையில் காலூன்றிய போது ஈ.என்.டி.எல்.எவ் இந்தியாவிலிருந்து கொண்டு ~றோ|வுடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணி வந்தது. தற்போது கூட பலியான விஜயனின் குடும்பத்தினர் சேலத்தில் உள்ளனர்.
இத்தகைய நிலையில் சொறுவில் தாக்குதலின் பின்னர் கிடைக்கப்பெற்ற தடயங்களிலிருந்து மறைக்கப்பட்ட நான்கு சடலங்களும் இந்தியர்களுடைதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அங்கு மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து இந்திய வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இரண்டு சாக்குகளில் துப்பாக்கி ரவைகள் இராணுவ உருமறைப்பு வலைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. மற்றும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படங்களில் பல பதவியா இராணுவ அதிகாரிகளின் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தமிழ் இளைஞர்களுடையது. மற்றும் சில புகைப்படங்கள் இராணுவ அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவையாகும்.
இவை எல்லாவற்றையும் நன்கு அவதானிக்கும் போது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இந்திய சிறிலங்கா அரசுகள் தேசவிரோத சக்திகளின் துணையுடன் மிகப்பெரிய சதி முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினையில் சுயலாப அரசியல் நலன்களுக்காக மூக்கை நுழைத்த இந்தியா இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை அடுத்து தலையிடாக் கொள்கையைக் கடைப் பிடித்து வருகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு துன்பியல் நிகழ்வு என விடுதலைப்புலிகளால் தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அதனை ஏற்றுக் கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் எத்தகைய ஆரோக்கியமான சூழலையும் கொண்டிருக்கவில்லை.
மாறாக சிறிலங்கா அரசுக்கு போர்க்கப்பல்களையும் சிறிலங்காக் கடற்படையினருக்கு மேலதிக பயிற்சிகளையும் வழங்குவதிலேயே இந்திய அக்கறை காட்டி வருகிறது.
மறுபுறம் சமாதான முயற்சிகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையல் இனவாதத்தை கக்கி வரும் ஜே.வி.பி போன்ற பேரினவாதச் சக்திகள் இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று விரும்புகின்றனர். இவ்வாறான ஒரு நிலையில்தான் சொறுவில் வண்ணத்துறையடி ஆற்றோரமாக உள்ள தேசவிரோதிகளின் முகாமிலிருந்து மீட்கப்பட்ட இந்திய சாரதி அனுமதிப் பத்திரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறன.
சிறிலங்கா அரசிற்கு வழங்கும் நேரடி இராணுவ உதவியோடு ஈ.என்.டி.எல்.எவ் மற்றும் தேச விரோதச் சக்திகளைப் பலப்படுத்தி அதன் மூலம் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடாத்தி புலிகளுக்கு நெருக்குவாரங்களைக் கொடுக்கும் சதித்திட்டத்தில் இந்தியா ஈடுபடுகின்றதா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
போர்நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டு மூன்றாண்டுகளாகின்றன. சமாதானப் பேச்சு வார்த்தைகள் சிங்கள ஆளும் தரப்பினால் இழுத்தடிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில் ஆழிப்பேரலை அனர்த்தத்தாலும் தமிழர் தாயகம் சிதைவடைந்து நலிவடைந்து கிடக்கிறது.
எனவே ஐரோப்பிய சமூகம் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் கரிசனை கொண்டிருக்கும் நிலையில் பாரதம் பாராமுகமாக இருப்பது கவலைக்குரியது.
இலங்கையின் அண்டை நாடு என்ற வகையிலும் தமிழக மக்களின் உ ணர்வுகளுக்கும் மதிப்பளித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது தார்மீக கடமையாகும் அல்லாதுவிடின் உபத்திரமாவது செய்யாதிருப்பது மேன்மை தரும்.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

