04-21-2005, 03:22 AM
புதிய பாப்பரசர் - தொடரும் ஏமாற்றம்!
265வது பாப்பரசராக, 78 வயதான ஜோஸப் ரட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கூடிய 117 கர்தினல்களுள், ஜெர்மானியரான இவரே மூத்தவர். மற்ற அனைவரும் மறைந்த பாப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். மறைந்த இரண்டாம் ஜான் பால் அவர்கள் கர்தினலாக இருந்த காலத்திலேயே இவரும் கர்தினாலாக இருந்தவர்.
இவர் மறைந்த பாப் ஜான் பாலுக்கு நெருக்கமானவர். அவரின் பல்வேறு பழமைவாத முடிவுகளுக்கு பின்னணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள் குறித்து எவ்விதமான சமாதானத்திற்கும் இடங்கொடுக்காமல் எதிர்த்து வந்தவர். கத்தோலிக்க திருச்சபைக்குள் மாற்றத்தை எதிர்ப்பவர்களுள் முதன்மையானவர்.
பழமையை போற்றுபவராகவும், கட்டிக்காப்பவராகவும் அறியப்படுபவர்.
இவர் கடுமையாக எதிர்ப்பவைகள்:
1.கன்னியாஸ்திரிகளுக்கு குருமார் அந்தஸ்து.
2.பாதிரியார்களை திருமண பந்தந்திற்கு அணுமதிப்பது.
3.மீளமுடியாத கடும் நோயுற்றோரை இறக்க அனுமதிப்பது. (கருணை கொலை)
4.கருத்தடை.
5.கருக்கலைப்பு.
6.ஓரினச் சேர்க்கை.
7.திருமண பந்தமின்றி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல்.
8.ராக் இசை.
9.க்ளோனிங்.
10.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.
இந்த முறை கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் தென் அமெரிக்கா அல்லது ஆப்ரிக்க, ஆசிய நாட்டவர் பாப்பரசராக ஆக தேர்ந்தெடுக்க படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது பொய்யாக்கப்பட்டு மீண்டும் ஒரு ஐரோப்பியர் ஒருவரே வாடிகன் தலைமையை ஏற்கிறார்.
பல்வேறு மாற்றங்களுக்கான கோரிக்கைகள் கத்தோலிக்கர்களால் எழுப்பப்பட்டு வரும் இவ்வேலையில், ஒரு பழமைவாதியை பாப் ஆக தெரிவு செய்ததிலிருந்து, எவ்வித மாற்றங்களுக்கும் திருச்சபை தயாரில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏமாற்றமே என்ற போதும், பழமைவாதிகளுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுகிறது.
இப்போதைய கால கட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை எவ்வித மாற்றமும் இன்றி வழி நடத்தி செல்லக்கூடிய ஒருவர் தேவை என்பதால், 78 வயதான இவர் தெரிந்த்டுக்கப்பட்டுள்ளார். மிக அதிகமாக ஓர் 10 ஆண்டுகள் வரை பதவி வகிக்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே (வயது காரணமாக) இருக்குமென்பதால், மாற்றங்களை பற்றி இவர் காலத்துக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற சமாதானம் பழமைவாதிகளுக்கும், மாற்றம் வேன்டுவோருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவரது தேர்வுக்கு பிற்போக்கு கிருத்துவரான அமெரிக்க அதிபரின் ஆதரவும் இருந்ததாக தெரிகிறது. கிருத்துவ நாடுகளுக்கும், இஸ்லாமிய நாட்டு மக்களுக்கும் இடையே ஓர் சரியான புரிந்துணர்வு தேவைப்படும் இக்கால கட்டத்தில், ஒரு பழமைவாதி வாதிகனுக்கு தலைமை ஏற்பது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனபது போகப்போக தெரியும்.
நன்றி - நந்தலாலா
265வது பாப்பரசராக, 78 வயதான ஜோஸப் ரட்சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கூடிய 117 கர்தினல்களுள், ஜெர்மானியரான இவரே மூத்தவர். மற்ற அனைவரும் மறைந்த பாப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள். மறைந்த இரண்டாம் ஜான் பால் அவர்கள் கர்தினலாக இருந்த காலத்திலேயே இவரும் கர்தினாலாக இருந்தவர்.
இவர் மறைந்த பாப் ஜான் பாலுக்கு நெருக்கமானவர். அவரின் பல்வேறு பழமைவாத முடிவுகளுக்கு பின்னணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாற்றங்கள் குறித்து எவ்விதமான சமாதானத்திற்கும் இடங்கொடுக்காமல் எதிர்த்து வந்தவர். கத்தோலிக்க திருச்சபைக்குள் மாற்றத்தை எதிர்ப்பவர்களுள் முதன்மையானவர்.
பழமையை போற்றுபவராகவும், கட்டிக்காப்பவராகவும் அறியப்படுபவர்.
இவர் கடுமையாக எதிர்ப்பவைகள்:
1.கன்னியாஸ்திரிகளுக்கு குருமார் அந்தஸ்து.
2.பாதிரியார்களை திருமண பந்தந்திற்கு அணுமதிப்பது.
3.மீளமுடியாத கடும் நோயுற்றோரை இறக்க அனுமதிப்பது. (கருணை கொலை)
4.கருத்தடை.
5.கருக்கலைப்பு.
6.ஓரினச் சேர்க்கை.
7.திருமண பந்தமின்றி ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்தல்.
8.ராக் இசை.
9.க்ளோனிங்.
10.உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.
இந்த முறை கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் தென் அமெரிக்கா அல்லது ஆப்ரிக்க, ஆசிய நாட்டவர் பாப்பரசராக ஆக தேர்ந்தெடுக்க படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அது பொய்யாக்கப்பட்டு மீண்டும் ஒரு ஐரோப்பியர் ஒருவரே வாடிகன் தலைமையை ஏற்கிறார்.
பல்வேறு மாற்றங்களுக்கான கோரிக்கைகள் கத்தோலிக்கர்களால் எழுப்பப்பட்டு வரும் இவ்வேலையில், ஒரு பழமைவாதியை பாப் ஆக தெரிவு செய்ததிலிருந்து, எவ்வித மாற்றங்களுக்கும் திருச்சபை தயாரில்லை என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு ஏமாற்றமே என்ற போதும், பழமைவாதிகளுடன் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுகிறது.
இப்போதைய கால கட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையை எவ்வித மாற்றமும் இன்றி வழி நடத்தி செல்லக்கூடிய ஒருவர் தேவை என்பதால், 78 வயதான இவர் தெரிந்த்டுக்கப்பட்டுள்ளார். மிக அதிகமாக ஓர் 10 ஆண்டுகள் வரை பதவி வகிக்கும் சாத்தியக்கூறுகள் மட்டுமே (வயது காரணமாக) இருக்குமென்பதால், மாற்றங்களை பற்றி இவர் காலத்துக்கு பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற சமாதானம் பழமைவாதிகளுக்கும், மாற்றம் வேன்டுவோருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவரது தேர்வுக்கு பிற்போக்கு கிருத்துவரான அமெரிக்க அதிபரின் ஆதரவும் இருந்ததாக தெரிகிறது. கிருத்துவ நாடுகளுக்கும், இஸ்லாமிய நாட்டு மக்களுக்கும் இடையே ஓர் சரியான புரிந்துணர்வு தேவைப்படும் இக்கால கட்டத்தில், ஒரு பழமைவாதி வாதிகனுக்கு தலைமை ஏற்பது எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனபது போகப்போக தெரியும்.
நன்றி - நந்தலாலா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

