04-19-2005, 12:47 PM
இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சொ.கருணைலிங்கம் தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி
இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சொ.கருணைலிங்கம் அவர்கள்ää நிதியத்தின் 'ஈழத்திற்கான செயற்றிட்டம்" தொடங்கி 5 ஆவது நிறைவையொட்டி தினக்குரல் வார வெளியிட்டுக்காக விசேட செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார்.
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள ஆலங்களுக்கு முன்னோடியாக இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியம் தனது கோயில் வருமானத்தில் 1ஃ3 பகுதியை ஈழத்தில் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் பல்வேறு சமூக அபிவிருத்தி சார் திட்டங்களை வடக்குääகிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது.
2000ம் ஆண்டில் இருந்து இன்றுவரை இவர்கள் £675இ000 பவுன்ஸ் (12 கோடி) ஜ ஈழத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத் திட்டங்களுக்குட்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர். தாய் தந்தையரை யுத்தத்தின் கோர அழிவால் இழந்த சிறார்களை பராமரிக்கும் சிறுவர் இல்லங்கள் முதற்கொண்டுää அரச இயந்திரத்தின் அடக்குமுறைகளால் கணினி அறிவை பெற முடியாமல் தவிக்கும் பல கிராமப்புற மாணவர்களுக்கு வுஐவுயு உடன் இணைந்து இலவச கிராமிய பயிற்சி நிலையங்களை நிறுவிää நிதி உதவி செய்து வருகின்றனர். இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன்; நிதியத்தின் கடந்த கால செயற்பாடுகள் எதிர்கால திட்டங்கள் பற்றி திரு.கருணைலிங்கம் உடனான செவ்வி வருமாறுää
கேள்வி:- புலம்பெயர் நாடுகளில் ஆலயங்கள் இன்று நிதி கொழிக்கும் ஒரு முயற்சியாகவும்ää அதிகாரப் போட்டியின் மையமாகவும் அதேநேரம் தாயகத்தில் துயருற்று உதவி கோரும் உறவுகளுக்கு நம்பிக்கையின் சின்னமாகவும் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் கனக துர்க்கை அம்மன் ஆலய தோற்றம்ää இன்றைய நிலைமை தொடர்பாக கூற முடியுமா?
பதில்:- இலங்கையில் இருக்கும் கோயில்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதை நான் அண்மையில் இலங்கை வருகை தந்த போது அறிய முடிந்தது. இன அழிவுக்குட்பட்டு புலம் பெயர்ந்து உள்ள எம்மக்கள் மத்தியில் இவ்வாறான அதிகாரப் போட்டிகள்ää கோயில் நிர்வாகத்தை குடும்ப உறவினர்களிடையே மட்டுப்படுத்துவது வேதனைக்குரியது. ஆனால் இப்போது புலம்பெயர் நாடுகளில் இந்நிலை படிப்படியாக மாறி முன்னேற்றம் அடைந்து வருகின்றது. முன்பு கோயில்கள்ää ஆலய நிர்வாகத்திற்கு அடுத்து தமது முக்கிய குறிக்கோளாக கோயிலை சுற்றி சொத்துக்களை வாங்கி குவிப்பதை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தாயகத்தி;ல் தம் உறவுகளுக்கு நேரடியாக உதவிகளை செய்து வரும் நற்செயலை காணமுடிகிறது. இது புலம்பெயர் வாழ் இளம் சிறார்களிடம் இந்து மதம் பற்றி உயரிய கருத்தையும்ää மதம் சமூக மேம்பாட்டிற்கான ஒரு ஊக்கி என்ற கருத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கனக துர்க்கை அம்மன் நிதியம் ஆரம்பத்தில் தாயகத்திற்கு பணம் அனுப்ப முயன்ற வேளையில் பலத்த எதிர்ப்பை 25-30 வருடங்கட்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறியவர்களிடம் இருந்து பெற்றது. இது அவர்கள் தாயகத்தில் அனர்த்தங்களை நேரடியாக பார்க்காததால் ஏற்பட்ட ஒரு விளைவே. இவர்களுக்கு விளக்கமளித்துää பெரும்பான்மையான பக்தர்களின் ஆதரவுடன் தாயகத்திற்கு பணம் அனுப்பக் கூடிய வகையில் கோயில் நிர்வாக சட்ட அமைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினோம்.
தாயகத்தில் மக்களோடு மக்களாக சிறப்பாக செயற்றிட்டங்களை நிறைவேற்றி வந்த அமைப்புகளான ளுறுழுஇ வுஐவுயுஇ வுசுழு போன்ற அமைப்புக்களை பிரதான ~களமுனை நிறைவேற்று நிறுவனங்களாக" தெரிவு செய்தோம். இவற்றினூடும் இன்னும் பல சமூக சேவை நிறுவனங்களுடனும் இணைந்து எமது சமூக அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம்.
கேள்வி:- தாங்கள் தலைவராக பதவியேற்ற பின் செய்யப்பட்ட முக்கிய செயற்றிட்டங்கள் பற்றி கூறமுடியுமா?
பதில்:- கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டும் உரிய ஒரு அமைப்பாக இன்றி தான் சார்ந்த ஒரு சமூகத்தின் சமூக அபிவிருத்தி அமைப்பாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக விரும்பினேன். கடந்த காலங்களில் முக்கிய நிகழ்வாக கோயில் கும்பாபிஷேகம்ää தாயகத்திற்கு பணம் அனுப்பக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் இலங்கையில் கனக துர்க்கை அம்மன் இல்லங்கள்ää வெண்புறாவுக்கு 2 கோடி (கூ110இ000) நிதியுதவிää இலண்டனில் இலவச சமயபாட வகுப்புக்கள் மற்றும் வுஐவுயு உடனான 10 இலவச கணினி பயிற்சி நிலையங்கள் என்பனவற்றை கூறலாம்.
கேள்வி:- தாங்கள் கூறிய கனக துர்க்கை அம்மன் சிறுவர் இல்லங்கள் எங்கெங்கே இருக்கின்றன அதை எவ்வாறு பராமரித்து வருகின்றீர்கள்?
பதில்:- கனக துர்க்கை அம்மன் இல்லங்களை மட்டக்களப்புää அம்பாறைää மலையகம்ää திருகோணமலைää புத்தளம்ää வவுனியாää மற்றும் மன்னார் மாவட்டங்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட சமூக நிறுவனங்களின் உதவியுடன் நடாத்தி வருகின்றோம். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்;க ஊhயபெநவுhநசைடுகைந.ழசப என்ற இணையத்தளத்தை பராமரித்து வருகின்றோம்.
கேள்வி:- வுஐவுயு அமைப்பினரின் 100 கிராமிய திட்டத்தில் கனக துர்க்கை அம்மன் பங்காளியாக அமைத்துவரும் 'இலவச கணினி பயிற்சி நிலையங்கள் பற்றி?
பதில்:- இது ஒரு சிறப்பான செயற்திட்டம். ஆறிவியல் ரீதியாகவும் எம் தாயகம் முதல் நிலையை அடைய வேண்டும் என்பது தேசியத்தலைவரின் அவா. வடக்கு கிழக்கு மலையக வறிய சிறார்கட்கு கணினி ஒரு மறுக்கப்பட்ட உரிமை. இந்த வகையில் எம்மாலான பங்களிப்பாக வடக்குääகிழக்கு மலையகத்தில் 10 இலவச கணினி பயிற்சி நிலையங்கட்கு நிதியுதவி செய்து வருகின்றோம். ஆங்கில அறிவும் இன்றும் இன்று ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இதன் தேவையை அறிந்து யாழ்ப்பாணத்தில் அண்மையில் இலவச ஆங்கில நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இல் வேலைத்திட்டங்களில் வுஐவுயு வின் பணி பாராட்டுக்குரியது.
கேள்வி:- ஆழிப்பேரலை எம் தாயகத்தை சிதைத்த போது தங்கள் ஆலயம் உடனடி நிவாரண உதவிகள் மற்றும் இரண்டாம் கட்ட மீள்நிர்மான உதவிகளை வழங்கியதாக அறிய முடிகிறது. இது பற்றி?
பதில்:- எமது பக்தர்கள் உடனடியாக இந்த உதவிகளை வழங்கி இருந்தனர். முக்கியமாக இவற்றில் வுசுழு ஊடாக குறிப்பிடத்தக்க தொகையையும் வுஐவுயு ஊடாக 60இ2000 லீற்றர் கொள்ளளவு உடைய தண்ணீர் தாங்கிகள் கிழக்கிற்கு அனுப்பியது. 50 இலட்சம் ரூபா செலவில் இலவச படகு இயந்திர திருத்த நிலையம் வுஐவுயு ஊடாக முல்லை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வருகின்றது.
கேள்வி:- மிக குறுகிய காலத்தில் பல பயனுள்ள வேலைத்திட்டங்களை நிறைவேற்றியமை பற்றி அறியும் போது மகிழ்வாக உள்ளது. தாங்கள் இப்பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என ஏற்பட்டது? உங்களைப் பற்றி? கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தில் உள்ள உறுப்பினர்கள் அவர்களின் பங்களிப்பு பற்றி?
பதில்:- மொத்தத்தில் இது ஒரு குழு முயற்சி. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை உணர்ந்தோம். ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள்ää நம்பிக்கை நிதிய உறுப்பினர்கள். இளைஞர் பேரவை உறுப்பினர்கள்ää முத்தோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக ஒன்று கூடி இதில் ஈடுபட்டோம்.
கேள்வி:- கனக துர்க்கை அம்மன் எவ்வாறு அருள் தருப் தெய்வமாக இந்துக்களால் போற்றப்படுகின்றதோ அவ்வாறே இன்று கனக துர்க்கை அம்மன் இலவச கணினி பயிற்சி நிலையங்கள்ää இல்லங்கள் தேடல் அவா உள்ள கிராமப்புற மாணவர் சமுதாயத்தால்ää தன் வாழ்வின் விடிவிளக்காக நோக்கப்படுகின்றது. இனி வருகின்ற இரண்டு வருடங்களில் இவ் வேலைத்திட்டங்களை எவ்வாறு மெருகூட்ட உள்ளீர்கள்?
பதில்:- கிராமப்புறங்களில் அறிவுசார்ää தொழில்துறைசார் திறமைகளை மேம்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். நவீன முகாமைத்துவத்தில் “Pயசவiஉipயவiஎந ஆயயெபநஅநவெ” எனப்படும் எண்ணக்கரு வலுப்பெற்று வருகின்றது. உதவி செய்பவர்கள் தாம் உதவும் சமூக நல வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபெற விரும்புகின்றனர். ஒருவர் நிதிஉதவி செய்தால் அது இறுதியில் எங்கு சென்றதுää அது சரியான முறையில் செலவிடப்பட்டதா போன்ற விடயங்களை அறிவதில் ஆர்வமுடையதாக உள்ளனர். இது ஓர் யதார்த்தம். இந்த உண்மையை சிலர்; விளங்கிக்கொள்ள முயல்வதில்லை. வுpளங்கினாலும் விளங்கியது போன்று காட்டுவதில்லை.
உதாரணத்திற்கு ளுpழளெழச ய ஊhடைன என்ற திட்டம் மூலம்; உதவி செய்பவர்களுக்கும் சிறாருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துகின்றோம். ஒரு கிராமத்தில் இலவச கணினி பயிற்சி நிலையம் திறக்கும் போது அக்கிராமத்தை சேர்ந்த பக்கதர்களை ஈடுபடுத்துகின்றோம். இது நீண்டகாலப் போக்கில் செயற்திட்டங்களின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் என உறுதியாக நம்புகின்றோம்.
கேள்வி:- சாதாரணமாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மலையகத் தமிழர்களிடையே தமது சமூக நல வேலைத்திட்டங்களை செய்வது குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கனக துர்க்கை அம்மன் நிதியம் எவ்வாறு?
பதில்:- உண்மையில் கனக துர்க்கை அம்மன் நிதியம் தான் முதலில் மலையகத்தில் இரு சிறுவர் இல்லங்கள்ää இரு கணினி பயிற்சி நிலையங்களை ஒரு தையல் பயிற்சி நிலையம் அமைத்தது. மலையகத்தில் மேலும் பல செயத்திட்டங்களை மலையகத்தில் முன்னெடுக்க உள்ளோம்.
கேள்வி:- இறுதியாக எமது தினக்குரல் வாசகர்களுக்கு கூற விரும்புவது.?
பதில்:- புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்களிடையே நாம் முன்னூதாரணமாக உள்ளோம் என நம்புகின்றோம். எமது கோயில் கணக்கறிக்கைகள்ää வேலைத்திட்ட விபரங்கள் அறிவித்தல் பலகைää இணையத்தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளிப்படுத்தப்படுகிறது. இது சமூகத்தில் ஓர் வெளிப்படையாக இயங்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். மற்ற ஆலயங்களும் இந்த நடைமுறையை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். ஆலயங்கள் நாம் இறைவனை அமைதியாக வழிபடää நாம் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்தியில் உதவும் நிலையங்களாக இருக்க வேண்டும்.
செவ்வி கண்டவர் - உலகப்பிரகாசம் ஜெயதீபன்
நன்றி: தினக்குரல் (17.04.05)
இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சொ.கருணைலிங்கம் அவர்கள்ää நிதியத்தின் 'ஈழத்திற்கான செயற்றிட்டம்" தொடங்கி 5 ஆவது நிறைவையொட்டி தினக்குரல் வார வெளியிட்டுக்காக விசேட செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார்.
புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள ஆலங்களுக்கு முன்னோடியாக இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியம் தனது கோயில் வருமானத்தில் 1ஃ3 பகுதியை ஈழத்தில் தன்னார்வ தொண்டர் அமைப்புகளின் உதவியுடன் பல்வேறு சமூக அபிவிருத்தி சார் திட்டங்களை வடக்குääகிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது.
2000ம் ஆண்டில் இருந்து இன்றுவரை இவர்கள் £675இ000 பவுன்ஸ் (12 கோடி) ஜ ஈழத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத் திட்டங்களுக்குட்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர். தாய் தந்தையரை யுத்தத்தின் கோர அழிவால் இழந்த சிறார்களை பராமரிக்கும் சிறுவர் இல்லங்கள் முதற்கொண்டுää அரச இயந்திரத்தின் அடக்குமுறைகளால் கணினி அறிவை பெற முடியாமல் தவிக்கும் பல கிராமப்புற மாணவர்களுக்கு வுஐவுயு உடன் இணைந்து இலவச கிராமிய பயிற்சி நிலையங்களை நிறுவிää நிதி உதவி செய்து வருகின்றனர். இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன்; நிதியத்தின் கடந்த கால செயற்பாடுகள் எதிர்கால திட்டங்கள் பற்றி திரு.கருணைலிங்கம் உடனான செவ்வி வருமாறுää
கேள்வி:- புலம்பெயர் நாடுகளில் ஆலயங்கள் இன்று நிதி கொழிக்கும் ஒரு முயற்சியாகவும்ää அதிகாரப் போட்டியின் மையமாகவும் அதேநேரம் தாயகத்தில் துயருற்று உதவி கோரும் உறவுகளுக்கு நம்பிக்கையின் சின்னமாகவும் இருக்கின்றது. இந்தப் பின்னணியில் கனக துர்க்கை அம்மன் ஆலய தோற்றம்ää இன்றைய நிலைமை தொடர்பாக கூற முடியுமா?
பதில்:- இலங்கையில் இருக்கும் கோயில்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதை நான் அண்மையில் இலங்கை வருகை தந்த போது அறிய முடிந்தது. இன அழிவுக்குட்பட்டு புலம் பெயர்ந்து உள்ள எம்மக்கள் மத்தியில் இவ்வாறான அதிகாரப் போட்டிகள்ää கோயில் நிர்வாகத்தை குடும்ப உறவினர்களிடையே மட்டுப்படுத்துவது வேதனைக்குரியது. ஆனால் இப்போது புலம்பெயர் நாடுகளில் இந்நிலை படிப்படியாக மாறி முன்னேற்றம் அடைந்து வருகின்றது. முன்பு கோயில்கள்ää ஆலய நிர்வாகத்திற்கு அடுத்து தமது முக்கிய குறிக்கோளாக கோயிலை சுற்றி சொத்துக்களை வாங்கி குவிப்பதை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தாயகத்தி;ல் தம் உறவுகளுக்கு நேரடியாக உதவிகளை செய்து வரும் நற்செயலை காணமுடிகிறது. இது புலம்பெயர் வாழ் இளம் சிறார்களிடம் இந்து மதம் பற்றி உயரிய கருத்தையும்ää மதம் சமூக மேம்பாட்டிற்கான ஒரு ஊக்கி என்ற கருத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கனக துர்க்கை அம்மன் நிதியம் ஆரம்பத்தில் தாயகத்திற்கு பணம் அனுப்ப முயன்ற வேளையில் பலத்த எதிர்ப்பை 25-30 வருடங்கட்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறியவர்களிடம் இருந்து பெற்றது. இது அவர்கள் தாயகத்தில் அனர்த்தங்களை நேரடியாக பார்க்காததால் ஏற்பட்ட ஒரு விளைவே. இவர்களுக்கு விளக்கமளித்துää பெரும்பான்மையான பக்தர்களின் ஆதரவுடன் தாயகத்திற்கு பணம் அனுப்பக் கூடிய வகையில் கோயில் நிர்வாக சட்ட அமைப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினோம்.
தாயகத்தில் மக்களோடு மக்களாக சிறப்பாக செயற்றிட்டங்களை நிறைவேற்றி வந்த அமைப்புகளான ளுறுழுஇ வுஐவுயுஇ வுசுழு போன்ற அமைப்புக்களை பிரதான ~களமுனை நிறைவேற்று நிறுவனங்களாக" தெரிவு செய்தோம். இவற்றினூடும் இன்னும் பல சமூக சேவை நிறுவனங்களுடனும் இணைந்து எமது சமூக அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றோம்.
கேள்வி:- தாங்கள் தலைவராக பதவியேற்ற பின் செய்யப்பட்ட முக்கிய செயற்றிட்டங்கள் பற்றி கூறமுடியுமா?
பதில்:- கோயில்கள் வழிபாட்டுக்கு மட்டும் உரிய ஒரு அமைப்பாக இன்றி தான் சார்ந்த ஒரு சமூகத்தின் சமூக அபிவிருத்தி அமைப்பாக இருக்க வேண்டும் என நான் உறுதியாக விரும்பினேன். கடந்த காலங்களில் முக்கிய நிகழ்வாக கோயில் கும்பாபிஷேகம்ää தாயகத்திற்கு பணம் அனுப்பக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் இலங்கையில் கனக துர்க்கை அம்மன் இல்லங்கள்ää வெண்புறாவுக்கு 2 கோடி (கூ110இ000) நிதியுதவிää இலண்டனில் இலவச சமயபாட வகுப்புக்கள் மற்றும் வுஐவுயு உடனான 10 இலவச கணினி பயிற்சி நிலையங்கள் என்பனவற்றை கூறலாம்.
கேள்வி:- தாங்கள் கூறிய கனக துர்க்கை அம்மன் சிறுவர் இல்லங்கள் எங்கெங்கே இருக்கின்றன அதை எவ்வாறு பராமரித்து வருகின்றீர்கள்?
பதில்:- கனக துர்க்கை அம்மன் இல்லங்களை மட்டக்களப்புää அம்பாறைää மலையகம்ää திருகோணமலைää புத்தளம்ää வவுனியாää மற்றும் மன்னார் மாவட்டங்களில் அந்தந்தப் பகுதியில் உள்ள பதிவு செய்யப்பட்ட சமூக நிறுவனங்களின் உதவியுடன் நடாத்தி வருகின்றோம். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்;க ஊhயபெநவுhநசைடுகைந.ழசப என்ற இணையத்தளத்தை பராமரித்து வருகின்றோம்.
கேள்வி:- வுஐவுயு அமைப்பினரின் 100 கிராமிய திட்டத்தில் கனக துர்க்கை அம்மன் பங்காளியாக அமைத்துவரும் 'இலவச கணினி பயிற்சி நிலையங்கள் பற்றி?
பதில்:- இது ஒரு சிறப்பான செயற்திட்டம். ஆறிவியல் ரீதியாகவும் எம் தாயகம் முதல் நிலையை அடைய வேண்டும் என்பது தேசியத்தலைவரின் அவா. வடக்கு கிழக்கு மலையக வறிய சிறார்கட்கு கணினி ஒரு மறுக்கப்பட்ட உரிமை. இந்த வகையில் எம்மாலான பங்களிப்பாக வடக்குääகிழக்கு மலையகத்தில் 10 இலவச கணினி பயிற்சி நிலையங்கட்கு நிதியுதவி செய்து வருகின்றோம். ஆங்கில அறிவும் இன்றும் இன்று ஒரு முக்கிய தேவையாக உள்ளது. இதன் தேவையை அறிந்து யாழ்ப்பாணத்தில் அண்மையில் இலவச ஆங்கில நிலையம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். இல் வேலைத்திட்டங்களில் வுஐவுயு வின் பணி பாராட்டுக்குரியது.
கேள்வி:- ஆழிப்பேரலை எம் தாயகத்தை சிதைத்த போது தங்கள் ஆலயம் உடனடி நிவாரண உதவிகள் மற்றும் இரண்டாம் கட்ட மீள்நிர்மான உதவிகளை வழங்கியதாக அறிய முடிகிறது. இது பற்றி?
பதில்:- எமது பக்தர்கள் உடனடியாக இந்த உதவிகளை வழங்கி இருந்தனர். முக்கியமாக இவற்றில் வுசுழு ஊடாக குறிப்பிடத்தக்க தொகையையும் வுஐவுயு ஊடாக 60இ2000 லீற்றர் கொள்ளளவு உடைய தண்ணீர் தாங்கிகள் கிழக்கிற்கு அனுப்பியது. 50 இலட்சம் ரூபா செலவில் இலவச படகு இயந்திர திருத்த நிலையம் வுஐவுயு ஊடாக முல்லை மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசத்தின் அனுசரனையுடன் நடாத்தப்பட்டு வருகின்றது.
கேள்வி:- மிக குறுகிய காலத்தில் பல பயனுள்ள வேலைத்திட்டங்களை நிறைவேற்றியமை பற்றி அறியும் போது மகிழ்வாக உள்ளது. தாங்கள் இப்பணிகளில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என ஏற்பட்டது? உங்களைப் பற்றி? கனக துர்க்கை அம்மன் நம்பிக்கை நிதியத்தில் உள்ள உறுப்பினர்கள் அவர்களின் பங்களிப்பு பற்றி?
பதில்:- மொத்தத்தில் இது ஒரு குழு முயற்சி. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை உணர்ந்தோம். ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள்ää நம்பிக்கை நிதிய உறுப்பினர்கள். இளைஞர் பேரவை உறுப்பினர்கள்ää முத்தோர் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக ஒன்று கூடி இதில் ஈடுபட்டோம்.
கேள்வி:- கனக துர்க்கை அம்மன் எவ்வாறு அருள் தருப் தெய்வமாக இந்துக்களால் போற்றப்படுகின்றதோ அவ்வாறே இன்று கனக துர்க்கை அம்மன் இலவச கணினி பயிற்சி நிலையங்கள்ää இல்லங்கள் தேடல் அவா உள்ள கிராமப்புற மாணவர் சமுதாயத்தால்ää தன் வாழ்வின் விடிவிளக்காக நோக்கப்படுகின்றது. இனி வருகின்ற இரண்டு வருடங்களில் இவ் வேலைத்திட்டங்களை எவ்வாறு மெருகூட்ட உள்ளீர்கள்?
பதில்:- கிராமப்புறங்களில் அறிவுசார்ää தொழில்துறைசார் திறமைகளை மேம்படுத்தக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். நவீன முகாமைத்துவத்தில் “Pயசவiஉipயவiஎந ஆயயெபநஅநவெ” எனப்படும் எண்ணக்கரு வலுப்பெற்று வருகின்றது. உதவி செய்பவர்கள் தாம் உதவும் சமூக நல வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபெற விரும்புகின்றனர். ஒருவர் நிதிஉதவி செய்தால் அது இறுதியில் எங்கு சென்றதுää அது சரியான முறையில் செலவிடப்பட்டதா போன்ற விடயங்களை அறிவதில் ஆர்வமுடையதாக உள்ளனர். இது ஓர் யதார்த்தம். இந்த உண்மையை சிலர்; விளங்கிக்கொள்ள முயல்வதில்லை. வுpளங்கினாலும் விளங்கியது போன்று காட்டுவதில்லை.
உதாரணத்திற்கு ளுpழளெழச ய ஊhடைன என்ற திட்டம் மூலம்; உதவி செய்பவர்களுக்கும் சிறாருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துகின்றோம். ஒரு கிராமத்தில் இலவச கணினி பயிற்சி நிலையம் திறக்கும் போது அக்கிராமத்தை சேர்ந்த பக்கதர்களை ஈடுபடுத்துகின்றோம். இது நீண்டகாலப் போக்கில் செயற்திட்டங்களின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் என உறுதியாக நம்புகின்றோம்.
கேள்வி:- சாதாரணமாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மலையகத் தமிழர்களிடையே தமது சமூக நல வேலைத்திட்டங்களை செய்வது குறைவு என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. கனக துர்க்கை அம்மன் நிதியம் எவ்வாறு?
பதில்:- உண்மையில் கனக துர்க்கை அம்மன் நிதியம் தான் முதலில் மலையகத்தில் இரு சிறுவர் இல்லங்கள்ää இரு கணினி பயிற்சி நிலையங்களை ஒரு தையல் பயிற்சி நிலையம் அமைத்தது. மலையகத்தில் மேலும் பல செயத்திட்டங்களை மலையகத்தில் முன்னெடுக்க உள்ளோம்.
கேள்வி:- இறுதியாக எமது தினக்குரல் வாசகர்களுக்கு கூற விரும்புவது.?
பதில்:- புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆலயங்களிடையே நாம் முன்னூதாரணமாக உள்ளோம் என நம்புகின்றோம். எமது கோயில் கணக்கறிக்கைகள்ää வேலைத்திட்ட விபரங்கள் அறிவித்தல் பலகைää இணையத்தளம் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளிப்படுத்தப்படுகிறது. இது சமூகத்தில் ஓர் வெளிப்படையாக இயங்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும். மற்ற ஆலயங்களும் இந்த நடைமுறையை பின்பற்றினால் சிறப்பாக இருக்கும். ஆலயங்கள் நாம் இறைவனை அமைதியாக வழிபடää நாம் சார்ந்த சமூகத்தின் அபிவிருத்தியில் உதவும் நிலையங்களாக இருக்க வேண்டும்.
செவ்வி கண்டவர் - உலகப்பிரகாசம் ஜெயதீபன்
நன்றி: தினக்குரல் (17.04.05)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

