Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படியுனையழைப்பேன்....!!!
#4
சித்திரைப்புத்தாண்டு வந்தென்ன..! போயென்ன

நித்திரை விழித்துப் பட்சணங்கள் பலசெய்து
வெற்றிலை பாக்குடன் மங்கலச் சுடரேற்றி
முற்றிய நற் பழங்கள் புது மலர்களுடன் முகம் சிரித்துப்
பத்தரை மாற்றுத் தங்கமென அலங்கரித்து
பக்தியுடன் பரவசமாய் வரவேற்கும் நாளன்றோ
முன்னொருகால் நாம் கண்ட சித்திரைப் புத்தாண்டு.

சற்றொரு கால் நின்று இன்றைச் சாபநிலை சிந்தித்தால்.....
வைத்த கால் வைத்தபடி வாதம் விறைப்பெடுக்க
முற்று முழுதாகவே மூளையெலாம் பேதலிக்கும் -
நிலையல்லோ வந்திருக்கு!
உற்றவனை உற்றவளை பெற்றுப் பேறளித்தவளை
கற்றறிவு தந்தவனை கற்கையினைப் பெற்றவனை
பெற்றவனைப் பெற்றவளை என எல்லாம் இழந்தாச்சு.

மெத்தையிலே வளர்ந்தவர்கள் பற்றையிலே பதுங்குகின்றார்
புத்தம் புதுக் காரினிலே பள்ளிவழி சென்றவர்கள்
சித்தம் தெளிந்தின்று சீருடை தாம் தரித்து
மெத்தக் கவனமுடன் தேசம் காக்கின்றார்
மெத்தனமும் மெருகும் கொண்ட-இள மகளிரெல்லாம்
புத்தகமும் சத்தகமும் புறத்தேயெறிந்து விட்டுக்-களமாடுகின்றார்.

கம்பளிப் பேர்வையிலே இதமான சூட்டுடனே
நிம்மதியாய் நித்திரைக்குப் பத்திரமாய் மடிதேடும்,
சின்னக் குழந்தையெல்லாம் சேலைத் துண்டுகளின்
மூலைத் தலைப்பதனில் முடிச்சுண்டு முனகுகையில்-எம்
தானைத் தலைவனவன் தளராத உறுதியுடன்
சேனைப் படைநிறுத்திச் செயற்திறன் காட்டுகிறான்.

உணர்ந்து புரிந்தெழுந்து தேச இளைஞரெல்லாம்......,
உழன்று உழைத்து எங்கள் பாசப் பாட்டாளியெல்லாம்,
கறந்த மார் மறவாச் சின்னஞ் சிறார்களெல்லாம்,
வண்ணச் சிட்டுக்களாய் வலம் வரும் இளைஞியெல்லாம்,
வெள்ளைச் சீருடை தரித்த விடலைப் பருவமெல்லாம்
காளை முறுக்குடனே களமாட வருகின்றார்.

நாடு நலிகிறது நம் ஈழ மண்ணிதன் காடு அதிர்கிறது.
பாடு பாடாகப் பிஞ்சும் காயுமெனக் கொட்டிச் சரிகிறது.
வெட்டவெளிகளில் கொட்டு கொட்டென்று -
சனம் குந்திக் கிடக்கிறது.
எட்டக் கால் பதித்து எதிரி எம் எல்லைக்குள் -
முட்டக் கை வைக்கின்றது.
குட்டை குளங்களிலே குழந்தை குமருகளின் -
உடலம் சிதைகிறது.
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன போயென்ன

அனுப்பும் கடிதங்கள் மல்லாவி கடக்கவில்லை!
ஆசுப்பத்திரியில் மருந்துமில்லை இடமுமில்லை,
தூசிப் படலத்தால் தெரு மூடிக் கிடக்கிறது.
மாசிப் பனியென்ன பங்குனி வெயிலென்ன-
மாற்றவோர் ஆடையில்லை
பாசப் பிணைப்புடன் பரிவுக்கரத்துடன்
தேற்றவேர் தேசமில்லை-இங்கே
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன! போயென்ன!

ஆங்காங்கே ஈழமெங்கும் பட்டினிச் சாவு!
அரசாளும் அம்மணியோ ஆர்ப்பரிப்புக் கூத்து!
சிரசாலே சிங்களத்தைத் தொழுது சில குழுக்கள்!
மனசாலும் மண்-மானம் எண்ணாத புழுக்கள்! -நாம்
விசையோடு ஆர்த்தெழுந்து போராடும் வேளையிலே
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன! போயென்ன!

கனவெல்லாம் நனவாகிக் காரியங்கள் ஆகும் வரை
நிலமெல்லாம் நமதாகி இருப்புகளிற்கு ஏகும்வரை
வயலெல்லாம் மீண்டும் எங்கள் கால்பட்டுச் சிலிர்க்கும்வரை
மனமார எம் மழலைகள் மகிழ்ந்து குதித்தாடும்வரை
கயவர் கூடாரமெல்லாம் நாடொழிந்து போகும் வரை
கரிகாலன் கொடியிங்கு வரிப்புலியாய் ஆடும்வரை
சித்திரைப் புத்தாண்டு வந்தென்ன! போயென்ன!

<span style='font-size:25pt;line-height:100%'>தீட்சண்யன்</span>

நன்றி..........

சந்திரவதனா அவர்களுக்கு
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 04-13-2005, 07:56 PM
சித்திரைப்புத்தாண்டு வந்தென்ன..! போயென்ன - by KULAKADDAN - 04-13-2005, 11:26 PM
[No subject] - by kavithan - 04-14-2005, 12:13 AM
[No subject] - by hari - 04-14-2005, 06:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)