Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படியுனையழைப்பேன்....!!!
#1
<span style='font-size:25pt;line-height:100%'>எப்பிடியுனையழைப்பேன்....!!!</span>
சித்திரையே வந்து விட்டாயா?-உனை
சிரித்து மகிழ்ந்து வரவேற்க என்னால் முடியாது
முயன்று பார்க்கிறேன் முடிந்தால் உனை அழைக்க
முப்பது வருடங்கள் முட்டி மோதுகின்றதே எம்மினம்
எமதுரிமைகளைப் பெறுவதற்க்காய்-இன்று
ஆயிரம் நாட்கள் கடந்து செல்கிறது
நம் நாட்டில் சமாதானக் குரலொலித்து
நல்லது நடக்குமெனும் நம்பிக்கை எமக்கில்லை
என் வீட்டில் நான் நான் இல்லை-இன்று
என் வீடோ எதிரியன் பாசறை
விதியிலோ பெரிய முடகம்பி வளையம்
வேதனையுடன் சென்றன் வீடுவரை
வீதிவரை விரட்டியது காக்கி சட்டை
எவருக்கும் எழுதிடுவேன் என் கதையை
எப்படி எடுத்துரைப்பேன் என் நிலையை
பெற்ற பிள்ளையைக் காணவில்லை
நட்ட தென்னம்பிள்ளைக்கோ தலையில்லை
நான் வளர்ந்த மண்ணில் நான் இல்லை
நாட்டில் சமாதானம் வந்நதென்றார்
நடுச் சந்தியிலோர் பதாதை-அதில்
நிலக் கண்ணி வெடிக்கவனம் எச்சரிகை
காலை வைத்து விட்டால் காலில்லை
கடவுளுமே எமக்கு சாட்சியில்லை - அதற்க்குள்
கடல் அலைவேறு
எரிமலையாய் குழுறுது தமிழனிதயம்
ஏளனம் புரிகிறது சிங்கள துவேசம்
எப்படி அழைத்திடுவேன் சித்திரையே உனை
என்னிதயம் குளிர வாவென்று
எமக் கென்றோர் தேசம் கிடைக்கட்டும்
தேடியுனையழைப்பேன்- அப்போது
வா சித்திரையே அகமகிழ்ந்து...
அழைத்திடுவேன்.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
எப்படியுனையழைப்பேன்....!!! - by Nitharsan - 04-13-2005, 06:18 PM
[No subject] - by kuruvikal - 04-13-2005, 07:56 PM
[No subject] - by kavithan - 04-14-2005, 12:13 AM
[No subject] - by hari - 04-14-2005, 06:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)