04-09-2005, 02:07 AM
<img src='http://img116.exs.cx/img116/4868/nicebluebird5vg.jpg' border='0' alt='user posted image'>
<b>கவியல்ல இது ஒரு காவியம்
தேடியும் கிடைத்திடா
தேவதையாய் எண்ணியது
தேய்ந்து கட்டெறும்பான
கதை சொல்லும் ஜீவகாவியம்...!
ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு
தோப்பிலே குருவியொன்று
சிங்காரச் சிறகு விரிக்க
சுதந்திர வானம்....!
சுதந்திரமாய்க் குடியிருக்க
சின்னக் கூடு
சுமை தாங்கியாய்
சின்ன மாமரம்...!
சுந்தரக் கானமிசைக்க
தென்றல் போடும்
தக திமி தாளம்..!
இவை சேர
தப்பாமல் தன்பாட்டில்
வாழ்ந்தது மனதோடு
மகிழ்ச்சி பொங்க....!
அன்றொரு வேளை
அந்திசாயும் மாலை நெருங்க
அருமையாய் வசந்தம் பூத்திருக்க
பூமி மகள் அழகு காட்டியிருக்க
கண்ணினைக் காட்சிகள்
காந்தமாய்க் கவர
களம் ஏகியது குருவி....!
கண்கொள்ளாக் காட்சிகள்
விருந்துகள் படைக்க
வாயோடு வந்த கீதம் இசைத்துப்
பறக்குது சிட்டு
குதூகலித்துமே...!
இங்ஙனமாய்
இயற்கையின் நாயகன்
இன்புற்றிருக்க
குறுக்கே வந்த கருவண்டு
கவனம் இழுத்துச் செல்லுது..!
அதன் வழி
செல்லச் சொல்லுது மனம்
பாவம்...விதி வழி அறியாச் சிட்டும்
கூடிப் பறக்குது கருவண்டின் பின்னே...!
காட்சிகள் சிலது கடந்ததும்
வந்தது ஒரு வாசம்
வசந்தத்தின் பரிசாய்
தந்தது ஒரு மலர்...!
பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது....!
காலங்கள் கழிந்தது
மலரின் வேசம் கலையும்
காலமும் வந்தது...
பருவத்துச் சுருதி கூட்டி
பாடாய்ப்படுத்திய மலர்
அரை நொடிப் பொழுதில்
பாரா முகமாய்
அறியா உறவாய்
பத்தினிகள் வேசம் போட்டது...!
பதறிப்போனது சிட்டு
இது என்ன கோலம்...
கலிகாலத்து மங்கைக்கு ஒப்ப
மலரும் மாறிப்போனதோ
இல்ல...
புதிய உலகம் படைக்க
புறப்பட்டுவிட்டதோ மலர்...??!
சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
"Good Bye.....!"</b>
(யாவும் கற்பனை)
<b>கவியல்ல இது ஒரு காவியம்
தேடியும் கிடைத்திடா
தேவதையாய் எண்ணியது
தேய்ந்து கட்டெறும்பான
கதை சொல்லும் ஜீவகாவியம்...!
ஊரின் ஓரத்தில் ஒரு தோப்பு
தோப்பிலே குருவியொன்று
சிங்காரச் சிறகு விரிக்க
சுதந்திர வானம்....!
சுதந்திரமாய்க் குடியிருக்க
சின்னக் கூடு
சுமை தாங்கியாய்
சின்ன மாமரம்...!
சுந்தரக் கானமிசைக்க
தென்றல் போடும்
தக திமி தாளம்..!
இவை சேர
தப்பாமல் தன்பாட்டில்
வாழ்ந்தது மனதோடு
மகிழ்ச்சி பொங்க....!
அன்றொரு வேளை
அந்திசாயும் மாலை நெருங்க
அருமையாய் வசந்தம் பூத்திருக்க
பூமி மகள் அழகு காட்டியிருக்க
கண்ணினைக் காட்சிகள்
காந்தமாய்க் கவர
களம் ஏகியது குருவி....!
கண்கொள்ளாக் காட்சிகள்
விருந்துகள் படைக்க
வாயோடு வந்த கீதம் இசைத்துப்
பறக்குது சிட்டு
குதூகலித்துமே...!
இங்ஙனமாய்
இயற்கையின் நாயகன்
இன்புற்றிருக்க
குறுக்கே வந்த கருவண்டு
கவனம் இழுத்துச் செல்லுது..!
அதன் வழி
செல்லச் சொல்லுது மனம்
பாவம்...விதி வழி அறியாச் சிட்டும்
கூடிப் பறக்குது கருவண்டின் பின்னே...!
காட்சிகள் சிலது கடந்ததும்
வந்தது ஒரு வாசம்
வசந்தத்தின் பரிசாய்
தந்தது ஒரு மலர்...!
பார்வைகள் பரிமாற
மலரின் மாயமறியாது
சிட்டும் மயங்கியது
வந்த பாதை மறந்து
போதையில் வீழ்ந்தது..!
பருவத்து அழகு காட்டி
நயமாய் அழைத்து
வசமாக்கிக் கொண்டது மலர்..!
சிக்காரச் சிட்டும்
சிறைபட்டுப் போனது
தூய மனசும்
பாழ்பட்டுப் போனது....!
காலங்கள் கழிந்தது
மலரின் வேசம் கலையும்
காலமும் வந்தது...
பருவத்துச் சுருதி கூட்டி
பாடாய்ப்படுத்திய மலர்
அரை நொடிப் பொழுதில்
பாரா முகமாய்
அறியா உறவாய்
பத்தினிகள் வேசம் போட்டது...!
பதறிப்போனது சிட்டு
இது என்ன கோலம்...
கலிகாலத்து மங்கைக்கு ஒப்ப
மலரும் மாறிப்போனதோ
இல்ல...
புதிய உலகம் படைக்க
புறப்பட்டுவிட்டதோ மலர்...??!
சிங்காரச் சிட்டுக்கு
புத்தியில் உறைத்தது
சித்தம் தெளிய
சீராய்ச் சொன்னது
நீயாய் தேடாத வரை
"Good Bye.....!"</b>
(யாவும் கற்பனை)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

