04-05-2005, 10:03 PM
kuruvikal Wrote:அதேங்க..மனிதனுக்கு மட்டும் அற்ககோல் குடிச்சாத்தான் சந்தோசம்... இதே அற்ககோல...ஒரு பூச்சி மீது ஊற்றிப் பாருங்க...அது மயக்கமுற்று இறந்திடும்...அப்ப அற்ககோல் உடலுக்கு நன்மை என்றா...ஏன் அவை இறக்கின்றன....???!
ஒவ்வொரு உயிரினத்திற்கும் உட்கொள்வதற்கு ஒரு அளவு இருக்கின்றது, அந்த அளவை மீறும் போது அது உடலுக்கு கேடு விளைக்கிக்கின்றது. எவ்வளவு உட்கொள்ளலாம் என்ற அளவு உயிரினத்திற்கு உயிரினம் வேறுபடுகின்றது.
ஒரு பூச்சியினால் உட்கொள்ள கூடிய அற்ககோல் அளவு மிக மிக குறைவு, அதனாலேயே அற்ககோல் அளவு மிதமிஞ்சிய அளவு கூடியதால் பூச்சி இறக்கின்றது.
நாம் தேசிக்காய் யூஸ் (Lime Juice) குடிக்கின்றோம், அதையே ஒரு பூச்சி மீது ஊற்றி பாருங்கள், பூச்சியினால் தாங்க கூடிய அமில அளவை விட அதிகமாக இருப்பதால் பூச்சி இறந்துவிடும் அதை வைத்து தேசிக்காய் யூஸ் உடலுக்கு கூடவே கூடாது என்று சொல்ல முடியுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

