03-31-2005, 08:15 AM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39484000/jpg/_39484139_203b_terri_ap.jpg' border='0' alt='user posted image'>
மூளை பாதிக்கப்பட்ட பெண் Terri Schiavo.
அமெரிக்காவில்...இதய நோய் காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்னால் மூளை பாதிக்கப்பட்டு பகுதி செயலிழந்துள்ள ஒரு பெண் செயற்கையான ஊட்டல்கள் மூலம் வாழ்ந்து வருகிறார்...! நீண்ட காலமாகவே அவரின் கணவருக்கும் பெற்றோருக்கும் இடையில் அவர் தொடர்பில் ஒரு வழக்குப் போகிறது...! கணவர் சொல்கிறார் தன் மனைவியை இந்த நிலையில் தொடர்ந்து வைத்திருக்க தான் விரும்பவில்லை... அவருக்கான செயற்கை ஊட்டல்களை நிறுத்தி மரணத்துக்கு இட்டுச் செல்லும் படி...பெண்ணின் பெற்றோரோ...அவ்வாறு செய்ய வேண்டாம் அவளை இந்த நிலையில் இன்னும் வாழ விடுங்கள் என்று...!
சட்டப்படி இந்தப் பெண் ஒரு மனைவியாக கணவனின் பாதுகாப்பில் இருப்பதாகக் கொண்டு நீதிமன்றம் கணவனுக்குச் சார்பான தீர்ப்புக்களை அளித்து வருகின்றது...பெற்றோரும் மனித உரிமையார்வலர்களும் அதற்கு எதிராக நீதிமன்றதுக்குச் சென்று இந்த Terri Schiavo (41) எனும் பெண்ணின் வாழ்வை 15 வருடங்களாக நீட்டித்து வருகின்றனர்...! அதிபர் புஷ் உட்பட அமெரிக்கக் காங்கிரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது இவ்வழக்கு..என்பது குறிப்பிடத்தக்கது...!
உங்கள் பார்வையில்....எது நியாயம்..சொல்லுங்க...!
தகவல் - bbc.com
எங்கள் பார்வையில்... மனிதாபிமான முறையில் அந்தப் பெண்ணுக்கான வாழ்வுரிமையை அந்தக் கணவன் அளிப்பதே சிறந்தது..! அவருக்கு அது சிரமம் என்றால் அவளின் பராமரிப்புப் பொறுப்பை சட்ட ரீதியாக பெற்றோரிடம் கையளிக்க முடிவு செய்யலாம்...! அதை விடுத்து மரணத்துக்கு இட்டுச்செல் என்பது அவளுக்கு வாழ இருக்கும் சந்தர்ப்பத்தைப் பறிப்பது போன்றதே...!
மூளை பாதிக்கப்பட்ட பெண் Terri Schiavo.
அமெரிக்காவில்...இதய நோய் காரணமாக 15 ஆண்டுகளுக்கு முன்னால் மூளை பாதிக்கப்பட்டு பகுதி செயலிழந்துள்ள ஒரு பெண் செயற்கையான ஊட்டல்கள் மூலம் வாழ்ந்து வருகிறார்...! நீண்ட காலமாகவே அவரின் கணவருக்கும் பெற்றோருக்கும் இடையில் அவர் தொடர்பில் ஒரு வழக்குப் போகிறது...! கணவர் சொல்கிறார் தன் மனைவியை இந்த நிலையில் தொடர்ந்து வைத்திருக்க தான் விரும்பவில்லை... அவருக்கான செயற்கை ஊட்டல்களை நிறுத்தி மரணத்துக்கு இட்டுச் செல்லும் படி...பெண்ணின் பெற்றோரோ...அவ்வாறு செய்ய வேண்டாம் அவளை இந்த நிலையில் இன்னும் வாழ விடுங்கள் என்று...!
சட்டப்படி இந்தப் பெண் ஒரு மனைவியாக கணவனின் பாதுகாப்பில் இருப்பதாகக் கொண்டு நீதிமன்றம் கணவனுக்குச் சார்பான தீர்ப்புக்களை அளித்து வருகின்றது...பெற்றோரும் மனித உரிமையார்வலர்களும் அதற்கு எதிராக நீதிமன்றதுக்குச் சென்று இந்த Terri Schiavo (41) எனும் பெண்ணின் வாழ்வை 15 வருடங்களாக நீட்டித்து வருகின்றனர்...! அதிபர் புஷ் உட்பட அமெரிக்கக் காங்கிரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது இவ்வழக்கு..என்பது குறிப்பிடத்தக்கது...!
உங்கள் பார்வையில்....எது நியாயம்..சொல்லுங்க...!
தகவல் - bbc.com
எங்கள் பார்வையில்... மனிதாபிமான முறையில் அந்தப் பெண்ணுக்கான வாழ்வுரிமையை அந்தக் கணவன் அளிப்பதே சிறந்தது..! அவருக்கு அது சிரமம் என்றால் அவளின் பராமரிப்புப் பொறுப்பை சட்ட ரீதியாக பெற்றோரிடம் கையளிக்க முடிவு செய்யலாம்...! அதை விடுத்து மரணத்துக்கு இட்டுச்செல் என்பது அவளுக்கு வாழ இருக்கும் சந்தர்ப்பத்தைப் பறிப்பது போன்றதே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

