03-28-2005, 02:00 PM
shobana Wrote:வசம்பு அண்ணா இங்கு குருவிகளின் கவிதை பக்கத்தில் நான் அப்படி எழுதி இருக்ககூடாது தான்.. ஏன் குருவிகளின் கவிதையிலேயே பெண்கள் மாயக்காரர்கள் தான் என கூறப்பட்டு உள்ளது... அப்படி அனைத்துப்பெண்களையும் கூற முடியாது அதே போல அதே போல எல்லா ஆண்களும் ராமனும் இல்லை அதே போல இராவணனும் இல்லை
இதற்கு முதல் நான் இப்பக்கத்தில் எழுதியது ஒரு ஆணின் கருத்து அதாவது ஆதி அண்ணாவினுடைய கருத்து அதை ஒரு பெண் எழுதவில்லை ஆண் தான் எழுதினார்...
குருவிகள் மீண்டும் மன்னிக்கனும் உங்கள் கவிதைப்பக்கத்தில் இக்கருத்தை எழுதியதற்கு....
நன்றி
காதலனுக்கு காதலி மயக்கம் தருபவளாக... காதலிக்குக் காதலன் மயக்கம் தருபவனாக... இருப்பதுதான் இயல்பு... மனிதரில் மட்டுமன்றி காதல் உணர்வை வெளிப்படுத்தும் அனைத்து ஜீவன்களிலும்...! கனவென்றாலும் கொஞ்சம் இயற்கையாய் அமையும் இயல்புத் தன்மை இருக்கத்தான் செய்யும்...! அதற்காய் பெண்களையோ ஆண்களையோ எந்த வகையிலும் இக்கிறுக்கல் சாடவில்லை...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

