03-28-2005, 01:51 PM
இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்திய அரசு செய்யவே செய்யாது!
புதுடில்லித் தலைமை தெளிவாகத் தெரிவிப்பு
"இலங்கையோடு பாதுகாப்பு ஒப்பந்தமா? அப்படி ஒன்று இப்போதைக்கு இல்லவே இல்லை' - இவ்வாறு தெளிவாகத் தெரிவித்துவிட்டது இந்திய அரசுத் தலைமை.
இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றின் தலைவரிடமே இந்தி யப் பிரதமரும்இ பாதுகாப்பு அமைச்சரும் கடந்த வெள்ளியன்று இந்தத் திட்டவட்டமான முடிவைத் தெரிவித்தனர் என அறியவந்தது.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய் திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்இ அங்கிருந்து திரும்பிய பின்னர் இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப் பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என்ற சாரப் பட கருத்து வெளியிட்டு வந்தார்.
இது தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் குழப்பத்தையும் எரிச்சலையும் ஊட்டி யதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்திய மத்திய அரசில் கூட்ட மைத்து இணைந்துள்ள தமிழகக் கட்சி ஒன் றின் மூத்த தலைவர் ஒருவர் கடந்த வெள்ளி யன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச் சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து இது விட யம் குறித்து விளக்கம் கோரினார் எனத் தெரி கின்றது.
அப்போதேஇ இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இப்போது இட மில்லை என்ற தங்கள் நிலைப்பாட்டை அவர் கள் இருவரும் சம்பந்தப்பட்ட தமிழகத் தலை வருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர் என்று நம்பகரமாக அறியவந்தது.
அரசுக் கூட்டமைப்பில் உள்ள தமிழகக் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியாமல் இவ் விடயத்தில் ஒரு காய்நகர்த்தலும் இடம்பெறவே பெறாது என்றும் அவர்கள் இருவரும் தமிழகத் தலைவருக்கு உறுதி வழங்கினர் என்றும் கூறப் பட்டது.
தமக்கு இத்தகைய உறுதிமொழி அளிக் கப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்பை சம்பந்தப் பட்ட தலைவர் இன்று அல்லது நாளை உத்தி யோகபூர்வமாக வெளிப்படுத்துவார் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்திய அரசின் இந்த நிலைப்பாடு சம் பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப் பதாகவும் அறியவந்தது.
நன்றி: உதயன்
இந்திய அரசு செய்யவே செய்யாது!
புதுடில்லித் தலைமை தெளிவாகத் தெரிவிப்பு
"இலங்கையோடு பாதுகாப்பு ஒப்பந்தமா? அப்படி ஒன்று இப்போதைக்கு இல்லவே இல்லை' - இவ்வாறு தெளிவாகத் தெரிவித்துவிட்டது இந்திய அரசுத் தலைமை.
இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றின் தலைவரிடமே இந்தி யப் பிரதமரும்இ பாதுகாப்பு அமைச்சரும் கடந்த வெள்ளியன்று இந்தத் திட்டவட்டமான முடிவைத் தெரிவித்தனர் என அறியவந்தது.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய் திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்இ அங்கிருந்து திரும்பிய பின்னர் இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப் பந்தம் விரைவில் கைச்சாத்தாகும் என்ற சாரப் பட கருத்து வெளியிட்டு வந்தார்.
இது தென்னிந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் குழப்பத்தையும் எரிச்சலையும் ஊட்டி யதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இந்திய மத்திய அரசில் கூட்ட மைத்து இணைந்துள்ள தமிழகக் கட்சி ஒன் றின் மூத்த தலைவர் ஒருவர் கடந்த வெள்ளி யன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கையும் வெளிவிவகார அமைச் சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து இது விட யம் குறித்து விளக்கம் கோரினார் எனத் தெரி கின்றது.
அப்போதேஇ இலங்கை - இந்தியப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பேச்சுக்கே இப்போது இட மில்லை என்ற தங்கள் நிலைப்பாட்டை அவர் கள் இருவரும் சம்பந்தப்பட்ட தமிழகத் தலை வருக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர் என்று நம்பகரமாக அறியவந்தது.
அரசுக் கூட்டமைப்பில் உள்ள தமிழகக் கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரியாமல் இவ் விடயத்தில் ஒரு காய்நகர்த்தலும் இடம்பெறவே பெறாது என்றும் அவர்கள் இருவரும் தமிழகத் தலைவருக்கு உறுதி வழங்கினர் என்றும் கூறப் பட்டது.
தமக்கு இத்தகைய உறுதிமொழி அளிக் கப்பட்டிருப்பது பற்றிய அறிவிப்பை சம்பந்தப் பட்ட தலைவர் இன்று அல்லது நாளை உத்தி யோகபூர்வமாக வெளிப்படுத்துவார் என எதிர் பார்க்கப்படுகின்றது.
இந்திய அரசின் இந்த நிலைப்பாடு சம் பந்தப்பட்ட தரப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப் பதாகவும் அறியவந்தது.
நன்றி: உதயன்

