03-27-2005, 04:02 PM
yalie Wrote:மீண்டும் கவிஞரின் இன்னும் ஒரு கவிதையை இணைத்துள்ளதற்கு நன்றி ஹரி!
நம்பிக்கை தான் வாழ்வின் அத்திவாரம்! நம்பிக்கையோடு முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்கிறார் கவிஞர்! உண்மை தானே!
மிக விரைவில் கவிஞரின் 'பூவரசும் புலுமச்சிலந்திகளும்" (இது தான் தலைப்பு என்று கேள்வி) லண்டனில் வெளிவர இருக்கின்றது என்று அறிந்தேன்! உண்மை தானா?????
<b>லண்டனில் புதுவை இரத்தினதுரையின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா</b>
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற கவிதைத் தொகுப்பு நூல் லண்டனில் வெளியிடப்பட உள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு லண்டன் ரூற்ரிங் முத்துமாரி அம்மன் கோவில் சிவயோக மண்டபத்தில் இவ்விழா நடைபெறும்.
சட்டத்தரணி கவிஞர் ந. சிறீக்கந்தராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் லண்டன் முத்துமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் நா.சீவரத்தினம் நூலை வெளியிட பத்மசிறீ ர. கமலநாதக் குருக்கள் முதற்பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.
விரிவுரையார் ஆ.யோ.பற்றிமாகரன் சிறப்புரையும் ஊடகவியாலாளர் பொ.ஐங்கரநேசன் வெளியீட்டுரையும் நிகழ்த்துகின்றனர்.
பிபிசி தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம்ää ஊடகவியலாளர் ஏ.சி. தாசீசியஸ் மற்றும் எஸ். கருணானந்தராஜா ஆகியோர் மதிப்பீட்டுரை வழங்குவர்.
ரீ.ரீ.என். தமிழ் ஒளியின் பொ. கைலாசபதி நாதன் வரவேற்புரையாறுகிறார்.
நிகழ்வின் இறுதியில் கலை நிகழ்வுகள் நடைபெறும்.
நன்றி புதினம்

