03-22-2005, 03:04 PM
இன்றும் இணையப்பக்கத்தில் கட்டுரை ஒன்றை வடிவமைக்கும்போது செய்யப்படக்கூடிய மேலதிக விடயங்களை பார்ப்போம்.
<b>1. பந்தியில் indent விடுதல்</b>
பந்திகளில் முதலாவது வாக்கியத்தை வலதுபுறமாக குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்த்துவதே indent ஆகும். இதனை செய்வதற்கு style எனும் பண்பை (attribute) பயன்படுத்தலாம்.
<p style="text-indent: 25 px">
என எழுதுவதன் மூலம் அப்பந்தியின் முதலாவது வாக்கியத்தை 25 பிக்ஸல் (pixel) தூரத்திற்கு நகர்த்தலாம்.
style பண்பை பயன்படுத்துவதன் மூலம் பல அழகுபடுத்தல்களை இணையப்பக்கத்தில் செய்யலாம். இது பற்றி பின்னர் தனியாகவும் விளக்கப்படும்.
<b>2. முதல் எழுத்து:</b> கட்டுரை ஒன்றின் முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுதப்படுவதை கண்டிருப்பீர்கள். அதற்கும் குறித்த மீயுரை பயன்படுத்தவேண்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது பின்னர் நான் சொல்கிறேன்.
<b>3. <pre> மூலகம்</b><body> பகுதிக்குள் கீழே குறிப்பிட்ட மீயுரையை இட்டு பரிசோதித்து பாருங்கள்.
<pre>
1234
789 +
---------
2023
---------
</pre>
இவ்வாறு நாங்கள் தட்டெழுதுவது போலவே இணையப்பக்கத்திலும் தோன்ற செய்வதற்கு இம்மூலகம் பயன்படுகிறது.
<b>
4. ஒரு பந்தியின் நான்கு பக்கங்களிலும்</b> எவ்வளவு இடைவெளி விடப்படவேண்டும் என்பதும் அழகுபடுத்தலில் முக்கியமாகும். அதற்கு பின்வரும் மீயுரையை பயன்படுத்தவும்.
<p style="margin-bottom: 50 px; margin-top: 50 px; margin-right:50 px; margin-left: 50 px;">
இங்கு குறிப்பிட்ட அளவுகளை உதாரணமாக 50 இலிருந்து 100 ஆக தனித்தனியே மாற்றி விளைவுகளை அவதானியுங்கள்.
<b>
5.
மூலகம்</b>
பந்திகளுக்கு இடையே கிடைக்கோடுகளை ஏற்படுத்த பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும்போதும் முடிவு மூலகம் தேவையில்லை.
<hr width="75%" color="green" >
இங்கு கிடைக்கோட்டின் அகலமானது 75% வீதம் என குறிக்கப்படுவதன் மூலம் எந்த அகலமுள்ள கணனித்திரையிலும் 75% அகலத்துக்கு கிடைக்கோடு வரையப்படும்.
<b>6. <div> மூலகம்</b>
முன்னர் கட்டுரை ஒன்றையோ பந்தி ஒன்றையோ வடிவமைக்கும் போது ஒவ்வொரு பந்திக்கும் தனித்தனியே அழகுபடுத்தலை செய்திருந்தோம். தற்போது குறிப்பிட்ட ஒரு பக்கத்தின் பகுதி ஒன்றை எவ்வாறு அழகுபடுத்துவது என்று பார்ப்போம். அதற்கு <div> எனும் மூலகம் பயன்படுத்தப்படுகிறது.
இவ் மூலகத்தில் மூலகத்தில் பயன்படுத்திய அனைத்து பண்புமாற்றங்களையும் செய்துபாருங்கள்.
மீண்டும் அடுத்ததொடரில் சந்திப்போம். உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் அறியதாருங்கள்.
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்
<b>1. பந்தியில் indent விடுதல்</b>
பந்திகளில் முதலாவது வாக்கியத்தை வலதுபுறமாக குறிப்பிட்ட தூரத்திற்கு நகர்த்துவதே indent ஆகும். இதனை செய்வதற்கு style எனும் பண்பை (attribute) பயன்படுத்தலாம்.
<p style="text-indent: 25 px">
என எழுதுவதன் மூலம் அப்பந்தியின் முதலாவது வாக்கியத்தை 25 பிக்ஸல் (pixel) தூரத்திற்கு நகர்த்தலாம்.
style பண்பை பயன்படுத்துவதன் மூலம் பல அழகுபடுத்தல்களை இணையப்பக்கத்தில் செய்யலாம். இது பற்றி பின்னர் தனியாகவும் விளக்கப்படும்.
<b>2. முதல் எழுத்து:</b> கட்டுரை ஒன்றின் முதல் எழுத்தை பெரிய எழுத்தாக எழுதப்படுவதை கண்டிருப்பீர்கள். அதற்கும் குறித்த மீயுரை பயன்படுத்தவேண்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அல்லது பின்னர் நான் சொல்கிறேன்.
<b>3. <pre> மூலகம்</b><body> பகுதிக்குள் கீழே குறிப்பிட்ட மீயுரையை இட்டு பரிசோதித்து பாருங்கள்.
<pre>
1234
789 +
---------
2023
---------
</pre>
இவ்வாறு நாங்கள் தட்டெழுதுவது போலவே இணையப்பக்கத்திலும் தோன்ற செய்வதற்கு இம்மூலகம் பயன்படுகிறது.
<b>
4. ஒரு பந்தியின் நான்கு பக்கங்களிலும்</b> எவ்வளவு இடைவெளி விடப்படவேண்டும் என்பதும் அழகுபடுத்தலில் முக்கியமாகும். அதற்கு பின்வரும் மீயுரையை பயன்படுத்தவும்.
<p style="margin-bottom: 50 px; margin-top: 50 px; margin-right:50 px; margin-left: 50 px;">
இங்கு குறிப்பிட்ட அளவுகளை உதாரணமாக 50 இலிருந்து 100 ஆக தனித்தனியே மாற்றி விளைவுகளை அவதானியுங்கள்.
<b>
5.
மூலகம்</b>
பந்திகளுக்கு இடையே கிடைக்கோடுகளை ஏற்படுத்த பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்தும்போதும் முடிவு மூலகம் தேவையில்லை.
<hr width="75%" color="green" >
இங்கு கிடைக்கோட்டின் அகலமானது 75% வீதம் என குறிக்கப்படுவதன் மூலம் எந்த அகலமுள்ள கணனித்திரையிலும் 75% அகலத்துக்கு கிடைக்கோடு வரையப்படும்.
<b>6. <div> மூலகம்</b>
முன்னர் கட்டுரை ஒன்றையோ பந்தி ஒன்றையோ வடிவமைக்கும் போது ஒவ்வொரு பந்திக்கும் தனித்தனியே அழகுபடுத்தலை செய்திருந்தோம். தற்போது குறிப்பிட்ட ஒரு பக்கத்தின் பகுதி ஒன்றை எவ்வாறு அழகுபடுத்துவது என்று பார்ப்போம். அதற்கு <div> எனும் மூலகம் பயன்படுத்தப்படுகிறது.
இவ் மூலகத்தில் மூலகத்தில் பயன்படுத்திய அனைத்து பண்புமாற்றங்களையும் செய்துபாருங்கள்.
மீண்டும் அடுத்ததொடரில் சந்திப்போம். உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் அறியதாருங்கள்.
என்றும் அன்புடன்
தமிழ்வாணன்

