03-22-2005, 03:36 AM
குறும்பன் எழுதியது:
பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...
----இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...
-- இடுப்பில் இழுத்து முடிந்த
வழுக்கி வழுக்கி விழும் காற்சட்டையில்
தட்டிக் கை துடைத்து
உதறிய போது அன்று
எனக்குத் தெரியவில்லை
இந்த மண்ணின் அருமை.
இன்று அன்னிய மண்ணில்
புழுவாய் நெளிகையில்
விரலிடுக்கிலிருந்து விழுந்த மண்
உயிரிழையில் ஒட்டியுள்ளதை
நானும் உணர்கின்றேன்!!
என் மண்ணே உனைப்பிரிந்து
ஆண்டு பல ஆனால் என்ன??
இன்னும் என் நாசிகளில்
அதே புழுதி வாசம்!!
கோவில் திருவிழாவும்
குரும்பையில் நாம் கட்டிய தேரும்
வேலிச் சந்து கடந்து
விளாத்தியில் ஏறியதும்
முருங்கை மரத்தில் குடியிருந்த
மயிர் கொட்டிக்குப் பயந்ததும்
முள்முருக்குப் பூவைப் பார்த்து
வியந்து வாய் பிளந்ததும்
ஆடு குட்டி போட்ட போது
ஆடிப்பாடி மகிழ்ந்ததும்
நாடு விட்டு வந்த போதும்
கூடவே வந்த நினைவுகள்!
நெஞ்சுக் கூட்டுக்குள்
அடிக்கடி வந்து மோதும்
இந்த மலரும் நினைவுகளே
இன்றைய என் இருப்பின்
அத்திவாரம்!!!
இனி எப்போது நானுன்னை
விரலிலெடுத்து விழியில் காண்பேன்
இன்னருமை மண்ணே!!!
பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...
----இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...
-- இடுப்பில் இழுத்து முடிந்த
வழுக்கி வழுக்கி விழும் காற்சட்டையில்
தட்டிக் கை துடைத்து
உதறிய போது அன்று
எனக்குத் தெரியவில்லை
இந்த மண்ணின் அருமை.
இன்று அன்னிய மண்ணில்
புழுவாய் நெளிகையில்
விரலிடுக்கிலிருந்து விழுந்த மண்
உயிரிழையில் ஒட்டியுள்ளதை
நானும் உணர்கின்றேன்!!
என் மண்ணே உனைப்பிரிந்து
ஆண்டு பல ஆனால் என்ன??
இன்னும் என் நாசிகளில்
அதே புழுதி வாசம்!!
கோவில் திருவிழாவும்
குரும்பையில் நாம் கட்டிய தேரும்
வேலிச் சந்து கடந்து
விளாத்தியில் ஏறியதும்
முருங்கை மரத்தில் குடியிருந்த
மயிர் கொட்டிக்குப் பயந்ததும்
முள்முருக்குப் பூவைப் பார்த்து
வியந்து வாய் பிளந்ததும்
ஆடு குட்டி போட்ட போது
ஆடிப்பாடி மகிழ்ந்ததும்
நாடு விட்டு வந்த போதும்
கூடவே வந்த நினைவுகள்!
நெஞ்சுக் கூட்டுக்குள்
அடிக்கடி வந்து மோதும்
இந்த மலரும் நினைவுகளே
இன்றைய என் இருப்பின்
அத்திவாரம்!!!
இனி எப்போது நானுன்னை
விரலிலெடுத்து விழியில் காண்பேன்
இன்னருமை மண்ணே!!!
!!

