Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மலரும் நினைவுகள்....
#1
<img src='http://www.eelavision.com/gallery/5002-8232.jpg' border='0' alt='user posted image'>


[size=18]கண்டங்கள் கடந்து வந்து
கண் மூடி உறங்கினாலும்
உறங்காமல் மனசோடு மட்டும்
மலர்ந்த என் மண் நினைவுகள்...

பிஞ்சு விரல்களால்
பற்றி எடுத்த மண்
அன்று விரல்களில் ஒட்டியவை
இன்றும் உயிர் இழைகளிலே...

ஆத்தோர ஆலை
அந்தி சாயும் வேளை
புழுதி மணல்
உச்சி வெயில்
வாத்தியார் பிரம்பு
வயல் வரம்பு

உள்ளம் குளிர்ந்த மழைத்துளிகள்
வெள்ளம் நனைத்த கால்கள்
ஓரப் பார்வை பார்த்த
பக்கத்து வீட்டுப் பெண்ணின்
ஓடி ஒழிந்த சிரிப்பு

களவாடிச் சுவைத்த மாங்காய்
கணப்பொழுதும் யோசிக்கா பொய்கள்

இன்னும்...
எத்தனை எத்தனையோ...
இளமைக்கால நினைவுகள்
இன்றும் பசுமையாக...
:: ::

-
!
Reply


Messages In This Thread
மலரும் நினைவுகள்.... - by Kurumpan - 03-21-2005, 04:36 AM
[No subject] - by Malalai - 03-21-2005, 05:17 AM
[No subject] - by MUGATHTHAR - 03-21-2005, 07:56 AM
[No subject] - by shanmuhi - 03-21-2005, 09:48 AM
[No subject] - by KULAKADDAN - 03-21-2005, 10:26 AM
[No subject] - by aswini2005 - 03-21-2005, 12:38 PM
[No subject] - by yalie - 03-22-2005, 03:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)