03-20-2005, 11:48 PM
'சுயநிர்ணய உரிமையைத் தவிர தமிழருக்கு வேறு மார்க்கமில்லை'
கடந்த மூன்று வருட கால அனுபவங்கள் குறித்து மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான சர்வதேச அமைப்பு கருத்து
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதும் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதும் கடந்த மூன்று வருட அனுபவங்கள் ஊடாக புலனாகியுள்ளதாக மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான சர்வதேச அமைப்பின் செயலாளர் நாயகம் வெரெனாகிராவ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 61 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அந்தஸ்தை பெற்றஇ ஜெனிவாவைச் சேர்ந்த இந்த அமைப்பின் செயலாளர் நாயகம் அங்கு மேலும் உரையாற்றுகையில்இ
2002 பெப்ரவரியில் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வொன்று ஏற்படும் என்ற நம்பிக்கை பெருமளவில் சாத்தியமாகவில்லை.
இலங்கையை கடல்கோள் தாக்குவதற்கு பல மாதத்திற்கு முன்னரே பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தப்பட்டு விட்டன.
இருதரப்பிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அற்றுப் போயுள்ள அதேவேளைஇ பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை இராணுவம் வடஇ கிழக்கில் பெருமளவு நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றது.
இதேவேளைஇ உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
2004 இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க எதனையும் செய்யவில்லை. மாறாகஇ இந்த அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை முழுமையாக எதிர்க்கும் கட்சிகளே இடம்பெற்றுள்ளன.
யுத்தத்தினால் ஏற்கனவே அழிவுகளை சந்தித்துள்ள வடஇ கிழக்கின் கடற்கரைப் பகுதிகளை பாதித்துள்ள கடல்கோள்இ அங்கு நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சகல சமூகத்தினரும் பேதங்களை மறந்து உதவ முன்வந்த சூழ்நிலையைத் தோற்றுவித்தது. எனினும்இ அரசாங்கம் இவ்வாறு செயற்படவில்லை. இதனை பின்பற்றவில்லை.
கூட்டாக புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக சர்வதேச உதவியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் சூழ்நிலை காணப்படுகின்றது.
நிவாரணப் பணிகள் என்ற பெயரில் நிவாரண உதவிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையையும்இ புனர்நிர்மாணப் பணிகளுக்கான திட்டமிடுதலையும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகமே மேற்கொள்கின்றது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயற்படும தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்றவற்றை புறக்கணித்து விட்டு ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட சில குழுக்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.
சர்வதேச ஊடகங்களும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் செயல்திறன் இன்மையை சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடஇ கிழக்குப் பகுதியில் தமிழ்இ முஸ்லிம் மக்கள் வெளிப்படையாக புறக்கணிக்கப்படாவிட்டாலும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தின் மூலம் நலன்புரி நிலையங்களுக்கு பொறுப்பாக இராணுவம் நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானை கடல்கோளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டுப் பகுதிக்கு செல்ல அரசு அனுமதிக்காதது அரசாங்கம் தமிழ் மக்களையும்இ அவர்களது தலைவர்களையும் தனிமைப்படுத்த முயல்கின்றதோ என்ற சந்தேகத்திற்கு அப்பால் இந்த அனர்த்தத்தை பயன்படுத்தி இராணுவ சமநிலையை மாற்றவும் பேச்சுவார்த்தைகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்யவும் முயல்கின்றதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளும்இ தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடான யோசனை ஒன்றை பரிசீலிக்க தயார் என அறிவித்துள்ளனர்.
கடந்த மூன்று வருட அனுபவங்களும் கடல்கோள் அனுபவங்களும் இணைந்து காலம் கடந்து கொண்டிருக்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினக்குரலில்...
கடந்த மூன்று வருட கால அனுபவங்கள் குறித்து மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான சர்வதேச அமைப்பு கருத்து
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதும் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் இல்லை என்பதும் கடந்த மூன்று வருட அனுபவங்கள் ஊடாக புலனாகியுள்ளதாக மக்களின் உரிமை மற்றும் விடுதலைக்கான சர்வதேச அமைப்பின் செயலாளர் நாயகம் வெரெனாகிராவ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 61 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அந்தஸ்தை பெற்றஇ ஜெனிவாவைச் சேர்ந்த இந்த அமைப்பின் செயலாளர் நாயகம் அங்கு மேலும் உரையாற்றுகையில்இ
2002 பெப்ரவரியில் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வொன்று ஏற்படும் என்ற நம்பிக்கை பெருமளவில் சாத்தியமாகவில்லை.
இலங்கையை கடல்கோள் தாக்குவதற்கு பல மாதத்திற்கு முன்னரே பேச்சுவார்த்தைகள் இடை நிறுத்தப்பட்டு விட்டன.
இருதரப்பிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அற்றுப் போயுள்ள அதேவேளைஇ பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை இராணுவம் வடஇ கிழக்கில் பெருமளவு நிலங்களை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருகின்றது.
இதேவேளைஇ உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.
2004 இல் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க எதனையும் செய்யவில்லை. மாறாகஇ இந்த அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை முழுமையாக எதிர்க்கும் கட்சிகளே இடம்பெற்றுள்ளன.
யுத்தத்தினால் ஏற்கனவே அழிவுகளை சந்தித்துள்ள வடஇ கிழக்கின் கடற்கரைப் பகுதிகளை பாதித்துள்ள கடல்கோள்இ அங்கு நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
கடல்கோளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சகல சமூகத்தினரும் பேதங்களை மறந்து உதவ முன்வந்த சூழ்நிலையைத் தோற்றுவித்தது. எனினும்இ அரசாங்கம் இவ்வாறு செயற்படவில்லை. இதனை பின்பற்றவில்லை.
கூட்டாக புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக சர்வதேச உதவியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் சூழ்நிலை காணப்படுகின்றது.
நிவாரணப் பணிகள் என்ற பெயரில் நிவாரண உதவிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையையும்இ புனர்நிர்மாணப் பணிகளுக்கான திட்டமிடுதலையும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகமே மேற்கொள்கின்றது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயற்படும தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன்றவற்றை புறக்கணித்து விட்டு ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட சில குழுக்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.
சர்வதேச ஊடகங்களும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தின் செயல்திறன் இன்மையை சுட்டிக்காட்டியுள்ளனர்.
வடஇ கிழக்குப் பகுதியில் தமிழ்இ முஸ்லிம் மக்கள் வெளிப்படையாக புறக்கணிக்கப்படாவிட்டாலும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தின் மூலம் நலன்புரி நிலையங்களுக்கு பொறுப்பாக இராணுவம் நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானை கடல்கோளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கட்டுபாட்டுப் பகுதிக்கு செல்ல அரசு அனுமதிக்காதது அரசாங்கம் தமிழ் மக்களையும்இ அவர்களது தலைவர்களையும் தனிமைப்படுத்த முயல்கின்றதோ என்ற சந்தேகத்திற்கு அப்பால் இந்த அனர்த்தத்தை பயன்படுத்தி இராணுவ சமநிலையை மாற்றவும் பேச்சுவார்த்தைகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்யவும் முயல்கின்றதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
விடுதலைப் புலிகளும்இ தனிநாட்டு கோரிக்கைக்கு மாற்றீடான யோசனை ஒன்றை பரிசீலிக்க தயார் என அறிவித்துள்ளனர்.
கடந்த மூன்று வருட அனுபவங்களும் கடல்கோள் அனுபவங்களும் இணைந்து காலம் கடந்து கொண்டிருக்கின்றதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தினக்குரலில்...

