03-15-2005, 02:06 PM
இந்தியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து
புலிகளின் விமானத்தளத்தை அழியுங்கள்!
அரசுக்கு யஹல உறுமய அவசர வேண்டுகோள்
தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் யுத்த மொன்றுக்குத் தயாராகிவிட்டனர். அவர்களி டம் இப்போது விமானப்படையும் இருப்பது பெரும் ஆபத்தாகும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன டியாகச் செய்து புலிகளின் விமானத்தளங் களை அழிக்க ஐனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- இவ்வாறு ஜாதிக யஹல உறுமய நேற்று அவசர வேண்டுகோளொன்றைவிடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று யஹல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வண. எல்லாவல மேதானந்ததேரர் தலைமை யிலான தேரர்கள் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். அந்தச் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு வண. எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறியதாவது:-
உலகில் இல்லாத அதிகாரங்களையயல் லாம் இந்த அரசு பிரபாகரனுக்கு வழங்கியி ருக்கிறது. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் னர் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கவேண்டும். ஆனால், அந்த அதிகாரத்தைப் பிரபாகரனுக்கு வழங்கிவிட்டு அரசு விழிபிதுங்கி நிற்கின்றது. ஆழிப்பேரலையின் பின்னர் விடுதலைப் புலி கள் மேலும் பலமடைந்திருக்கின்றனர்.
ஆழிப்பேரலைக்கு முன்னர் புலிகளிடம் விமான ஓடுபாதைத்தளம் மட்டுமே இருந்தது. இப்போது விமானமும் இருக்கிறது. இது தேசி யப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பத்தாயி ரம் அடி உயரத்தில் நீண்டதூரம் வரை செல் லக்கூடிய விமானங்களை வைத்துக்கொண்டு புலிகள் நாடாளுமன்றம், இராணுவத்தலை மையகம் மற்றும் பொருளாதார கேந்திர ஸ்தா னங்களைத் தாக்கக்கூடும் .
எனவே, இந்தியாவுடன் விரைந்து பாது காப்பு உடன்படிக்கையயான்றைச் செய்து புலி களை அடக்கவேண்டும்.
----------------------- --------------------------------------------
பாகிஸ்தான் தலையீடு: இந்தியாவுக்கு எச்சரிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கம் விமானப் படை ஒன்றை அமைத்து அதனை விஸ்தரித்து, விருத்தி செய்து வருவதா கச் செய்திகள் வெளியான பின்னணியில் விமான நகர்வு களைத் துல்லியமாகக் கண்டறியும் நவீன மரடார்டு கருவி வசதிகளை இலங்கைக்கு வழங்குவதற்குப் பாகிஸ்தான் முன் வந்தி ருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இந்நடவடிக்கைக்கு அமெரிக்க அரசின் ஆதரவும், ஆசீர்வாதமும் கூட பின்னணி யில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் தனக்கென விமானத்தளம், விமானப்படை ஆகியவற்றை அமைத்து, விமானங்களைச் சுவீகரித்தது மட்டுமல்லாமல் விமானத்தளத்துக்கான வான் வழிப் பாதுகாப்பு வலையமைப்பையும் நிறுவியுள்ளது எனக் கிடைத்த ஊடகத் தவல்கள் இலங்கை அரசுத் தலைமையைப் பீதியில் கிலிகொள்ள வைத்திருக்கின்றன எனத்தெரிகின்றது. புலிகளின் இந்த நடவடிக்கை குறித்து யுத்தநிறுத்தக் கண் காணிப்புக்குழு, நோர்வே அனுசரணையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் இலங்கை அரசு முறையிட்டுள்ளது.
இலங்கை அரசு, அமெரிக்காவிடமும் முறையீடு செய்து உதவியும் பாதுகாப்பும் கோரி மண்டியிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலிஸாரைஸுக்கு இறைஞ்சிக் கடிதம் எழுதியிருந்தார் எனச் செய்திகள் வெளி யாகியிருந்தமை தெரிந்ததே. அந்த இறைஞ்சுதலுக்கே இப்போது கைமேல் பலன் கிட்டியிருக்கின்றது. அமெரிக்க ஆசீர்வாதத்துடன் நவீன மரடார்டு கருவிகள் பாகிஸ்தான் மூலம் இங்கைக்குக் கிடைக்கவிருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் இருப்பதாகக் கூறப்படும் விமா னங்களின் நகர்வுகளைத் துல்லியமாகவும், தெளிவாகவும் இந்த மரடார்டுகள் கண்டுபிடித்து இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு வெளிப்படுத்துமா என்பது ஒருபுறமிருக்க, பாகிஸ் தானின் உதவியுடன் உயர் தொழில்நுட்ப மரடார்டுகளை இலங்கைக்குள் செயற்படுத்துவது இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பையும், அதற்குச் சார்பான திறமையையும் எவ்வளவு தூரம் அதிகரிக்கவைக்கும் என்பதும் மறுபுறத்தில் கவனிக்கப்படவேண்டியவை ஆகும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையத்தில் அமைந்துள்ளது. இங்கு தனது ஏற்பாட்டில் ஓர் உயர்தொழில்நுட்ப மரடார்டு கருவித் தொகுதியைப் பொருத்த உதவும் சாக்கில் இப்பிராந்தியத்தின் சகல வான்நகர்வுகளையும் தான் அறிந்துகொள்ளும் ஒரு வலிமையை இத்தொழில்நுட்பத்தில் உயர்ந்த திறமையும், பரிச்சயமும் உள்ள ஒரு நாடு இலகுவில் சுவீகரித்துக் கொள்ளமுடியும் என்பதும் கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும். புலிகளின் விமான அச்சுறுத்தல் என்ற போர்வையில் பாகிஸ்தானும், அதன் ஞானத் தந்தையான அமெரிக்காவும் தமது உயர்தொழில் நுட்பக் கருவிகள்மூலம் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கு உதவக்கூடிய அம்சங்களுடன் இங்கு காலூன்றக்கூடிய வாய்ப்பு இருப்பதை அடியோடு ஒதுக்கி விட முடியாது. இதுபற்றி அதிக சிரத்தை கொள்ளவேண்டிய நாடு, இலங் கைக்கு முன்னர் இந்தியா என்பதுதான் முக்கிய அம்சமாகும். அமெரிக்க ஆதரவோடு பாகிஸ்தான் ஏற்பாட்டில் இலங்கை யில் உயர்தொழில்நுட்ப மரடார்டு வசதிகளைப் பொருத்துவது இந்தப் பிரதேசத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவின் பாதுகாப்புப்கே முதல் அச்சுறுத்தல் ஆகும். இது இந்தியா வுக்கு விடப்படும் சவால் என்றே கொள்ளப்படவேண்டும். மமதெற்காசியத் தென்முனையில் இலங்கையைத் தளமா கக் கொண்டு அமெரிக்கப் படையணிகள் வேகமாக ஊடுரு வுவதால் தெற்காசிய மக்களின் தற்சார்புக்கும், பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது." - என்று தமிழகத்தில் இருந்து வெளியாகும் மதினமணிடு நாளி தழ் கடந்த சனியன்று எச்சரிக்கை செய்திருந்தது.
1994ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கத் தலையீடு, ஊடுருவல் எப்படியயல்லாம் நிகழ்ந் திருக்கின்றன என்பதை அந்த ஆசிரியத் தலையங்கம் விலா வாரியாக விளக்கியிருக்கின்றது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்ப் பகுதிகளுக்குள் அமெரிக்கா எவ்வாறு காலூன்றித் தனது வலையமைப்பைப் பின்னி, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்கின் றது என்பதை அந்த ஆசிரியத் தலையங்கம் விவரமாக விவ ரிக்கின்றது. மமநேரு, இந்திரா, பண்டாரநாயக்கா, சிறிமாவோ ஆகிய இரு நாட்டுப் பிரதமர்களும், பாகிஸ்தானுக்கு வெளியே தெற் காசியாவில் வேறெந்த நாட்டிலும் அமெரிக்க ஊடுருவலுக்கு இடமளிக்காமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், இன்று அமெரிக்கப் படையணி இலங்கையைத் தளமாகக் கொண்டு தெற்காசியத் தென்முனையில் ஊடுருவியுள்ளது.டுடு - என்று மதினமணிடு எச்சரித்திருந்தது. அந்த எச்சரிக்கை நியாயமானது என்பதைத்தான் அமெ ரிக்க ஆசீர்வாதத்தோடு பாகிஸ்தான் இலங்கையில் உயர் தொழில்நுட்ப மரடார்டு கருவிகளைப் பொருத்துவதை நோக்க வேண்டும். எனவே, இவ்விடயங்கள் இந்தியாவுக்குச் சமர்ப்பணம்.
நன்றி: உதயன்
புலிகளின் விமானத்தளத்தை அழியுங்கள்!
அரசுக்கு யஹல உறுமய அவசர வேண்டுகோள்
தமிழீழ விடுதலைப் புலிகள் பெரும் யுத்த மொன்றுக்குத் தயாராகிவிட்டனர். அவர்களி டம் இப்போது விமானப்படையும் இருப்பது பெரும் ஆபத்தாகும். இவ்வாறான நிலையில் இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன டியாகச் செய்து புலிகளின் விமானத்தளங் களை அழிக்க ஐனாதிபதி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- இவ்வாறு ஜாதிக யஹல உறுமய நேற்று அவசர வேண்டுகோளொன்றைவிடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று யஹல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வண. எல்லாவல மேதானந்ததேரர் தலைமை யிலான தேரர்கள் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். அந்தச் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அங்கு வண. எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறியதாவது:-
உலகில் இல்லாத அதிகாரங்களையயல் லாம் இந்த அரசு பிரபாகரனுக்கு வழங்கியி ருக்கிறது. ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் னர் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கவேண்டும். ஆனால், அந்த அதிகாரத்தைப் பிரபாகரனுக்கு வழங்கிவிட்டு அரசு விழிபிதுங்கி நிற்கின்றது. ஆழிப்பேரலையின் பின்னர் விடுதலைப் புலி கள் மேலும் பலமடைந்திருக்கின்றனர்.
ஆழிப்பேரலைக்கு முன்னர் புலிகளிடம் விமான ஓடுபாதைத்தளம் மட்டுமே இருந்தது. இப்போது விமானமும் இருக்கிறது. இது தேசி யப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பத்தாயி ரம் அடி உயரத்தில் நீண்டதூரம் வரை செல் லக்கூடிய விமானங்களை வைத்துக்கொண்டு புலிகள் நாடாளுமன்றம், இராணுவத்தலை மையகம் மற்றும் பொருளாதார கேந்திர ஸ்தா னங்களைத் தாக்கக்கூடும் .
எனவே, இந்தியாவுடன் விரைந்து பாது காப்பு உடன்படிக்கையயான்றைச் செய்து புலி களை அடக்கவேண்டும்.
----------------------- --------------------------------------------
பாகிஸ்தான் தலையீடு: இந்தியாவுக்கு எச்சரிக்கை
விடுதலைப் புலிகள் இயக்கம் விமானப் படை ஒன்றை அமைத்து அதனை விஸ்தரித்து, விருத்தி செய்து வருவதா கச் செய்திகள் வெளியான பின்னணியில் விமான நகர்வு களைத் துல்லியமாகக் கண்டறியும் நவீன மரடார்டு கருவி வசதிகளை இலங்கைக்கு வழங்குவதற்குப் பாகிஸ்தான் முன் வந்தி ருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. இந்நடவடிக்கைக்கு அமெரிக்க அரசின் ஆதரவும், ஆசீர்வாதமும் கூட பின்னணி யில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் தனக்கென விமானத்தளம், விமானப்படை ஆகியவற்றை அமைத்து, விமானங்களைச் சுவீகரித்தது மட்டுமல்லாமல் விமானத்தளத்துக்கான வான் வழிப் பாதுகாப்பு வலையமைப்பையும் நிறுவியுள்ளது எனக் கிடைத்த ஊடகத் தவல்கள் இலங்கை அரசுத் தலைமையைப் பீதியில் கிலிகொள்ள வைத்திருக்கின்றன எனத்தெரிகின்றது. புலிகளின் இந்த நடவடிக்கை குறித்து யுத்தநிறுத்தக் கண் காணிப்புக்குழு, நோர்வே அனுசரணையாளர்கள் எனப் பல தரப்பினரிடமும் இலங்கை அரசு முறையிட்டுள்ளது.
இலங்கை அரசு, அமெரிக்காவிடமும் முறையீடு செய்து உதவியும் பாதுகாப்பும் கோரி மண்டியிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக இலங்கை ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலிஸாரைஸுக்கு இறைஞ்சிக் கடிதம் எழுதியிருந்தார் எனச் செய்திகள் வெளி யாகியிருந்தமை தெரிந்ததே. அந்த இறைஞ்சுதலுக்கே இப்போது கைமேல் பலன் கிட்டியிருக்கின்றது. அமெரிக்க ஆசீர்வாதத்துடன் நவீன மரடார்டு கருவிகள் பாகிஸ்தான் மூலம் இங்கைக்குக் கிடைக்கவிருக்கின்றன. விடுதலைப் புலிகளிடம் இருப்பதாகக் கூறப்படும் விமா னங்களின் நகர்வுகளைத் துல்லியமாகவும், தெளிவாகவும் இந்த மரடார்டுகள் கண்டுபிடித்து இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு வெளிப்படுத்துமா என்பது ஒருபுறமிருக்க, பாகிஸ் தானின் உதவியுடன் உயர் தொழில்நுட்ப மரடார்டுகளை இலங்கைக்குள் செயற்படுத்துவது இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானின் பங்களிப்பையும், அதற்குச் சார்பான திறமையையும் எவ்வளவு தூரம் அதிகரிக்கவைக்கும் என்பதும் மறுபுறத்தில் கவனிக்கப்படவேண்டியவை ஆகும்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையத்தில் அமைந்துள்ளது. இங்கு தனது ஏற்பாட்டில் ஓர் உயர்தொழில்நுட்ப மரடார்டு கருவித் தொகுதியைப் பொருத்த உதவும் சாக்கில் இப்பிராந்தியத்தின் சகல வான்நகர்வுகளையும் தான் அறிந்துகொள்ளும் ஒரு வலிமையை இத்தொழில்நுட்பத்தில் உயர்ந்த திறமையும், பரிச்சயமும் உள்ள ஒரு நாடு இலகுவில் சுவீகரித்துக் கொள்ளமுடியும் என்பதும் கவனிக்கப்படவேண்டிய அம்சமாகும். புலிகளின் விமான அச்சுறுத்தல் என்ற போர்வையில் பாகிஸ்தானும், அதன் ஞானத் தந்தையான அமெரிக்காவும் தமது உயர்தொழில் நுட்பக் கருவிகள்மூலம் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்கு உதவக்கூடிய அம்சங்களுடன் இங்கு காலூன்றக்கூடிய வாய்ப்பு இருப்பதை அடியோடு ஒதுக்கி விட முடியாது. இதுபற்றி அதிக சிரத்தை கொள்ளவேண்டிய நாடு, இலங் கைக்கு முன்னர் இந்தியா என்பதுதான் முக்கிய அம்சமாகும். அமெரிக்க ஆதரவோடு பாகிஸ்தான் ஏற்பாட்டில் இலங்கை யில் உயர்தொழில்நுட்ப மரடார்டு வசதிகளைப் பொருத்துவது இந்தப் பிரதேசத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவின் பாதுகாப்புப்கே முதல் அச்சுறுத்தல் ஆகும். இது இந்தியா வுக்கு விடப்படும் சவால் என்றே கொள்ளப்படவேண்டும். மமதெற்காசியத் தென்முனையில் இலங்கையைத் தளமா கக் கொண்டு அமெரிக்கப் படையணிகள் வேகமாக ஊடுரு வுவதால் தெற்காசிய மக்களின் தற்சார்புக்கும், பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது." - என்று தமிழகத்தில் இருந்து வெளியாகும் மதினமணிடு நாளி தழ் கடந்த சனியன்று எச்சரிக்கை செய்திருந்தது.
1994ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் அமெரிக்கத் தலையீடு, ஊடுருவல் எப்படியயல்லாம் நிகழ்ந் திருக்கின்றன என்பதை அந்த ஆசிரியத் தலையங்கம் விலா வாரியாக விளக்கியிருக்கின்றது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்ப் பகுதிகளுக்குள் அமெரிக்கா எவ்வாறு காலூன்றித் தனது வலையமைப்பைப் பின்னி, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்கின் றது என்பதை அந்த ஆசிரியத் தலையங்கம் விவரமாக விவ ரிக்கின்றது. மமநேரு, இந்திரா, பண்டாரநாயக்கா, சிறிமாவோ ஆகிய இரு நாட்டுப் பிரதமர்களும், பாகிஸ்தானுக்கு வெளியே தெற் காசியாவில் வேறெந்த நாட்டிலும் அமெரிக்க ஊடுருவலுக்கு இடமளிக்காமல் பார்த்துக்கொண்டனர். ஆனால், இன்று அமெரிக்கப் படையணி இலங்கையைத் தளமாகக் கொண்டு தெற்காசியத் தென்முனையில் ஊடுருவியுள்ளது.டுடு - என்று மதினமணிடு எச்சரித்திருந்தது. அந்த எச்சரிக்கை நியாயமானது என்பதைத்தான் அமெ ரிக்க ஆசீர்வாதத்தோடு பாகிஸ்தான் இலங்கையில் உயர் தொழில்நுட்ப மரடார்டு கருவிகளைப் பொருத்துவதை நோக்க வேண்டும். எனவே, இவ்விடயங்கள் இந்தியாவுக்குச் சமர்ப்பணம்.
நன்றி: உதயன்

