03-12-2005, 02:28 PM
இலங்கையின் கபட வலைக்குள் இந்தியா விழுந்துவிடக்கூடாது!
நாடாளுமன்ற உரையில் சம்பந்தன் எச்சரிக்கை
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் உதவியைக்கோரும் அரசு பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்வதில் மும் முரமாகச் செயற்படுகின்றது. இலங்கை அர சின் கபட வலைக்குள் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலை வர் இரா.சம்பந்தன் இதனை நேற்று நாடாளு மன்றத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசிடம் ஸ்திரமான ஒருநிலைப்பாடு இல்லை. நாட்டுக்கு நாடு மாறுபட்ட கருத்துக்களை இலங்கை தெரிவிக்கின்றது.
இரட்டைக் குரலில் பேசும் அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. அதற்கு அவர்களிடம் உருப்படியான திட்டங்களும் இல்லை - என்றும் சம்பந்தன் எம்.பி.சாடினார்.
இந்தியாவுக்கு விஜயம்செய்த வெளிவிவ கார அமைச்சர் கதிர்காமர்இ இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் பங் களிப்பு அவசியம் - இந்தவிடயத்தில் இந்தியா வின் பங்களிப்பை - நிலைப்பாட்டை - அதிக ரிக்கவேண்டும்; தீவிரமாக்கவேண்டும் - என் றெல்லாம் மண்டியிடுகின்றார்.
அதே கதிர்காமர் பாகிஸ்தானுக்குச் சென்று அவர்களின் புகழ்பாடுகின்றார். தக்கசமயத்தில் பாகிஸ்தான் உதவியிருக்காவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதோ தமிழீழத்தை அமைத்திருப்பார்கள் என்று பாகிஸ்தானை சந் தோசப்படுத்தி பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மும்முரமாகச் செயற்படுகின் றார்.
அதோடு நின்றுவிடவில்லை. சீனாவுக்கு சென்றபோது சீன அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியமைக்காக சீனாவுக்கு நன்றி தெரி விக்கின்றார். நாட்டுக்கு நாடு தேசத்திற்கு தேசம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள் ளும் இலங்கை அரசின் சூழ்ச்சி வலைக்குள் இந்தியா சிக்கிவிடக்கூடாது - என்று சம்பந்தன் எம்.பி.மேலும் கூறினார்.
நன்றி: உதயன்
நாடாளுமன்ற உரையில் சம்பந்தன் எச்சரிக்கை
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவின் உதவியைக்கோரும் அரசு பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்வதில் மும் முரமாகச் செயற்படுகின்றது. இலங்கை அர சின் கபட வலைக்குள் இந்தியா சிக்கிவிடக் கூடாது என்று எச்சரிக்கை செய்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலை வர் இரா.சம்பந்தன் இதனை நேற்று நாடாளு மன்றத்தில் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசிடம் ஸ்திரமான ஒருநிலைப்பாடு இல்லை. நாட்டுக்கு நாடு மாறுபட்ட கருத்துக்களை இலங்கை தெரிவிக்கின்றது.
இரட்டைக் குரலில் பேசும் அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதில் அக்கறை காட்டவில்லை. அதற்கு அவர்களிடம் உருப்படியான திட்டங்களும் இல்லை - என்றும் சம்பந்தன் எம்.பி.சாடினார்.
இந்தியாவுக்கு விஜயம்செய்த வெளிவிவ கார அமைச்சர் கதிர்காமர்இ இலங்கை இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் பங் களிப்பு அவசியம் - இந்தவிடயத்தில் இந்தியா வின் பங்களிப்பை - நிலைப்பாட்டை - அதிக ரிக்கவேண்டும்; தீவிரமாக்கவேண்டும் - என் றெல்லாம் மண்டியிடுகின்றார்.
அதே கதிர்காமர் பாகிஸ்தானுக்குச் சென்று அவர்களின் புகழ்பாடுகின்றார். தக்கசமயத்தில் பாகிஸ்தான் உதவியிருக்காவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போதோ தமிழீழத்தை அமைத்திருப்பார்கள் என்று பாகிஸ்தானை சந் தோசப்படுத்தி பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள மும்முரமாகச் செயற்படுகின் றார்.
அதோடு நின்றுவிடவில்லை. சீனாவுக்கு சென்றபோது சீன அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியமைக்காக சீனாவுக்கு நன்றி தெரி விக்கின்றார். நாட்டுக்கு நாடு தேசத்திற்கு தேசம் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றிக்கொள் ளும் இலங்கை அரசின் சூழ்ச்சி வலைக்குள் இந்தியா சிக்கிவிடக்கூடாது - என்று சம்பந்தன் எம்.பி.மேலும் கூறினார்.
நன்றி: உதயன்

