03-10-2005, 06:36 PM
சந்திரமுகி இசை விமர்சனம் II
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/nayan-rajik400.jpg' border='0' alt='user posted image'>
சூப்பர் ஸ்டாரின் "நிலையை" உணர்ந்து, பட்டையைக் கிளப்பும் பாட்டுக்களைக் கொடுத்துள்ளார் வித்யாசாகர். சந்திரமுகியில் அரசியல் இல்லை என்று யார் சொன்னது? இரண்டு பாடல்களைத் தவிர மற்ற அத்தனைப் பாடல்களிலும் அரசியல் வரிகள் கலங்கடிக்கின்றன.
வித்யாசாகரின் அதிரடி இசையில் ரஜினிக்கான "பில்டப்" பாடல்கள் ரசிக்கும்படியாகவே உள்ளன.
சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்ரத் தாழ் படத்தில் பாட்டுக்கள் அனைத்தும் மெலடி ரகம். அத்துடன் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ரஜினி படத்தில் கர்நாடக மியூசிக் போட்டால் எடுபடுமா?. அதான், வாத்தியங்களை ஹைபிட்ச்சில் விட்டு 'சாத்தியிருக்கிறார்' வித்யாசாகர்.
''தேவுடா தேவுடா'' முதல் பாட்டிலேயே டாப் கியருப்புப் போய்விடுகிறார் வித்யாசாகர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்காக குரல் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. சும்மா சொல்லக் கூடாது, எத்தனையோ போருக்கு "வாய்ஸ்" கொடுத்துள்ள ரஜினிக்கு ஏற்ற வாய்ஸ், தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல், வரிகள் முழுக்க ரஜினியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் வாலி. இந்தப் பாடல் மூலம் "யாரையோ" குட்டியும் இருக்கிறார் ரஜினி.
''உன்னப் பத்தி என்ன சொன்னால் என்ன?
இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் தள்ளு
மேகம் மிதந்தாலும், காகம் பறந்தாலும்,
ஆகாயம்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
பூப்பந்தை யாரும், நீ ரில் பொத்தித்தான் வச்சாலும்,
பந்து வரும் தண்ணி மேலதான்
அட உன்ன யாரும் ஓரம் கட்டித்தான்
வச்சாலும் தம்பி, வாடா பந்து போலதான்
மூனாம்பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
வளர்வதை மின்மினிகள் தடுத்திடுமா?''
அத்தனையும் நிறைய 'அர்த்தம் பொதிந்த' வரிகள். பாட்டின் மூலம் பல பேருக்கு "மெசேஜ்" கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார். பாதிப் பாட்டில் , யாரையோ மனதில் வைத்துக் கொண்டு மெஸேஜாக சொல்லிவிட்டு, மிச்ச மீதிப் பாட்டில் சமூக அக்கறை கொண்ட தலைவனாக மாறி கருத்து சொல்கிறார் ரஜினி.
சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு,
நாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு.. என்று சமூக அக்கறையை ஒரு கிளாய் டீயில் கொஞ்சமாய் சக்கரை மாதிரி கரைத்துத் தந்திருக்கிறார்.
''கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்''... ஒரு அழகிய பாடல். அழுத்தமான மெலடி. கொஞ்சும் குரலில் பின்னியிருக்கிறார் கானக் குயில் ஆஷா போன்ஸ்லே. குரலில் ஆங்காங்கே அவரது வயது எட்டிப் பார்க்க முனைந்தாலும், கூடப் பாடியிருக்கும் மது பாலகிருஷ்ணன் அதைச் சரிக் கட்டியிருக்கிறார். மனிதருக்கு என்ன இதமான வாய்ஸ்?
பாடல் வரிகளில் யுகபாரதி, ஜாலம் புரிந்திருக்கிறார்.
''மழை நீயாக, வயல் நானாக
வெள்ளாமை நீ ..
கொக்கிப் போடும் விழி
கொத்திப் போகும் இதழ்
நித்தம் கோலமிடுமா ..
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா .. ''
என்று கொஞ்சமாய் வைரமுத்துவை ஒட்டி வரும் நளினமான வரிகள். வித்யாசாகரும் வார்த்தைகளை டிரம்ஸ் கொண்டு உடைத்துவிடாமல் மெல்லிய பேக்கிரவுண்ட் மியூசிக் கொடுத்து வாழ வைக்கிறார்.
மொத்தப் பாடல்களிலும் இது ஒன்றுதான் மெலடி என்பதால் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது பாட்டு.
ஆனால், இதிலும் ரஜினிக்காக ஒரு "பஞ்ச்".
''பல கோடிப் பேரின் அபிமானம்
உனைப் பார்த்து ஏங்கும் எதிர்காலம்'' ..
இந்த வரிகள் என்ன சொல்ல வருகிறதென்று ரஜினி ரசிகர்களுக்குப் புரியாதா என்ன? பாலிட்டிக்ஸை நாம் கஷ்டப்பட்டு மறந்துவிட்டுக் கேட்டால் , சுகானுபவம் தரும் பாடல்.
''அத்திந்தோம்'' என்னொரு பாடல். எஸ்.பி.பியின் 'எவர்' சில்வர் குரலில் சிலிர்க்க வைக்கும் பாட்டு. மனுஷனுக்கு வயசு ஆனாலும், வாய்ஸில் இன்னும் சிலிர்ப்புப் போகலையே..
இசையும், எஸ்.பி.பி.யின் குரலும் இணைந்து குலைந்து போதையூட்டுகின்றன. அழகிய "ஃபோக்" சாங். பா.விஜய்யின் வரிகளில் வசீகரம்.
''சின்ன சின்னத் தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆராரோ
இசைதானே ஓ இசைதானே
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆச மெட்டுக் கட்டறதும்
இசைதானே ஓ இசைதானே'' என்ற வரிகள் ரசிக்க வைக்கின்றன.
இது போன்ற நாட்டுப்புற இசையில் புகுந்து விளையாடும் இசைஞானிக்கு ஈக்வலாக கலக்கியிருக்கிறார் வித்யாசாகர்.
''கொக்கு பற பற'... சரியான ஜாலி பாட்டு. ரஜினி, பிரபு சேர்ந்து பாடும் பாட்டு. இதுவும் ரஜினிக்காகவே எழுதப்பட்ட சூப்பர் "பில்டப்" பாட்டு.
ரஜினிக்காக, ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியை பிடித்தவர்கள்பிடிக்காதவர்களுக்காக என்று அனைத்துத் தரப்பினருக்கும் மெசேஜ் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
''பாஞ்சு பாயிற பட்டம்
இது சூப்பர் ஸ்டாரு பட்டம்
காத்து இப்ப நம்ம பக்கம்
சாதகமாக வீசுதே
நூலோட போட்ட இந்த மாஞ்சா
யாரோடும் டீலு போடுமே
ஏத்தி விட்டத மறந்தாக்கா அந்த
நன்றி என்னும் வார்த்தைக்கொரு
அர்த்தம் இல்லை.
மீனாட்சியம்மனப் பார்த்தாக்கா
கந்து வட்டியோட கொடுமையப்
போக்கச் சொல்லு
ஸ்ரீரங்கநாதனப் பார்த்தாக்கா
தலக்காரிவிய அடிக்கடி வரச் சொல்லு
என்று காவிரியை பட்டும் படாமல் தொட்டும் தொடமல் டச் செய்துவிட்டுப் போகிறது இந்த 'ரஜினி' பாட்டு.
தனக்குத் துரோகம் செய்தவர்களுக்கு, தன்னை நட்டாற்றில் விட்டவர்களுக்கு இந்தப் பாட்டின் மூலம் பஞ்ச் கொடுத்துள்ள ரஜினி, துவண்டு போயுள்ள ரசிகர்களுக்கும் குளுக்கோஸ் கலக்கி கொடுத்துள்ளார். பாட்டு ரசிகர்களிடையே ஹிட் ஆகும்.
''ரா ரா.... '' இது ஒரு தெலுங்குப் பாட்டு. ஆனால் இதுதான் கிளைமாக்ஸ் பாட்டாம். இந்தப் பாட்டை புவனா சந்திரா எழுதியுள்ளார். திப்புவும், பின்னி கிருஷ்ணகுமாரும் பாடியிருக்கிறார்கள்.
தமிழில் எதற்கு தெலுங்கு பாட்டு என்று குழப்பம் வருகிறது. வரிகள் புரியாவிட்டாலும், ரசிக்குமாறு மெட்டமைத்துள்ளார் வித்யாசாகர்.
''அண்ணனோட பாட்டு'' என்று இன்னொரு செம 'பில்டப்' பாட்டு.
முறிலும் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து இந்தப் பாட்டைப் போட்டுள்ளார்கள்.
அண்ணனோட பாட்டு
ஆட்டம் போடடா
அக்கறையோட கேட்டா
அர்த்தம் நூறுடா
அன்பின் உறவாயிரு
உண்மை மறவாதிரு
சொந்தக் காலில் நீ நில்லம்மா
நீ நின்ன பின்னால ஊரே கேட்கும்
அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா ('அம்மாவுக்கே' மெஸேஜா?)
கண் இமைக்கும் நொடியில்
அட எதுவும் நடக்கும்
இது எனக்குத் தெரியும்
நாளை உனக்கும் புரியும்
அஞ்சுக்குள்ள நால வை
ஆழம் பார்த்துக் கால வையடா ..
கபிலனின் வரிகளை, கடிக்காமல் பாடியிருக்கிறார்கள் கார்த்திக்கும், சுஜாதாவும்.
விஜய், திஷாவின் ஆட்டத்தால் பிரபலமான 'அப்படிப் போடு' பாட்டைப் போலவே ஒரு பாட்டு வேண்டும் என்ற ரஜினியின் கேட்டதற்கு ஏற்ப வித்யாசாகர் அதே பாணியில் போட்ட பாட்டாம் இது.
சந்திரமுகிப் பாடல்களைப் பொருத்தவரை, வித்யாசாகர் ரஜினி ரசிகர்களை நிச்சயம் வெல்வார்.
Thats Tamil
<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/nayan-rajik400.jpg' border='0' alt='user posted image'>
சூப்பர் ஸ்டாரின் "நிலையை" உணர்ந்து, பட்டையைக் கிளப்பும் பாட்டுக்களைக் கொடுத்துள்ளார் வித்யாசாகர். சந்திரமுகியில் அரசியல் இல்லை என்று யார் சொன்னது? இரண்டு பாடல்களைத் தவிர மற்ற அத்தனைப் பாடல்களிலும் அரசியல் வரிகள் கலங்கடிக்கின்றன.
வித்யாசாகரின் அதிரடி இசையில் ரஜினிக்கான "பில்டப்" பாடல்கள் ரசிக்கும்படியாகவே உள்ளன.
சந்திரமுகியின் ஒரிஜினலான மணிச்சித்ரத் தாழ் படத்தில் பாட்டுக்கள் அனைத்தும் மெலடி ரகம். அத்துடன் சாஸ்திரீய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ரஜினி படத்தில் கர்நாடக மியூசிக் போட்டால் எடுபடுமா?. அதான், வாத்தியங்களை ஹைபிட்ச்சில் விட்டு 'சாத்தியிருக்கிறார்' வித்யாசாகர்.
''தேவுடா தேவுடா'' முதல் பாட்டிலேயே டாப் கியருப்புப் போய்விடுகிறார் வித்யாசாகர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்காக குரல் கொடுத்துள்ளார் எஸ்.பி.பி. சும்மா சொல்லக் கூடாது, எத்தனையோ போருக்கு "வாய்ஸ்" கொடுத்துள்ள ரஜினிக்கு ஏற்ற வாய்ஸ், தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல், வரிகள் முழுக்க ரஜினியைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார் வாலி. இந்தப் பாடல் மூலம் "யாரையோ" குட்டியும் இருக்கிறார் ரஜினி.
''உன்னப் பத்தி என்ன சொன்னால் என்ன?
இந்தக் காதில் வாங்கி அதை அந்தக் காதில் தள்ளு
மேகம் மிதந்தாலும், காகம் பறந்தாலும்,
ஆகாயம்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
பூப்பந்தை யாரும், நீ ரில் பொத்தித்தான் வச்சாலும்,
பந்து வரும் தண்ணி மேலதான்
அட உன்ன யாரும் ஓரம் கட்டித்தான்
வச்சாலும் தம்பி, வாடா பந்து போலதான்
மூனாம்பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய்
வளர்வதை மின்மினிகள் தடுத்திடுமா?''
அத்தனையும் நிறைய 'அர்த்தம் பொதிந்த' வரிகள். பாட்டின் மூலம் பல பேருக்கு "மெசேஜ்" கொடுக்கிறார் சூப்பர் ஸ்டார். பாதிப் பாட்டில் , யாரையோ மனதில் வைத்துக் கொண்டு மெஸேஜாக சொல்லிவிட்டு, மிச்ச மீதிப் பாட்டில் சமூக அக்கறை கொண்ட தலைவனாக மாறி கருத்து சொல்கிறார் ரஜினி.
சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு,
நாலு நாளு லீவு போட்டா நாறிப் போகும் ஊரு.. என்று சமூக அக்கறையை ஒரு கிளாய் டீயில் கொஞ்சமாய் சக்கரை மாதிரி கரைத்துத் தந்திருக்கிறார்.
''கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்''... ஒரு அழகிய பாடல். அழுத்தமான மெலடி. கொஞ்சும் குரலில் பின்னியிருக்கிறார் கானக் குயில் ஆஷா போன்ஸ்லே. குரலில் ஆங்காங்கே அவரது வயது எட்டிப் பார்க்க முனைந்தாலும், கூடப் பாடியிருக்கும் மது பாலகிருஷ்ணன் அதைச் சரிக் கட்டியிருக்கிறார். மனிதருக்கு என்ன இதமான வாய்ஸ்?
பாடல் வரிகளில் யுகபாரதி, ஜாலம் புரிந்திருக்கிறார்.
''மழை நீயாக, வயல் நானாக
வெள்ளாமை நீ ..
கொக்கிப் போடும் விழி
கொத்திப் போகும் இதழ்
நித்தம் கோலமிடுமா ..
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா .. ''
என்று கொஞ்சமாய் வைரமுத்துவை ஒட்டி வரும் நளினமான வரிகள். வித்யாசாகரும் வார்த்தைகளை டிரம்ஸ் கொண்டு உடைத்துவிடாமல் மெல்லிய பேக்கிரவுண்ட் மியூசிக் கொடுத்து வாழ வைக்கிறார்.
மொத்தப் பாடல்களிலும் இது ஒன்றுதான் மெலடி என்பதால் திரும்பத் திரும்பக் கேட்க வைக்கிறது பாட்டு.
ஆனால், இதிலும் ரஜினிக்காக ஒரு "பஞ்ச்".
''பல கோடிப் பேரின் அபிமானம்
உனைப் பார்த்து ஏங்கும் எதிர்காலம்'' ..
இந்த வரிகள் என்ன சொல்ல வருகிறதென்று ரஜினி ரசிகர்களுக்குப் புரியாதா என்ன? பாலிட்டிக்ஸை நாம் கஷ்டப்பட்டு மறந்துவிட்டுக் கேட்டால் , சுகானுபவம் தரும் பாடல்.
''அத்திந்தோம்'' என்னொரு பாடல். எஸ்.பி.பியின் 'எவர்' சில்வர் குரலில் சிலிர்க்க வைக்கும் பாட்டு. மனுஷனுக்கு வயசு ஆனாலும், வாய்ஸில் இன்னும் சிலிர்ப்புப் போகலையே..
இசையும், எஸ்.பி.பி.யின் குரலும் இணைந்து குலைந்து போதையூட்டுகின்றன. அழகிய "ஃபோக்" சாங். பா.விஜய்யின் வரிகளில் வசீகரம்.
''சின்ன சின்னத் தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆராரோ
இசைதானே ஓ இசைதானே
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆச மெட்டுக் கட்டறதும்
இசைதானே ஓ இசைதானே'' என்ற வரிகள் ரசிக்க வைக்கின்றன.
இது போன்ற நாட்டுப்புற இசையில் புகுந்து விளையாடும் இசைஞானிக்கு ஈக்வலாக கலக்கியிருக்கிறார் வித்யாசாகர்.
''கொக்கு பற பற'... சரியான ஜாலி பாட்டு. ரஜினி, பிரபு சேர்ந்து பாடும் பாட்டு. இதுவும் ரஜினிக்காகவே எழுதப்பட்ட சூப்பர் "பில்டப்" பாட்டு.
ரஜினிக்காக, ரஜினி ரசிகர்களுக்காக, ரஜினியை பிடித்தவர்கள்பிடிக்காதவர்களுக்காக என்று அனைத்துத் தரப்பினருக்கும் மெசேஜ் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
''பாஞ்சு பாயிற பட்டம்
இது சூப்பர் ஸ்டாரு பட்டம்
காத்து இப்ப நம்ம பக்கம்
சாதகமாக வீசுதே
நூலோட போட்ட இந்த மாஞ்சா
யாரோடும் டீலு போடுமே
ஏத்தி விட்டத மறந்தாக்கா அந்த
நன்றி என்னும் வார்த்தைக்கொரு
அர்த்தம் இல்லை.
மீனாட்சியம்மனப் பார்த்தாக்கா
கந்து வட்டியோட கொடுமையப்
போக்கச் சொல்லு
ஸ்ரீரங்கநாதனப் பார்த்தாக்கா
தலக்காரிவிய அடிக்கடி வரச் சொல்லு
என்று காவிரியை பட்டும் படாமல் தொட்டும் தொடமல் டச் செய்துவிட்டுப் போகிறது இந்த 'ரஜினி' பாட்டு.
தனக்குத் துரோகம் செய்தவர்களுக்கு, தன்னை நட்டாற்றில் விட்டவர்களுக்கு இந்தப் பாட்டின் மூலம் பஞ்ச் கொடுத்துள்ள ரஜினி, துவண்டு போயுள்ள ரசிகர்களுக்கும் குளுக்கோஸ் கலக்கி கொடுத்துள்ளார். பாட்டு ரசிகர்களிடையே ஹிட் ஆகும்.
''ரா ரா.... '' இது ஒரு தெலுங்குப் பாட்டு. ஆனால் இதுதான் கிளைமாக்ஸ் பாட்டாம். இந்தப் பாட்டை புவனா சந்திரா எழுதியுள்ளார். திப்புவும், பின்னி கிருஷ்ணகுமாரும் பாடியிருக்கிறார்கள்.
தமிழில் எதற்கு தெலுங்கு பாட்டு என்று குழப்பம் வருகிறது. வரிகள் புரியாவிட்டாலும், ரசிக்குமாறு மெட்டமைத்துள்ளார் வித்யாசாகர்.
''அண்ணனோட பாட்டு'' என்று இன்னொரு செம 'பில்டப்' பாட்டு.
முறிலும் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து இந்தப் பாட்டைப் போட்டுள்ளார்கள்.
அண்ணனோட பாட்டு
ஆட்டம் போடடா
அக்கறையோட கேட்டா
அர்த்தம் நூறுடா
அன்பின் உறவாயிரு
உண்மை மறவாதிரு
சொந்தக் காலில் நீ நில்லம்மா
நீ நின்ன பின்னால ஊரே கேட்கும்
அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா ('அம்மாவுக்கே' மெஸேஜா?)
கண் இமைக்கும் நொடியில்
அட எதுவும் நடக்கும்
இது எனக்குத் தெரியும்
நாளை உனக்கும் புரியும்
அஞ்சுக்குள்ள நால வை
ஆழம் பார்த்துக் கால வையடா ..
கபிலனின் வரிகளை, கடிக்காமல் பாடியிருக்கிறார்கள் கார்த்திக்கும், சுஜாதாவும்.
விஜய், திஷாவின் ஆட்டத்தால் பிரபலமான 'அப்படிப் போடு' பாட்டைப் போலவே ஒரு பாட்டு வேண்டும் என்ற ரஜினியின் கேட்டதற்கு ஏற்ப வித்யாசாகர் அதே பாணியில் போட்ட பாட்டாம் இது.
சந்திரமுகிப் பாடல்களைப் பொருத்தவரை, வித்யாசாகர் ரஜினி ரசிகர்களை நிச்சயம் வெல்வார்.
Thats Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

