03-10-2005, 05:54 PM
tamilini Wrote:Quote:சட்டமும் நீதியும் இன்னும் பெண்ணுக்கு சலுகைகள் வழங்கும் நிலை ஏனோ....பெண் இன்னும் சலுகைகளில்தான் வாழ்கிறாளோ...???! மனதால் ஆணும் பெண்ணும் ஒருமைப்படும் போது மட்டுமே பெண் தன் நிலை ஆண் தன் நிலையை அணுகியவளாவாள்...அதுவரை பெண்களே பெண்களுக்கு சாபம் இட்டபடி சமூகத்தை ஏசிய படி வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான்...!பெண்களிற்கு சட்டம் எங்கும்.. சலுகைவழங்குவாய் நாங்க காணவில்லை.. அதைவிட பெண்கள் சலுகை நாடி நின்றது இல்லை.
அண்மையில் என்னை பாதித்த விடயம் என்னவென்றால்.. பாகீஸ்தானில் ஒரு பெண்ணின் தம்பி இன்னொரு பெண்ணை கற்பழித்து விட்டான் என்பதற்காய்.. தம்பி செய்த குற்றத்திற்கு.. சகோதரியை.. பாதிக்கப்பட்ட குடும்ப ஆண்கள் 5 ந்து பேர் 5 வருடமாய் வல்லுறவு கொண்டதாய் அறிந்தேன்.. இது வேறை பஞ்சாயத்து தீர்ப்பாம். இதற்கு நீதி மன்றம் சென்றால்.. சம்பிரதாயம் பாரம்பரியத்தை காப்பாற்றிம் என்று அந்த கேசை தள்ளிவிட்டார்கள். சலுகை வேண்டாம் அந்த பெண்ணிற்கு குறைந்த பட்ச நீதி கு}ட வேண்டாமா..?? இப்படி பல பிரச்சனைகள்.. வெளியிலையே தெரியாமல் இருக்கு.. :evil: :twisted: :twisted:
தமிழினி பெண்களுக்குப் பல சட்ட சலுகைகள் இருக்கு...இப்ப திருமணமான பெண் விவாகரத்தானால் கணவனிடம் இருந்து அவனின் சொத்துப் பறிக்க வழி இருக்கு...பிள்ளைப் பராமரிப்புக்கு என்று விசேட சலுகைகள் இருக்கு....அதுபோல..இந்தியாவில் ஆண்கள் ரீசிங்குக்கு தடை பெண்கள் செய்யும் ரீசிங்குக்கு தடையில்லை...இப்படிப் பலதைக் காட்டலாம்...!
தமிழினி...இவை பெண்களுக்கான பிரச்சனையல்ல....சமூகப்பிரச்சனை...வெறுமே பெண்கள் மட்டும் இதைத் தீர்க்கமுடியாது...சமூகத்தில ஏற்படும் மாற்றங்களே இவற்றத் தீர்க்க முடியும்....இப்படிப் பிரச்சனைகளை ஆண்களும் தான் சந்திக்கிறார்கள்...வேற வேற கோணங்களில்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

