03-07-2005, 01:23 PM
KULAKADDAN Wrote:ஒரு சமன்பாடு
'அவர்கள்' கேட்கிறார்
அதுஎப்படி.....
ஆணும் பெண்ணும் சமமாமே
அதுஎப்படி.....
நாங்கள் சொல்கிறோம்
நிறுக்கும் தராசில்
நிறுத்த பொருளும்
நிறைக்கல்லும்
ஒன்றல்ல
ஆனால்
சமம்!
-உதயா - தோழியர்
மகளிர் தின வாழ்த்து....... களத்து உறவுகளுகு
சமன் என்பதன் பொருளை அழகாய் சமன்படுத்திய கவிதையை எழுதிய உதயாவின் கவிதைக்கு வாழ்த்துக்கள். அருமையான கவிதையை இணைத்த குளைக்காடனுக்கும் நன்றிகள்.
:::: . ( - )::::

