03-07-2005, 03:16 AM
கடவுளுக்கு எதிரானவன் என நினைத்து மகனைகொன்ற தந்தைக்கு ஜெயில்
பாட்பிலியான், மார்ச். 6-
அமெரிக்காவின் பாட்பிலியான் பகுதியை சேர்ந்தவர் இவான் ஹெங்க். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஒரு ஆண் குழந்தை பெற்றார். பிரிண்டன் கான்சாலிஸ் என்று பெயரிட்ட அந்த குழந்தையின் நெற்றியில் 666 என்று எழுத்துக்கள் தெரிந்தன.
இப்படி 666 என்ற எழுத்துடன் பிறக்கும் குழந்தை கடவுளுக்கு எதிரானவன் என்று அதன் தந்தை இவான் ஹெங்க் கருதினார். அந்த குழந்தையை கொன்று விடுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தார்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹெங்க் தனது மகனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று அங்கு அவனை வெட்டிக் கொன்றார். அப்போது பிரிண்டன் கான்சாலிசுக்கு வயது 4.
குழந்தை கொல்லப்பட்டது குடும்பத்துக்கு தெரியாது அவனது உறவினர்கள் 2 மாதமாக தேடினார்கள்.
இந்த நிலையில் அந்த குழந்தையின் தாய் நடத்தி வந்த பட்டறையில் ரத்த கறைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹெங்க் மகனை கொன்றது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்து விட்டார்.
இதையொட்டி போலீசார் ஹெங்கை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அமெரிக்கா முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடவுளுக்கு எதிரானவன் என்பதால் மகனை கொன்றதாக ஹெங்க் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கில் இப்போது கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. ஹெங்குக்கு ஆயுள் தண்டனை வித்தித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவரை பரோலில் கூட வெளியே விடக்கூடாது என்றும் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
பாட்பிலியான், மார்ச். 6-
அமெரிக்காவின் பாட்பிலியான் பகுதியை சேர்ந்தவர் இவான் ஹெங்க். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி ஒரு ஆண் குழந்தை பெற்றார். பிரிண்டன் கான்சாலிஸ் என்று பெயரிட்ட அந்த குழந்தையின் நெற்றியில் 666 என்று எழுத்துக்கள் தெரிந்தன.
இப்படி 666 என்ற எழுத்துடன் பிறக்கும் குழந்தை கடவுளுக்கு எதிரானவன் என்று அதன் தந்தை இவான் ஹெங்க் கருதினார். அந்த குழந்தையை கொன்று விடுவதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தார்.
கடந்த 2003-ம் ஆண்டு ஹெங்க் தனது மகனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்று அங்கு அவனை வெட்டிக் கொன்றார். அப்போது பிரிண்டன் கான்சாலிசுக்கு வயது 4.
குழந்தை கொல்லப்பட்டது குடும்பத்துக்கு தெரியாது அவனது உறவினர்கள் 2 மாதமாக தேடினார்கள்.
இந்த நிலையில் அந்த குழந்தையின் தாய் நடத்தி வந்த பட்டறையில் ரத்த கறைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹெங்க் மகனை கொன்றது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்து விட்டார்.
இதையொட்டி போலீசார் ஹெங்கை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அமெரிக்கா முழுவதும் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடவுளுக்கு எதிரானவன் என்பதால் மகனை கொன்றதாக ஹெங்க் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கில் இப்போது கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. ஹெங்குக்கு ஆயுள் தண்டனை வித்தித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அவரை பரோலில் கூட வெளியே விடக்கூடாது என்றும் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

