02-26-2005, 10:27 PM
<b>மதுரன், முதலில் ஏன் மொழிபெயர்ப்பும், கலைச்சொல்லாக்கலும் தேவையென்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் பாவிக்கும் பொருட்களுக்கும், எங்கள் கல்வித்தேவைக்குமே பெயர் தேடுகின்றோம். பாவிக்காவிட்டால் எங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தேவையில்லை (பெயர் கூடத் தேவையில்லை).
கொக்காரை
பண்ணாடை
காவோலை
பனம் வட்டு
பனம் மட்டை
பிணாட்டு
பனங்காஇ பணியாரம்
இவற்றை ஆங்கிலமயப்படுத்த தேவையில்லை, காரணம், ஆங்கிலேயனுக்கு இவை தேவையில்லை.
அதே நேரத்தில், கட்டுமரம், வெற்றிலை, கறி, காசு, சுருட்டு, கூலி போன்ற சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே பாவிக்கின்றார்கள்.
கட்டுமரம் - catamaran
வெற்றிலை - betal
கறி - curry
காசு - cash
சுருட்டு - cherrot
கூலி - coolie
அதாவது ஒரு மொழி வளரும்போது, வேற்றுமொழிகளில் இருந்து சொற்களைக் கடன்வாந்கியே வளர்கின்றது.
இன்று நாங்கள் பேசும் தமிழும், பண்டைய தமிழும் ஒன்றா? தமிழ் தூய மொழி என்று கூறமுடியுமா? வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ் செழுமை பெற்றிருக்கமுடியுமா?
தமிழ் எழுத்துக்களைச் செம்மை செய்தவரே ஒரு அந்நியர்தான். வீரமா முனிவர் என்பவர்தான் தமிழ் எழுத்துவடிவங்களை ஒழுங்கமைத்தவர்.
தனித்தமிழ் என்று வெளிக்கிட்டால் நாங்கள் இன்னமும் பின்னோகியே போவோம். தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படக்கூடிய சொற்களை அப்படியே எடுப்பதுதான் நல்லது.
மேலும், நவீன தொழில்னுட்பங்கள் வளரும் வேகத்திற்கு எமது தமிழாக்கம் ஈடு கொடுக்க முடியாததால்தான், இன்றும் பலவற்றுக்கு தமிழ்பதங்கள் இல்லை. இப்படியேபோனால் நாங்கள் மொழிபெயர்ர்பில்தான் காலத்தை ஓட்ட வேண்டி வரும்.</b>
நாங்கள் பாவிக்கும் பொருட்களுக்கும், எங்கள் கல்வித்தேவைக்குமே பெயர் தேடுகின்றோம். பாவிக்காவிட்டால் எங்களுக்கு அதைப் பற்றி எதுவுமே தேவையில்லை (பெயர் கூடத் தேவையில்லை).
கொக்காரை
பண்ணாடை
காவோலை
பனம் வட்டு
பனம் மட்டை
பிணாட்டு
பனங்காஇ பணியாரம்
இவற்றை ஆங்கிலமயப்படுத்த தேவையில்லை, காரணம், ஆங்கிலேயனுக்கு இவை தேவையில்லை.
அதே நேரத்தில், கட்டுமரம், வெற்றிலை, கறி, காசு, சுருட்டு, கூலி போன்ற சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே பாவிக்கின்றார்கள்.
கட்டுமரம் - catamaran
வெற்றிலை - betal
கறி - curry
காசு - cash
சுருட்டு - cherrot
கூலி - coolie
அதாவது ஒரு மொழி வளரும்போது, வேற்றுமொழிகளில் இருந்து சொற்களைக் கடன்வாந்கியே வளர்கின்றது.
இன்று நாங்கள் பேசும் தமிழும், பண்டைய தமிழும் ஒன்றா? தமிழ் தூய மொழி என்று கூறமுடியுமா? வடமொழிக் கலப்பில்லாமல் தமிழ் செழுமை பெற்றிருக்கமுடியுமா?
தமிழ் எழுத்துக்களைச் செம்மை செய்தவரே ஒரு அந்நியர்தான். வீரமா முனிவர் என்பவர்தான் தமிழ் எழுத்துவடிவங்களை ஒழுங்கமைத்தவர்.
தனித்தமிழ் என்று வெளிக்கிட்டால் நாங்கள் இன்னமும் பின்னோகியே போவோம். தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்படக்கூடிய சொற்களை அப்படியே எடுப்பதுதான் நல்லது.
மேலும், நவீன தொழில்னுட்பங்கள் வளரும் வேகத்திற்கு எமது தமிழாக்கம் ஈடு கொடுக்க முடியாததால்தான், இன்றும் பலவற்றுக்கு தமிழ்பதங்கள் இல்லை. இப்படியேபோனால் நாங்கள் மொழிபெயர்ர்பில்தான் காலத்தை ஓட்ட வேண்டி வரும்.</b>
<b> . .</b>

