02-26-2005, 05:39 PM
எந்த சொல்லும் சொல்வதில் கடினம் இல்லை அன்பர் [size=18]<b>கிருபன்ஸ்</b> அவர்களே. மும்பாயில் இருந்து அதி வேக தொடரூந்து. என பெயர் வைத்தாலும் பொருந்தும். ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள், எந்த ஒரு சொல்லையும் திரும்ப திரும்ப சொல்லும் பொழுது அச் சொல்லானது நமது நாவிற்கு நண்பனாகிவிடும். சொன்னத சொல்லுமாம் கிளிப்பிள்ளை. தொடர்ந்து ஒரு சொல்லை சொன்னால் அது உங்களுக்கு பழக்கப்பட்டு விடும். அதனாலே தமிழிலுள்ள கலைச் சொற்களை கண்டு பிடித்து சொல்வதில் என் போன்றோருக்கு ஒன்றும் கடினம் இல்லை. எனவே கமல் தனது திரை படத்திற்கு மும்பயில் இருந்து அதி வேகதொடரூந்து என்றுதான் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அல்ல. வேறு பொருள் தரக்கூடிய பெயர்கூட வைத்துக்கொள்ளலாம். தமிழ் மீது பற்றுடயவன் தமிழில்த்தான் பெயர் வைத்துக்கொள்வான். தமிழில் திரைப்படங்கலுக்கு பெயர் வைத்துக்கொள்ளுங்கள் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் சொல்லிய சில நாட்களிலேயே வேண்டும் என்றே தனது படத்திற்கு, ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்தான் கமல் என்பது நினைவில் நிற்கட்டும்.
திராவிடகட்சிகள் பற்றி சொன்னீர்கள். மிகவும் வேடிக்கையான உங்களின் வாதம் இது. திராவிட கட்சிகளை நம்பியா நமது தமிழ்த்தாய் உயிர் வாழ வேண்டும். வேண்டுமானால் திராவிட கட்சிகளும் தமிழ்தாயை பாதுகாக்கலாமேயொளிய. தமிழ்த்தாய் திராவிட கட்சிகளிற்கு சொந்தமானது அன்று. தமிழ் துரோகிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும். எந்த நாட்டில் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்கள் தமிழ்த் தாயின் துரோகிகளே.
சித்திரமும் கை பழக்கம்.
செந்தமிழும் நா பழக்கம்.
திராவிடகட்சிகள் பற்றி சொன்னீர்கள். மிகவும் வேடிக்கையான உங்களின் வாதம் இது. திராவிட கட்சிகளை நம்பியா நமது தமிழ்த்தாய் உயிர் வாழ வேண்டும். வேண்டுமானால் திராவிட கட்சிகளும் தமிழ்தாயை பாதுகாக்கலாமேயொளிய. தமிழ்த்தாய் திராவிட கட்சிகளிற்கு சொந்தமானது அன்று. தமிழ் துரோகிகள் யாராக இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும். எந்த நாட்டில் எந்த வடிவத்தில் இருந்தாலும், அவர்கள் தமிழ்த் தாயின் துரோகிகளே.
சித்திரமும் கை பழக்கம்.
செந்தமிழும் நா பழக்கம்.

