02-25-2005, 09:19 PM
ஏன்
சீதைகள் இங்கு
போகப்பொருளாய் கடத்தப்படவா.?
கற்பிழந்திருக்க கு}டும் என்று
கணவன் சந்தேகப்படவா..??
சீதைகள் இங்கு வேண்டாம்
சந்தேகப்படும் கணவனை
திருப்பி கேள்வி கேட்டிட
புதுமைப்பெண்கள் வேண்டும்
என்நிலையிலும் தன் நிலை
தளர மாட்டோம் என்று நிருபீக்க
கணவனின் பிழைகளை தட்டிக்கேட்க
புதுமையாய் பெண்கள் வேண்டும்.
இராவணனனை சிறையெடுக்க
ஏது தேவை பெண்மைக்கு
மாயை கொண்ட
இராவணன்கள் நாய் போல்
பின்னால் அலைகையில்
பெண்மை
தம்மைச்சுற்றியுள்ள விலங்குகளை
தகர்க்க தான் துடிக்கிறது
விலங்குகளாய் மாறிடவல்ல..??
சிறை உடைப்பது
திசைமாறிட அல்ல
பெண்மையி;ன் திறன் காட்டிட
நெறி தவறுவதற்காய்
பெண்மை சிறை உடைக்க தேவையில்லை
பெண்கள் என்றும் மாயமானாய் அல்ல
உங்கள் பார்வையில்
உள்ளது மாயை
விலக்கிவிட்டால் புரியும் உண்மை நிலை
பெய்யென மழை பெய்வதும்
நில்லென சு}ரியன் நிற்பதும்
கதைகளில் கு}ட பெண்மையால் தான் முடியுமா..??
ஏன் ஆண்மைக்கு சக்தியில்லையா.. இல்லை
உங்களில் கற்பில்லையா??
நிருபித்து காண்பியுங்கள்
கற்பினை புரிய வைத்திட
மழைபொழிவது பெரிதல்ல
உங்களவளின் கற்பினை
கணித்திட உங்களிற்கு வக்கில்லையா..??
எதுக்கு இயற்கையை வைத்து பரிசோதனை..??
உங்கள் புரிந்துணர்வால் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களிற்குரியவளின் கற்பின் ஆழத்தை..??
கணவன் சொன்னதற்காய்
கைகட்டி வாய் பொத்தி
சேவகம் செய்திடும் நிலையில்
இங்கு இன்று பெண்மைகள் இல்லை
கணவன்கள் யாவும் ராமன்கள் அல்ல
சொன்னவுடன் தீயில் குழித்திட
பெண்கள் எல்லாம் கண்ணகிகள் அல்ல
மீண்டும் வருவான் எனக்காத்திருக்க
மீண்டும் வந்த பின் ஏற்றுக்கொள்ள.
ராமன்களாய் வேண்டாம்
மனிசனாய் இருந்தால்
மதித்து நடப்பாள்
மாயை என்று மானாய் பார்த்தால்
மாயையும் அல்ல மானும் அல்ல
மனிசி என நிருபிக்க வேண்டியது
பெண்மையின் கடமை
சீதைகள் இங்கு
போகப்பொருளாய் கடத்தப்படவா.?
கற்பிழந்திருக்க கு}டும் என்று
கணவன் சந்தேகப்படவா..??
சீதைகள் இங்கு வேண்டாம்
சந்தேகப்படும் கணவனை
திருப்பி கேள்வி கேட்டிட
புதுமைப்பெண்கள் வேண்டும்
என்நிலையிலும் தன் நிலை
தளர மாட்டோம் என்று நிருபீக்க
கணவனின் பிழைகளை தட்டிக்கேட்க
புதுமையாய் பெண்கள் வேண்டும்.
இராவணனனை சிறையெடுக்க
ஏது தேவை பெண்மைக்கு
மாயை கொண்ட
இராவணன்கள் நாய் போல்
பின்னால் அலைகையில்
பெண்மை
தம்மைச்சுற்றியுள்ள விலங்குகளை
தகர்க்க தான் துடிக்கிறது
விலங்குகளாய் மாறிடவல்ல..??
சிறை உடைப்பது
திசைமாறிட அல்ல
பெண்மையி;ன் திறன் காட்டிட
நெறி தவறுவதற்காய்
பெண்மை சிறை உடைக்க தேவையில்லை
பெண்கள் என்றும் மாயமானாய் அல்ல
உங்கள் பார்வையில்
உள்ளது மாயை
விலக்கிவிட்டால் புரியும் உண்மை நிலை
பெய்யென மழை பெய்வதும்
நில்லென சு}ரியன் நிற்பதும்
கதைகளில் கு}ட பெண்மையால் தான் முடியுமா..??
ஏன் ஆண்மைக்கு சக்தியில்லையா.. இல்லை
உங்களில் கற்பில்லையா??
நிருபித்து காண்பியுங்கள்
கற்பினை புரிய வைத்திட
மழைபொழிவது பெரிதல்ல
உங்களவளின் கற்பினை
கணித்திட உங்களிற்கு வக்கில்லையா..??
எதுக்கு இயற்கையை வைத்து பரிசோதனை..??
உங்கள் புரிந்துணர்வால் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களிற்குரியவளின் கற்பின் ஆழத்தை..??
கணவன் சொன்னதற்காய்
கைகட்டி வாய் பொத்தி
சேவகம் செய்திடும் நிலையில்
இங்கு இன்று பெண்மைகள் இல்லை
கணவன்கள் யாவும் ராமன்கள் அல்ல
சொன்னவுடன் தீயில் குழித்திட
பெண்கள் எல்லாம் கண்ணகிகள் அல்ல
மீண்டும் வருவான் எனக்காத்திருக்க
மீண்டும் வந்த பின் ஏற்றுக்கொள்ள.
ராமன்களாய் வேண்டாம்
மனிசனாய் இருந்தால்
மதித்து நடப்பாள்
மாயை என்று மானாய் பார்த்தால்
மாயையும் அல்ல மானும் அல்ல
மனிசி என நிருபிக்க வேண்டியது
பெண்மையின் கடமை
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

