Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி
#1
பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி அப்துல்கலாம் "நாம் எங்கு இருக்கிறோம்," என்ற தலைப் பில் தமிழில் ஒரு கவிதை வாசித்தார். இன்று காலை தான் அந்த கவிதையை எழுதி யதாக கூறிய அவர் அதை நிதானமாக வாசித்துக் காட்டினார். அந்த கவிதை வருமாறு:-

எங்கிருக்கிறோம் நாம்,
என்னருமை நண்பர்களே,
இந்திய மக்களின்
இதயவொலி அழைப்பிற்கு,
வரலாற்று வடிவம் தரும்
மகாசபையில்
இருக்கின்றோம்.
மக்கள் நமை கேட்கிறார்கள்.
மக்கள் நமை கேட்கிறார்கள்;
"பாராளுமன்றத்து பாரதத் தாய் சிற்பிகளே,
எங்களது வாழ்விற்கு வளங் கொடுங்கள், ஒளி கொடுங்கள்.
உங்களது நல்லுழைப்பே,
எங்களுக்கு ஒளிவிளக்கு
உயர்ந்திடலாம் நாமெல்லாம்,
உண்மையிலே நீவிர்
உழைத்தால்"
அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழியே.
வளருங்கள் எண்ணத்தில். உயருங்கள் செயலில் நீர்.
வாய்மை முறை உங்களுக்கு,
வழித்துணையாய் ஆகட்டும்.
நீவிர் எல்லோரும் வாழ்க! இறைகருணையால் என் றென்றும்.

Maalaimalr
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பாராளுமன்றத்தில் தமிழில் கவிதை பாடிய ஜனாதிபதி - by Vaanampaadi - 02-25-2005, 01:41 PM
[No subject] - by வியாசன் - 02-25-2005, 02:20 PM
[No subject] - by tamilini - 02-25-2005, 04:50 PM
[No subject] - by Mathuran - 02-25-2005, 04:52 PM
ஜனாதிபதி - by eelapirean - 02-25-2005, 05:27 PM
[No subject] - by Malalai - 02-25-2005, 05:52 PM
[No subject] - by vasanthan - 02-25-2005, 07:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)