02-24-2005, 12:19 AM
M.I.A
<img src='http://kavithai.yarl.net/archives/mia.jpg' border='0' alt='user posted image'>
இந்தப் பெண்ணின் புகைப்படமொன்றுடன் இது எப்படியிருக்கு என்ற குறிப்பையும் கருத்துக்களமொன்றில் பார்த்தேன்.சிறிது சுவாரசியம் தரும் வகையில் இருந்த அந்தக் கருத்தைப் பின் தொடர்ந்து இவரது தனிப்பட்ட இணையத் தளத்திற்குப் போனபோது சுவாரசியம் குறைந்து சலிப்பே ஏற்பட்டது.மேற்கத்தைய கலை வடிவங்களை அப்படியே பின்பற்றும் நம்மவர்களில் ஒருத்தர் என்ற அளவிலான புரிந்துகொள்ளலுடன் அது பற்றி மறந்துவிட்டேன்.
காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள்,மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது.கொஞ்சநேரம் கேட்ட 'கலாங்' 'கலாங்' பாடலின் மாதிரி மட்டும் நினைவில் நின்றது
மீண்டும் ஏதோ ஒரு இணைப்பின் வழி அவருடைய தளத்திற்குப் போனபோது ஆச்சரியமாக இருந்தது அதற்குள் இரண்டாவது இசை வட்டை வெளியிட்டிருந்தார்.கூடவே மெருகூட்டப்பட்டிருந்த அவரது தளத்தில் அவர் வெளிப்படையாகச் சொல்லியிருந்த விடயம் என்னைக் கவர்ந்தது.தான் ஈழத்தவள் என்பதைக் குறிப்பிட்டிருந்ததோடு ஈழத்தில் நடக்கும் இனப்பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.அட புகலிடத்தில் அதுவும் ஆங்கிலத்தில் பாட்டுப்பாடி நடனமாடும் பெண்ணுக்கு தனது தாய்நாடு பற்றி இந்தளவு பிரக்ஞை இருக்கிறதே என்பது ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.
இப்போது அப்பால் தமிழில் கி.பி.அரவிந்தன் அவர்களது குறிப்புகளுடன் அவரைப் பற்றிய கட்டுரையை மீண்டும் படித்தப்போது அதுபற்றி எழுதவேண்டுமென்று என்னைத் தூண்டியது
அவர் வேறு யாருமல்ல தற்போது இசைநடன உலகில் முத்திரை பதித்து வரும் M.I.A எனப்படும் 'மாயா' என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம்.
என்னை அதிசயத்தில் ஆழ்த்திய இன்னொரு விடயம் இவர் ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான அருளர் எனப்படும் அருட்பிரகாசத்தின் மகள் என்பதுதான்.இந்த அருளர் தான் லங்காராணி என்னும் நாவலை எழுதியவர்.
மாயா லண்டனில் பிறந்து பின்னர் தந்தையாருடன் ஈழம் போய் திரும்பவும் லண்டன் வந்து மேற்படிப்பை முடித்திருக்கிறார்
தான் நடத்திய ஓவியக் கண்காட்சியில் தாய்நாடான இலங்கையின் வளமான பனையையும் தற்போது நடந்துவரும் போரின் தாக்கத்தையும் காட்சிப்படுத்திருந்தார்.அந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற படங்கள் ரூனர் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.
அவரது இசைவட்டின் முகப்புகளில் கூட ஏதோ ஒருவகையில் ஈழப்போராட்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.தன்னை நேர்காண வரும் பத்திரிகையாளர்களிடம் கூட தனது வாழ்க்கையுடன் பயணிக்கும் ஈழப்போராட்டம் பற்றிக் கூறத் தவறுவதில்லை.
மாயா தனது அடுத்த இசை வட்டுக்கு அருளர் எனத் தந்தையின் பெயரைச் சூட்டியுள்ளார்.தந்தையாரின் கடந்தகால அரசியல் செயற்பாட்டிற்காக இந்த இசை வட்டை அர்ப்பணித்துள்ளார்.
வெளிநாடு போய் அந்த நாட்டுடன் கொஞ்சம் ஒன்றிப்போய் விட்டாலே தமது சுய அடையாளத்தை இழந்துவிடுபவர்கள் மத்தியில் தனது சுய அடையாளத்தை இழந்துவிடாமல் வெளிப்படுத்தி வரும் மாயா பாராட்டுக்கும் கவனிப்புக்கும் உரியவர்.
நன்றி - ஈழநாதன்
<img src='http://kavithai.yarl.net/archives/mia.jpg' border='0' alt='user posted image'>
இந்தப் பெண்ணின் புகைப்படமொன்றுடன் இது எப்படியிருக்கு என்ற குறிப்பையும் கருத்துக்களமொன்றில் பார்த்தேன்.சிறிது சுவாரசியம் தரும் வகையில் இருந்த அந்தக் கருத்தைப் பின் தொடர்ந்து இவரது தனிப்பட்ட இணையத் தளத்திற்குப் போனபோது சுவாரசியம் குறைந்து சலிப்பே ஏற்பட்டது.மேற்கத்தைய கலை வடிவங்களை அப்படியே பின்பற்றும் நம்மவர்களில் ஒருத்தர் என்ற அளவிலான புரிந்துகொள்ளலுடன் அது பற்றி மறந்துவிட்டேன்.
காதில் வளையம் வளையமாகத் தோடுகள் கழுத்திலே தூங்கும் நாய்ச்சங்கிலிகளுடன் உலாவரும் எம்மவர்கள்,மைக் பிடித்து ரப் பாடும் இளஞர் இளஞிகள் போன்றோரை நண்பர்களூடும் செய்திகளுடூம் பார்த்தும் கேட்டும் வந்ததால் இதுவும் ஆயிரத்தில் ஒன்று என்றே எண்ணத் தோன்றியது.கொஞ்சநேரம் கேட்ட 'கலாங்' 'கலாங்' பாடலின் மாதிரி மட்டும் நினைவில் நின்றது
மீண்டும் ஏதோ ஒரு இணைப்பின் வழி அவருடைய தளத்திற்குப் போனபோது ஆச்சரியமாக இருந்தது அதற்குள் இரண்டாவது இசை வட்டை வெளியிட்டிருந்தார்.கூடவே மெருகூட்டப்பட்டிருந்த அவரது தளத்தில் அவர் வெளிப்படையாகச் சொல்லியிருந்த விடயம் என்னைக் கவர்ந்தது.தான் ஈழத்தவள் என்பதைக் குறிப்பிட்டிருந்ததோடு ஈழத்தில் நடக்கும் இனப்பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.அட புகலிடத்தில் அதுவும் ஆங்கிலத்தில் பாட்டுப்பாடி நடனமாடும் பெண்ணுக்கு தனது தாய்நாடு பற்றி இந்தளவு பிரக்ஞை இருக்கிறதே என்பது ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.
இப்போது அப்பால் தமிழில் கி.பி.அரவிந்தன் அவர்களது குறிப்புகளுடன் அவரைப் பற்றிய கட்டுரையை மீண்டும் படித்தப்போது அதுபற்றி எழுதவேண்டுமென்று என்னைத் தூண்டியது
அவர் வேறு யாருமல்ல தற்போது இசைநடன உலகில் முத்திரை பதித்து வரும் M.I.A எனப்படும் 'மாயா' என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம்.
என்னை அதிசயத்தில் ஆழ்த்திய இன்னொரு விடயம் இவர் ஈரோஸ் அமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான அருளர் எனப்படும் அருட்பிரகாசத்தின் மகள் என்பதுதான்.இந்த அருளர் தான் லங்காராணி என்னும் நாவலை எழுதியவர்.
மாயா லண்டனில் பிறந்து பின்னர் தந்தையாருடன் ஈழம் போய் திரும்பவும் லண்டன் வந்து மேற்படிப்பை முடித்திருக்கிறார்
தான் நடத்திய ஓவியக் கண்காட்சியில் தாய்நாடான இலங்கையின் வளமான பனையையும் தற்போது நடந்துவரும் போரின் தாக்கத்தையும் காட்சிப்படுத்திருந்தார்.அந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற படங்கள் ரூனர் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.
அவரது இசைவட்டின் முகப்புகளில் கூட ஏதோ ஒருவகையில் ஈழப்போராட்டம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.தன்னை நேர்காண வரும் பத்திரிகையாளர்களிடம் கூட தனது வாழ்க்கையுடன் பயணிக்கும் ஈழப்போராட்டம் பற்றிக் கூறத் தவறுவதில்லை.
மாயா தனது அடுத்த இசை வட்டுக்கு அருளர் எனத் தந்தையின் பெயரைச் சூட்டியுள்ளார்.தந்தையாரின் கடந்தகால அரசியல் செயற்பாட்டிற்காக இந்த இசை வட்டை அர்ப்பணித்துள்ளார்.
வெளிநாடு போய் அந்த நாட்டுடன் கொஞ்சம் ஒன்றிப்போய் விட்டாலே தமது சுய அடையாளத்தை இழந்துவிடுபவர்கள் மத்தியில் தனது சுய அடையாளத்தை இழந்துவிடாமல் வெளிப்படுத்தி வரும் மாயா பாராட்டுக்கும் கவனிப்புக்கும் உரியவர்.
நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

