02-22-2005, 08:32 PM
கைகூடாத காதலின் சாட்சியாக....
என் சுவாச அறைகளின்
சுழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.
கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.
கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி....
முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.
கூடப்பிறந்தவர்க்கும் ää
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.
அம்மாவிடம் உன்னைப்பற்றி
விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !
உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களையும்
இப்போதும் நினைத்தபடி - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....
22.02.05
என் சுவாச அறைகளின்
சுழற்சியாய் இருந்தவளே !
காதல் வார்த்தையையே
கௌரவப்படுத்திய கற்பூரமே.
கடைசியாய் நீ தந்த கடிதம்
என்றோ நீ சொன்னது போல
கைகூடாத காதலின் சாட்சியாக....
உனது கண்ணீர் முழுவதையும்
கட்டியனுப்பிய கடலது.
கட்டுநாயக்கா நான் தாண்ட
நஞ்சு தின்ற என் காதலியே !
எங்கேயடி இருக்கிறாய் ?
கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....
கண்ணீரைத் துடைத்தபடி....
முதற் காதல் - நீ
தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்
இன்னும் விரல்களில்....
வாசமடிக்கிறது.
கூடப்பிறந்தவர்க்கும் ää
உன்னைக் காதலிக்க
உயிர் தந்தவர்க்கும்
அர்ப்பணமாய் என் காதல்.
அம்மாவிடம் உன்னைப்பற்றி
விசாரித்தேன்.
நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.
கனவெல்லாம் என்னை நிரப்பி
உன் வாழ்வையே தறித்து
எனக்கு வாழ்வு தந்தவளே !
உன்னோடு கழிந்த
ஒவ்வொரு கணங்களையும்
இப்போதும் நினைத்தபடி - நான்
இன்னொருத்தியின் கணவனாக.....
22.02.05
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

