![]() |
|
கைகூடாத காதலின் சாட்சியாக.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கைகூடாத காதலின் சாட்சியாக.... (/showthread.php?tid=5083) |
கைகூடாத காதலின் சாட்சியாக.... - shanthy - 02-22-2005 கைகூடாத காதலின் சாட்சியாக.... என் சுவாச அறைகளின் சுழற்சியாய் இருந்தவளே ! காதல் வார்த்தையையே கௌரவப்படுத்திய கற்பூரமே. கடைசியாய் நீ தந்த கடிதம் என்றோ நீ சொன்னது போல கைகூடாத காதலின் சாட்சியாக.... உனது கண்ணீர் முழுவதையும் கட்டியனுப்பிய கடலது. கட்டுநாயக்கா நான் தாண்ட நஞ்சு தின்ற என் காதலியே ! எங்கேயடி இருக்கிறாய் ? கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்.... கண்ணீரைத் துடைத்தபடி.... முதற் காதல் - நீ தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள் இன்னும் விரல்களில்.... வாசமடிக்கிறது. கூடப்பிறந்தவர்க்கும் ää உன்னைக் காதலிக்க உயிர் தந்தவர்க்கும் அர்ப்பணமாய் என் காதல். அம்மாவிடம் உன்னைப்பற்றி விசாரித்தேன். நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள். கனவெல்லாம் என்னை நிரப்பி உன் வாழ்வையே தறித்து எனக்கு வாழ்வு தந்தவளே ! உன்னோடு கழிந்த ஒவ்வொரு கணங்களையும் இப்போதும் நினைத்தபடி - நான் இன்னொருத்தியின் கணவனாக..... 22.02.05 - tamilini - 02-22-2005 நன்றாய் இருக்கக்கா கவிதை.
- வியாசன் - 02-22-2005 சாந்தி முடிவு எங்கள் வாழ்வின் யதார்த்தத்தை காட்டுகிறது ஆனால் இப்போதெல்லாம் காதல் தோல்விக்காக சாகிறதெல்லாம் அபூர்வம் எம்மவர்கள் ஜீரணிக்க பழகிவிட்டார்கள் ஏனென்றால் எங்கள் காதலில் 95 வீதம் தோல்வியில்தான் முடிகிறது. ஆனால் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. கார்த்திகைப்பூவைப் போல வருகிறீர்கள் ஆனால் அற்புதமான கவிதைகளுடன் வருகிறீர்கள் வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா? - shanmuhi - 02-22-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> உங்களுக்காக கவிதையென்ன பாடலே வருகிறது.இந்தப்பக்கம் போய் கொஞ்சம் தலைகாட்டுங்கள். மகிழ்வீர்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=60
- kavithan - 02-22-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அம்மாவிடம் உன்னைப்பற்றி விசாரித்தேன். நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள். கனவெல்லாம் என்னை நிரப்பி உன் வாழ்வையே தறித்து எனக்கு வாழ்வு தந்தவளே ! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> வாழ்வு தந்தவளாய் இருந்தாலும் அவளின் வாழ்வைப்பறிக்க காரணம் இவர் தானே... நன்றாக இருகிறது நீண்ட காலத்தின் பின் உங்கள் கவிதைகளை கண்டது மகிழ்ச்சி. - kavithan - 02-22-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் யார் உங்களை ஏமாற்றியது.... - வியாசன் - 02-22-2005 ஏன் கவிதன் அதிகம் ஆண்கள்தானே ஏமாற்றப்படுகிறர்கள். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை - shanthy - 02-22-2005 வாழ்த்திய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள். - shanthy - 02-22-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->சாந்தி முடிவு எங்கள் வாழ்வின் யதார்த்தத்தை காட்டுகிறது ஆனால் இப்போதெல்லாம் காதல் தோல்விக்காக சாகிறதெல்லாம் அபூர்வம் எம்மவர்கள் ஜீரணிக்க பழகிவிட்டார்கள் ஏனென்றால் எங்கள் காதலில் 95 வீதம் தோல்வியில்தான் முடிகிறது. ஆனால் உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. கார்த்திகைப்பூவைப் போல வருகிறீர்கள் ஆனால் அற்புதமான கவிதைகளுடன் வருகிறீர்கள் வாழ்த்துக்கள் ஒரு வேண்டுகோள் எனக்காக ஒரு கவிதை பெண்களால் ஏமாற்றப்பட்ட ஆண்களுக்காக தரமுடியுமா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இக்கவிதையின் நாயகி இறந்துவிட்டாள். ஆனால் அவளின் காதலன் இன்னொருத்தியின் கணவன். தனக்காகச் செத்தவளின் நினைவுகளை அவன் இன்னும் மறக்காமல் வாழ்கிறான். அதைச்சரியென்று ஏற்றுக் கொள்ளவில்லையென்பதையும் கூறிக்கொள்கிறேன். - வியாசன் - 02-22-2005 ஆனால் நினைவுகள் மழைக்கால காளான்கள்போல முளைவிடத்தானே செய்கிறது. முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்கமுடியாதாம் - vasisutha - 02-23-2005 shanthy akka நீண்ட நாட்களின் பின் நல்ல கவிதை ஒன்றுடன் வந்திருக்கிறீர்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- hari - 02-23-2005 நல்ல கவிதை, வாழ்த்துக்கள்! - Malalai - 02-23-2005 சேர்ந்து வாழ்தல் காதலின் வெற்றியின் அறிகுறியல்ல கல்யாணத்தில் முடிந்த காதல்கள் எத்தனை இதயத்தில் இதமாய் இனிக்கிறது? காதலி உயிர் பிரிந்தும் காதலியின் உயிரில் கலந்து விட்ட இந்தக் காதல் காலத்தையும் வென்று நிற்கிறது கவிதை அருமை...வாசிக்கும் பொழுது ரணமாகிவிட்டது மனம்...உண்மைக் கதையா இது?
- shiyam - 02-23-2005 அன்பே என்பாள் ஆருயிரேயென்பாள் நீயன்றி நானில்லையென்பாள் நீதான் நானென்பாள் முடிந்தால் முதலைக் கண்ணீரும்விடுவாள் ஏமாந்துவிடாதே வியாசனே ஏனென்றால் இறுதியில் அப்பாஅம்மாவின் முடிவே தன்முடிவெண்று தண்ணிகாட்டிவிட்டு போய்விடுவாள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 02-23-2005 ம் சாந்தியக்கா சொன்ன கதையில என்ன நடந்தது என்று.. பாத்தியள் தானே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-23-2005 நீண்ட காலத்தின் பின் சாந்தியக்காவின் கவிதை கண்டதில் மகிழ்ச்சி...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-23-2005 கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????! :wink: :roll: - shiyam - 02-23-2005 காதலின் மிக பெரிய வெற்றியே தோற்பதுதானே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> கலியாணத்தில் முடிவதுதான் காதலின் வெற்றி என்று தமிழர்கள் உங்களுக்கு யார் விதி வைச்சது...????! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ம் அது வேறையா.. அப்ப எதை வெற்றி என்பார்கள்..?? :wink: :mrgreen: - Malalai - 02-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> முடிந்தால் முதலைக் கண்ணீரும்விடுவாள் ஏமாந்துவிடாதே வியாசனே <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன சியாம் அண்ணா, அண்ணிட்ட சொல்லுறதோ :evil: :wink: |