08-21-2003, 05:58 PM
' Wrote:மதி தாத்தா,நன்றி rajani உங்கள் கருத்துக்கு நன்றி. நான் எனது கருத்தை ஒப்பிட்டு எழுதும்போது பொதுப்படையாக எது வசதியோ.. அல்லது எது சமகாலத்தில் உலவுகிறதொ அதைத்தான் ஒப்பிட்டு எழுதுவேன்.. அதை இவர்கள் அரசியலாக எடுத்துப்பார்ப்பது எனது குற்றமல்ல. ஒரு ஆசிரியனுக்கு தெழில் படிப்பிப்பது. ஆனால் படிப்பவர்களுக்கு எது பிடிக்குமொ அதைத்தான் ஆசிரியர் படிப்பிக்கலாமே தவிர ஆசிரியன் தனக்குப் பிடித்தை படிப்பிக்க முடியாது. அதாவத நான் எழுதுவதை இவர்கள் படித்து அரசியல் என்று சொல்வார்களேயானால். அவர்களுக்குப் பிடித்த பாடம் எது.?அதாவது படிக்கவிரும்பும் கருத்தை எழுதுகிறேனே தவிர தவிர அரசியலையல்ல.
உங்கள் துணிவு என்னைக் கவர்ந்த ஒரு விடயம்.இந்த இணையத்திற்கு வந்து எழுதாவிடினும் உங்கள் கருத்துக்களை ஆர்வத்துடன் படித்துச் செல்வேன்.சில நியாயங்கள் பிறக்க கலகங்களுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பது யதார்த்தமாக இருக்கின்றது.ஆனால் களத்திலே உங்கள் வாழ்க்கையே கலகமாக ஆனால் விறு விறுப்பாகத்தான் இருந்தது.
இந்தச் சின்ன மூளைக்கு எட்டும் ஆழ்ந்த யோசனையொன்றிருக்கின்றது.முடிந்தால் குறை நினைக்காமல் ஒரு கணம் சிந்தித்துப்பாருங்களேன்.அதாவது மோகன் அண்ணா கூற முனைவதை அவரது இடத்திலிருந்து சற்று புரிந்து கொள்ளலாமே.
அதே போன்று மோகன் அண்ணாவும் யதார்த்தமான கருத்து சுதந்திரத்தை மனதிற்கொண்டு தாத்தாவையும் பார்க்கலாமே.ஒரேயடியாக தாத்தா அனைத்து தலைப்புகளுக்குள்ளும் அரசியலைக் கொண்டுவருவதுதான் தாத்தாவின் குறையாகவுள்ளதெனில் தாத்தாவும் அரசியல் தவிர்ந்த ஏனைய தலைப்புகளில் அவற்றைத் தவிர்க்கலாமே?
ஏதோ குறை நினைக்க வேண்டாம் தாத்தா உங்கள் மீது கொண்டிருக்கும் அபிமானத்திலும் அதே நேரம் யாழ் இணையத்தின் சுவாரஸ்யம் கருதியுமே எனது கருத்தினை முன்வைத்தேன்.தவறிருந்தால் அனைவருமாக என்னை மன்னித்துவிடுங்கள்.
நன்றி வணக்கம்.
Truth 'll prevail

