Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#65
இன்றைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் அவசியம்

புலம்பெயர்ந்த தமிழ்ப் புத்தி ஜீவிகளின் முன்பாகவுள்ள தலையாய கடமை

-தில்லைக்கூத்தன்-


அநேக வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்கு அநேக சாத்வீகப் போராட்டங்களை நடாத்தி அதில் மிகமோசமான தோல்வியைத் தழுவினார்கள் என்பது உலகறிந்த விடயம்.

சேர் பொன். இராமநாதன் 75 சதவீதத்துக்குமேல் அவருடைய நேரத்தை சிங்கள சமுதாயத்துக்கும் பௌத்த மதத்துக்கும் தான் செலவழித்தார் என்பது நாமறிந்த உண்மை. இன்று வெசாக் தினம் பொதுசன விடுமுறையாக இருப்பதற்கு அவர்தான் காரணம். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் அரசாங்கம் சிங்கள மக்களிடம் தாங்க முடியாத தானிய வரியை அறவிட்டு அதன் விளைவாக அவர்கள் அடைந்த துன்பத்தை நாம் அறிவோம்.

1915 ஆம் ஆண்டில் சிங்கள முஸ்லிம் கலவரம் தோன்றிய காலத்தில் அனேக சிங்களத் தலைவர்களை பிரித்தானிய அரசாங்கம் அவர்களைச் சிறைக்கு அனுப்பி எந்த நேரத்திலும் மரணதண்டனையை எதிர்பார்த்தனர்.

இந்தக் கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத சேர் பொன். இராமநாதன் தனது உயிரையும் மதிக்காமல் இங்கிலாந்து சென்று சிங்கள தேசியத் தலைவர்களுக்கு உயிர்ப் பிச்சை எடுத்துக் கொடுத்தார். இந்த வெற்றியை அடைந்த பின்பு சேர் பொன். இராமநாதன் வெற்றிவாகையுடன் திரும்பிவந்த பொழுது அவரை கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவருடைய வீடுவரை சிங்களத் தலைவர்கள் குதிரைகளாக மாறி அவரை வண்டியில் வைத்து அவர் வீடு வரை அழைத்துச் சென்றமை சகலருக்கும் தெரிந்த விடயம்.

அவர் சிங்களத் தலைவர்களுக்கு (உயிர்ப்பிச்சை) எடுத்துக் கொடுத்ததற்கு தங்கள் நன்றியை பகிரங்கமாகச் செய்தார்கள். சேர் பொன்.இராமநாதனுடைய சேவையை சிங்களத் தலைவர்கள் மறந்து அவருக்கு மிகக் கொடிய துரோகத்தை உண்டு பண்ணியது இன்றுவரை தன்மானமுள்ள எந்தத் தமிழனும் மறக்கமாட்டான். அவருடைய பிற்கால வாழ்க்கை மிகவும் விரக்தியடைந்த ஒன்று. இன்று யாழ். குடா நாட்டில் அவர் விரக்தியின் காரணமாக திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரியை ஸ்தாபித்தும் சுன்னாகத்தில் பெண்களுக்கு ஒரு தனியான கல்லூரியையும் அமைத்தார். அவர் அடைந்த விரக்தியை இது நன்கு புலப்படுத்திவிட்டது.

இதன் விளைவாக இன்று அந்த இரு ஸ்தாபனங்களும் பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுவிட்டன. அவர் துயரத்தில்தான் தனது பிற்கால வாழ்க்கையை செலவழித்தார். அவர் பின்பு தமிழ்த் தலைவர்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்கு அநேக சாத்வீகப் போராட்டங்களை நடாத்தி அது ஒன்றாவது வெற்றியளிக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு முக்கிய விடயத்தை நாம் தன்மானமுள்ள தமிழர்களுக்கு சொல்லவிரும்புகின்றோம். சிங்களவர்கள் தமிழரின் எஜமானர்கள் அல்ல அல்லது தமிழர்கள் சிங்களவரின் கூலியாட்களாகவும் இல்லை. இந்த நிலைப்பாட்டை தன்மானமுள்ள தமிழர்கள் மறந்துவிடப்படாது.

தமிழர்கள் செய்த சாத்வீக உரிமைப் போராட்டங்கள் எல்லாம் படுதோல்வியைத் தழுவிய காரணத்தினால் விரக்தி அடைந்த தமிழ் இளைஞர்கள் தங்களுடைய சுயமரியாதையையும் தன்மானத்தையும் காப்பாற்றுவதற்காக வட கிழக்கில் நிலை கொண்டிருந்த சிங்கள இராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி சுதந்திரப் போரை ஆரம்பித்தார்கள். இந்தச் சுதந்திரப் போராட்டத்துக்கு அநேக குழுக்கள் தோன்றினாலும் பிரபாகரன் அமைத்த விடுதலைப் புலிகள் இயக்கம் தான் அநேக இராணுவ வெற்றிகளை ஈட்டியதுமல்லாமல் சர்வதேச அரங்கில் அவர்கள் இராஜதந்திர அரசியல் துறைகளில் அதி உன்னத மதிப்பைப் பெற்று சர்வதேச சமுதாயத்துடைய ஆதரவையும் பெற்றது சரித்திர உண்மை.

சமீப காலத்தில் வட கிழக்கில் விடுதலைப் புலிகள் தன்னிச்சையாக அறிவித்த யுத்த நிறுத்தத்தையும் மதிக்காமல் அரசாங்கத்துடன் செய்த உடன்பாடுகளையும் மதிக்காமல் சிங்கள இராணுவம் மிகமோசமான கெடுபிடிகளில் செயல்படுவது தமிழினத்தை பூண்டோடு அழிக்கும் கொள்கைக்கு நல்ல உதாரணமாக விளங்குகிறது. இந்த உண்மையை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்துவிட்டது. அப்படியிருந்தும் சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகளை அழிக்கும் செயல்கள் மிகக் கொடிய இராணுவ நடவடிக்கை.

சமீபத்தில் தெற்காசியாவை குலுக்கிய கடல்கோள் விடயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கை மிகமோசமான பாரபட்சம் என்றே நாம் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூற முடியும். இப்படியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தங்கள் பொறுமையை கடைப்பிடித்து சமாதானத் தீர்வையே விரும்புகின்றார்கள். இவ்விதமான பயங்கர சூழ்நிலையில் விருதலைப் புலிகள் தங்கள் பொறுமையை கடைப்பிடித்துவரும் சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த படுகொலைகளை சர்வதேச சமூகம் மிகவும் கடுமையாக கண்டனம் செய்தது. ஐ.நா.வினுடைய செயலாளர் நாயகம் கூட இந்தக் கொடூர செயல்களை கண்டித்து அறிக்கைவிட்டார். இவ்விதமான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் இனிமேலும் பொறுமையைக் கடைப்பிடிப்பார்களா என்ற கேள்வி நிச்சயமாக எழுகின்றது.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களுடைய பொறுமை எல்லை கடந்து அதன் விளைவாக விடுதலைப் புலிகள் தங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டெனக் கருதி செயலில் இறங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகளின் கடமை என்ன?

புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் அனேக துறைகளில் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக செயலில் இறங்கமுடியும்.

1. புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளன.

2. ஐ.நா. மனித உரிமை குழுக் கூட்டங்களில் இந்த விடயத்தை தகுந்த புள்ளிவிபரங்களுடன் எடுத்துக் காட்ட முடியும். ஐ.நா. மனித உரிமைக் குழுவினுடைய ஆதரவைப் பெறுவது மிகவும் அவசியம்.

3. சமாதான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலாவை அழைத்து வடஇ கிழக்கில் நடந்த துயர சம்பவங்களை எடுத்துக் காட்ட முடியும்.

4. ஐ.நா. மனித உரிமைக் குழு தலைவர்களை வட கிழக்கிற்கு அழைத்து சகல உண்மைகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுவது அவசியமாகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நமது புலம் பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் மனித உரிமைக்குப் போராடிய மேரி றொபின்சன் போன்ற தலைவர்களை வடஇ கிழக்கிற்கு அழைத்துவராதது பாரிய தவறு என்றுதான் நாம் கருதுகின்றோம். சுருங்கச் சொல்வதென்றால் புலம்பெயர்ந்த தமிழ் புத்திஜீவிகள் இந்தத் துறையில் அதிக பங்கெடுத்து சர்வதேச ஆதரவைப் பெற்றிருப்பது மிகவும் முக்கியம்.

நமது தமிழ் கூட்டணி பாராளுமன்ற அங்கத்தவர்கள் நமது அயல் நாடாகிய இந்தியாவுக்குச் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை தமிழ் நாட்டுக்கும் மத்திய அரசுக்கும் முறைப்பாடு செய்யாதது தவறென்றே நாம் கருதுகின்றோம்.

ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் அநேக தடவைகள் புது டில்லி சென்று இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுவிட்டார்கள். உதாரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகரான மிலிந்த மொரகொட அநேக தடவைகள் புது டில்லி சென்று அதனுடைய ஆதரவைப் பெற்றார் நிகழப்போகும் இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஐ.தே. கட்சிதான் உருவாக்கியது. ஐ.தே.கட்சியிலும் விட தற்போதைய அரசாங்கம் இந்தியாவினுடைய நட்பை நன்கு பெற்றுவிட்டது. இதன் விளைவாகத்தான் தெற்கு இலங்கையில் ஒரு சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டவுடன் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு சகல உதவிகளையும் செய்தது. வட கிழக்கிற்கு நடைமுறையில் இந்திய அரசாங்கத்தின் உதவி இன்னும் கிடைக்கவில்லை.

புதிய இந்திய ஸ்தானிகர் நியமிக்கப்பட்டபின்பு தமிழர்களுக்காக வரவேற்கத்தக்க மாற்றங்களைக் காணமுடிகின்றது. ஆனால் நடைமுறையில் இந்தியாவினுடைய உதவி தமிழ் மக்களுக்கு இன்னும் சென்றடையவில்லை.

முஸ்லிம் தலைவர்கள் கூட புது டில்லி சென்று தங்களுடைய பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசின் ஆதரவைப் பெறுகின்றார்கள். ஆகவே தமிழர் கூட்டணி பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமிழ் நாட்டுக்கும் புதுடில்லிக்கும் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக் கூறி தமிழர்களுக்கு இந்தியாவினுடைய ஆதரவைப் பெறுவது மிகவும் அவசியம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா இலங்கை மீது செலுத்தும் ஆதிக்கத்தை அமெரிக்கா விரும்பாது. அதேபோல் இந்தியாவும் அமெரிக்காவினுடைய இராணுவ அக்கறையை விரும்பாது.

இது அவர்களுடைய பிரச்சினை. எம்மைப் பொறுத்தவரை எங்களுக்கு இந்தியாவினுடைய ஆதரவும் அமெரிக்காவினுடைய ஆதரவும் தேவைப்படுகிறது. இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு. அதனுடைய பிராந்திய நலனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோல் அமெரிக்கா உலக வல்லரசு இலங்கை ஒரு கேந்திர முக்கிய ஸ்தானத்தை பெற்றபடியினால் அமெரிக்கா நேரடியாக அக்கறையை செயலில் காட்டுகின்றது.

இந்த சூழ்நிலையில் ஒரு பாரிய தவறை இந்திய மத்திய அரசு செய்துவிட்டது. இராஜ தந்திர சரித்திரத்தில் புலனாய்வுத்துறையை வழிநடத்திய ஒரு நபரை இன்னொரு நாட்டிற்கு தூதுவராக நியமிக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கவில்லை. பாகிஸ்தான் இலங்கையில் அதனுடைய புதிய தூதுவர் நியமிக்கப்பட்டபின்பு அநேக மாற்றங்களை காணமுடிகிறது. பாகிஸ்தானுடைய புதிய தூதுவர் பாகிஸ்தானிலுள்ள சகல புலனாய்வுத் துறைகளுடைய ஒருங்கிணைப்பை இவரே வழி நடாத்தினார். அப்படிப்பட்டவரை பாகிஸ்தானிய அரசாங்கம் இலங்கைக்கு தூதுவராக நியமித்தது அநேக சந்தேகங்களை உண்டாக்குகின்றது. முக்கியமாக கிழக்கு இலங்கையில் இந்த தூதுவருடைய நியமனம் நிச்சயம் அநேக சந்தேகங்களை உண்டாக்குகின்றது. இவருடைய நியமனத்தை இந்தியா தனது இராஜதந்திர எதிர்ப்பை மறை முகமாகவேனும் இலங்கை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானுடைய செயற்பாடுகள் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையுமென்பதற்கு அநேக வாய்ப்புகள் உண்டு.

நாம் இந்த விடயத்தில் இந்தியா தன்னுடைய தென் இந்திய பாதுகாப்புக்காக வேண்டியாவது இராஜதந்திர ரீதியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது எதிர்ப்பைக் காட்டவேண்டுமென்று வற்புறுத்தியிருந்தோம்.

ஆகையினால் இந்தியா இந்த விடயம் தங்களுக்குத் தெரியாதென்ற நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இன்று பாகிஸ்தான் இலங்கைக்கு இராணுவ ரீதியாக அதிக உதவிகளைச் செய்கின்றது இது நிச்சயம் தமிழர்களை அடக்குவதற்கு உதவப் போகின்றது. இவருடைய நடவடிக்கைகளை இந்திய புலனாய்வுத் துறையினர் நன்கு அவதானிப்பது இந்தியாவுக்கு நன்மை விளையும் என்பதே எமது ஆணித்தரமான கருத்து.
நன்றி: தினக்குரல்
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)