Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள்
#1
ஒரு தந்தை, மாணவனான தனது மகனைப் பார்க்கப் பாடசாலைக்குச் சென்றிருந்தார். அந்தக் கல்விக் கூடத்தில் அவர் கண்ட காட்சியை மிக வேதனையுடன் தெரிவித்தார்.

இவர் பாடசாலைக்குள் பிரவேசித்தபோது ஆசிரிய, ஆசிரியைகள் பலரும் கையடக்கத் தொலைபேசிகளைப் பாவித்துக்கொண்டிருந்தனர். வகுப்பறையில் அவர்கள் ஆஹா ஓஹோ என்ற சிரிப்பொலிகளுடன் கையடக்கத் தொலைபேசிகளில் உரையாடிக்கொண்டிருந்தனர். இதனை மாணவர்கள் வேடிக்கையாக அவதானித்துக்கொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் இந்த இலட்சணத்தில் நடந்துகொண்டால் மாணவர்கள் கல்வியில் முன்னேறுவது எப்படி? வகுப்பு நேரத்தை இப்படிக் கையடக்கத் தொலைபேசி உரையாடல்களில் செலவிட்டால் மாணவர்கள் உருப்பட முடியுமா? என்று அந்தத் தந்தை அங்கலாய்த்தார்.
பாடசாலை அதிபர் இதில் கண்டிப்பை காட்ட வேண்டாமா?
அந்தத் தந்தை அதிபரைக் கண்டிருந்தால் இதை எழுதியிருக்கமாட்டார். ஏனெண்டால் ஆசிரியர்கள் சாதாரண கைத்தொலைபேசி பயன்படுத்தினால் அதிபர் camera phone பயன்படுத்தியிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். இவர்கள் எமது இளைய தலைமுறையை அழிக்கவென்றே பிறப்பெடுத்து வந்த ஆசிரியமணிகள். இந்தப்போக்கில் போனால் இலங்கை எப்போ முன்னேறுவது. முன்னேறின மாதிரித்தான்.
Reply


Messages In This Thread
இலங்கைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் - by kasthori - 02-16-2005, 12:13 AM
[No subject] - by ratha - 02-16-2005, 12:19 AM
[No subject] - by kavithan - 02-16-2005, 12:20 AM
[No subject] - by Nitharsan - 02-16-2005, 12:23 AM
[No subject] - by KULAKADDAN - 02-16-2005, 12:28 AM
[No subject] - by வியாசன் - 02-16-2005, 12:42 AM
[No subject] - by kasthori - 02-16-2005, 12:50 AM
[No subject] - by வியாசன் - 02-16-2005, 12:56 AM
[No subject] - by hari - 02-16-2005, 05:03 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)