02-15-2005, 04:52 AM
KATPUKKARASAN Wrote:குமுறும் லண்டன் தமிழர்கள்!நன்றி - தினமலர்
"கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் தமிழ் சினிமாவுலருந்து யாராவது வந்தா, ஆதரிக்க மாட்டோம்...' என்று குமுறியுள்ளார் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஒருவர். இவர் இலங்கை தமிழ் மக்கள் புனர்வாழ்வு கழகத்தின் அங்கத்தினர். காரணம் கேட்டபோது, "லட்சம், லட்சமா சம்பாதிக்கிற இவங்க சொந்தக் கடனை அடைக்க லண்டன் வந்தப்போ, வாரிக் கொடுத்தோம். இப்போ இலங்கையில எங்கட மக்களை சுனாமியில வாரிக் கொடுத்துட்டு நிற்கிறோம். இவங்க யாரும் இதுக்கு உதவ முன்வரல... இனி தமிழ் திரையுலகத்திலிருந்து யார் வந்தாலும் ஆதரவளிக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம். ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்கள் மனநிலையும் இதுதான்...' என்றார் அவர்.

