08-20-2003, 02:30 PM
வணக்கம் நண்பர்களே...
தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் ஒவ்வொரு கிழமைகளும் தவறாமல் ஒளிபரப்பாகும் "நாச்சிமார் கோயிலடி" இராஜன்
குழுவினரின் வில்லிசை நிகழ்வு பற்றி மீண்டும் தொடர்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால்
என்னால் உடனடியாகப் பார்க்க முடிவதில்லை. இருந்தாலும் முதல் நிகழ்ச்சியைப் பார்த்து இங்கே என் கருத்தினை எழுதியிருந்தேன்.
அதன் அடிப்படையில் நான் கண்டு களித்த இரண்டாவது நிகழ்ச்சி பற்றிய கருத்து இதோ. நம்மவர் பலரின் கதைகளை
அடித்தளமாகக் கொண்டு வில்லிசை அமைத்து வழங்குகிறார் "நாச்சிமார் கோயிலடி" இராஜன்.
அந்தவகையில் சுதன்ராஜ் அவர்களின் "பேதலிப்பு" கதை தான் இந்த நிகழ்வின் கரு. பேதலிப்பு சாத்திரங்களை, அவற்றின்
பெயராலான மூடங்களையும் மையமாக வைத்து அமைக்கப்பெற்ற கதை. மூடத்தனங்களையெல்லாம் வியாபாரம் ஆக்கி,
உறவுகளைக் கூட உரசிப் பார்க்க முனைந்துள்ள சாத்திரத்தை சாடியிருக்கும் கதை.
இந்தக் கதையினை அழகுற வில்லிசைப் பாவாக்கி சிறந்த கலைஞர்களை தன்னைச் சூழ அமர்த்தி ஒரு விருந்தும், அதனூடே
தமிழர் சிந்தனைக்கு மருந்தும் அளித்திருக்கிறார் "நாச்சிமார் கோயிலடி" இராஜன் அவர்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல்
அவரது கையசைவுகளும், முகபாவங்களும், குரலின் மாற்றங்களும் கதைக்கு ஏற்றாற்போல், சொல்லவருகின்ற கருத்தை
வலுப்படுத்துவதாகவும் அமைவது பாராட்டுதற்குரியது.
ஒவ்வொரு முறையும் சிறந்த கதைகளை, அதாவது புலம்பெயர் சமூகத்திக் சீர்கேடுகளையும் சீர்ப்படுத்தல்களையும் மையமாகக்
கொண்ட கதைகளை தனது வில்லிசை நிகழ்வின் தளமாக எடுத்துக்கொள்வது வரவேற்கத்தக்கது. இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான்
புராணங்களும், பழம்பெருமைகளும் பேசுவது. தற்காலமும் எதிர்காலமும், அதில்வாழ்கின்ற மற்றும் வாழப்போகும் சந்ததியும் தானே
தற்போது நமக்கு அவசியம்.
எனவே இந்த வில்லிசை நிகழ்வுகளை தமிழ்த் தொலைக்காட்சி இணையம் நமக்களிப்பதையிட்டு பெருமைப்படுகிறேன். மீண்டும்
மீண்டும் சொல்கிறேன் நம் கலைஞர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்மை முன்னேற்றுங்கள். கலைஞர்களே இளைஞர்களின் பார்வையை
உங்கள் பக்கம் திருப்புங்கள். அப்பொழுதுதான் உங்கள் கலைகள் என்றென்றும் நிலைக்கும்.
"நாச்சிமார் கோயிலடி" இராஜன் குழுவினர் இணையம் (internet) சார்ந்த ஒரு கதைக்களத்தை மையமாகக் கொண்டு ஒரு
வில்லிசை நிகழ்வும் செய்திருந்தார்களாம். அதனை என்னால் காணமுடியவில்லை. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்
இளஞ் சந்ததியை வழிநடத்த உதவும். இப்படித்தான் வாழ் என்று சொல்வதைக் காட்டிலும், இன்னென்ன முரண்பாடுகள்,
பிரச்சினைகள் இருக்கின்றன, தீமைகள் இருக்கின்றன, நல்லன இருக்கின்றன என்று விளக்குங்கள். தமக்கு சரியான பாதையை
பயனுள்ள பாதையை இளைஞர்கள் கட்டாயமாகத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து அதன் சாதக
பாதகங்களைக் களமாகக் கொண்டு அமைத்த வில்லிசை நிகழ்வுகள் போல் மேலும் வரவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது கலைஞர்களை நாம் ஆதரிப்போம், அவர்கள் எம்மை அணுகினால் - எம்மை அரவணைத்தால் - எம்மோடு உறவாடினால்
எம் பிரச்சினைகள் பற்றிப் பேசினால்!!!
தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் ஒவ்வொரு கிழமைகளும் தவறாமல் ஒளிபரப்பாகும் "நாச்சிமார் கோயிலடி" இராஜன்
குழுவினரின் வில்லிசை நிகழ்வு பற்றி மீண்டும் தொடர்கிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால்
என்னால் உடனடியாகப் பார்க்க முடிவதில்லை. இருந்தாலும் முதல் நிகழ்ச்சியைப் பார்த்து இங்கே என் கருத்தினை எழுதியிருந்தேன்.
அதன் அடிப்படையில் நான் கண்டு களித்த இரண்டாவது நிகழ்ச்சி பற்றிய கருத்து இதோ. நம்மவர் பலரின் கதைகளை
அடித்தளமாகக் கொண்டு வில்லிசை அமைத்து வழங்குகிறார் "நாச்சிமார் கோயிலடி" இராஜன்.
அந்தவகையில் சுதன்ராஜ் அவர்களின் "பேதலிப்பு" கதை தான் இந்த நிகழ்வின் கரு. பேதலிப்பு சாத்திரங்களை, அவற்றின்
பெயராலான மூடங்களையும் மையமாக வைத்து அமைக்கப்பெற்ற கதை. மூடத்தனங்களையெல்லாம் வியாபாரம் ஆக்கி,
உறவுகளைக் கூட உரசிப் பார்க்க முனைந்துள்ள சாத்திரத்தை சாடியிருக்கும் கதை.
இந்தக் கதையினை அழகுற வில்லிசைப் பாவாக்கி சிறந்த கலைஞர்களை தன்னைச் சூழ அமர்த்தி ஒரு விருந்தும், அதனூடே
தமிழர் சிந்தனைக்கு மருந்தும் அளித்திருக்கிறார் "நாச்சிமார் கோயிலடி" இராஜன் அவர்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல்
அவரது கையசைவுகளும், முகபாவங்களும், குரலின் மாற்றங்களும் கதைக்கு ஏற்றாற்போல், சொல்லவருகின்ற கருத்தை
வலுப்படுத்துவதாகவும் அமைவது பாராட்டுதற்குரியது.
ஒவ்வொரு முறையும் சிறந்த கதைகளை, அதாவது புலம்பெயர் சமூகத்திக் சீர்கேடுகளையும் சீர்ப்படுத்தல்களையும் மையமாகக்
கொண்ட கதைகளை தனது வில்லிசை நிகழ்வின் தளமாக எடுத்துக்கொள்வது வரவேற்கத்தக்கது. இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான்
புராணங்களும், பழம்பெருமைகளும் பேசுவது. தற்காலமும் எதிர்காலமும், அதில்வாழ்கின்ற மற்றும் வாழப்போகும் சந்ததியும் தானே
தற்போது நமக்கு அவசியம்.
எனவே இந்த வில்லிசை நிகழ்வுகளை தமிழ்த் தொலைக்காட்சி இணையம் நமக்களிப்பதையிட்டு பெருமைப்படுகிறேன். மீண்டும்
மீண்டும் சொல்கிறேன் நம் கலைஞர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்மை முன்னேற்றுங்கள். கலைஞர்களே இளைஞர்களின் பார்வையை
உங்கள் பக்கம் திருப்புங்கள். அப்பொழுதுதான் உங்கள் கலைகள் என்றென்றும் நிலைக்கும்.
"நாச்சிமார் கோயிலடி" இராஜன் குழுவினர் இணையம் (internet) சார்ந்த ஒரு கதைக்களத்தை மையமாகக் கொண்டு ஒரு
வில்லிசை நிகழ்வும் செய்திருந்தார்களாம். அதனை என்னால் காணமுடியவில்லை. இருந்தாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்
இளஞ் சந்ததியை வழிநடத்த உதவும். இப்படித்தான் வாழ் என்று சொல்வதைக் காட்டிலும், இன்னென்ன முரண்பாடுகள்,
பிரச்சினைகள் இருக்கின்றன, தீமைகள் இருக்கின்றன, நல்லன இருக்கின்றன என்று விளக்குங்கள். தமக்கு சரியான பாதையை
பயனுள்ள பாதையை இளைஞர்கள் கட்டாயமாகத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து அதன் சாதக
பாதகங்களைக் களமாகக் கொண்டு அமைத்த வில்லிசை நிகழ்வுகள் போல் மேலும் வரவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது கலைஞர்களை நாம் ஆதரிப்போம், அவர்கள் எம்மை அணுகினால் - எம்மை அரவணைத்தால் - எம்மோடு உறவாடினால்
எம் பிரச்சினைகள் பற்றிப் பேசினால்!!!

