02-10-2005, 07:23 PM
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்
( தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 12:43 ஈழம்)
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தமாத இறுதியில் சிறீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இந்தியப் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் மூலம் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்காக முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி 1987 இலும் சார்க் மாநாட்டுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1988ம் ஆண்டிலும் விஜயம் செய்த பின்னர் 18 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை டொக்டர் மன்மோகன் சிங் பெறுகிறார்.
சிறீலங்காவின் அரசுப்பீடம் இந்தியா தொடர்பான கொள்கையில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள இந்நேரத்தில் இலங்கைக்கு வருகை தருவது சாலப்பொருந்தும் எனக்கருதியே இந்தியப் பிரதமர் தனது விஜயத்தை முடிவுவெய்துள்ளார் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரச உயர்மட்டத் தலைவர்களாக வெளிவிவகார அமைச்சர் ஐ.கே.குஜரால் ஜஸ்வந்த் சிங் ஜஸ்வந்த் சின்ஹா ஆகியோர் சிறீலங்காவிற்கு வருகைதந்துள்ளனர்.
சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரதமர்கள் ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அடிக்கடி இலங்கைக்கு சென்று வந்துள்ளபோதும் அந்த மட்டத்திலான பதில் விஜயங்கள் இந்தியாவிலிருந்து சிறீலங்காவிற்கு மேற்கொள்ளப்படவில்லை.
பிரதமரின் மன்மோகன் சிங்கின் வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சிறீலங்காவின் தூதுவர் மங்கள முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில் -
'சிறீலங்காவிற்கு இந்தியப் பிரதமர் விஜயம் தரவேண்டும் என 1998ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சிபீடத்திடம் முன்வைத்து வந்துள்ளோம். சிறீலங்காவில் இந்தியப் பிரதமரைக்காண ஆர்வமாக உள்ளோம். சிறீலங்காவின் தேசிய அரசமைப்பு இந்திய ஆதரவுடையதே."- என்று கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதாக் கட்சியைத் தோற்கடித்து அமோக வெற்றியீட்டி ஆட்சிப் பீடமேறியுள்ள காங்கிரஸ்ää தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய ஈழத் தமிழரதும் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.
சிறீலங்கா அரசு இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய முயன்றபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்கட்சிகள் பிரதமர் மன்மோகனை நேரடியாகச் சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தன.
இத்தகைய ஆட்சிக்கூட்டணியின் தலைவரான பிரதமர் மன்மோகனின் சிறீலங்கா விஜயம் முக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. :? :roll:
--------- -------------- ----------- ------------- ------------- ----------
பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதமாக கைச்சாத்திட
இந்தியாவைக் கோருகிறார் அமைச்சர் கதிர்காமர்
(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 12:48 ஈழம்)
சிறீலங்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தம் தொடர்பில் துரிதமாகச் செயற்பட்டு கூடியவிரைவில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு இந்திய அரசைக் கோரியுள்ளார் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்.
அடுத்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யவுள்ள நிலையில் கதிர்காமர் இப்படியொரு அறிவிப்பை விடுத்துள்ளார்.
புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் சிறீலங்கா படையினருக்கு இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் பயறற்சி போன்ற விடயங்களை உள்ளடக்கிய உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பலதரப்பிலுமிருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து அந்தமுயற்சி கைவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் இதுபற்றி தமிழகக் கட்சிகளிடம் உறுதியளிக்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான எந்த செயலையும் இந்தியா செய்யாது என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த கதிர்காமர் அங்கு அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
புலிகளின் மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விடுதலைப்புலிகளின் தலைமைமையை கடும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ள நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கலாம் என்ற பீதி அரசமட்டத்தில் எழுந்துள்ளது. இதனாலேயே அரசு முன் ஆயத்த நடவடிக்கைகளில் துரிதமாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் அவதானிகள். :? :roll:
--------- ---------- -------- ----------- ---------- -----
தயாகம் திரும்பத் தயாராகும் அமெரிக்கப் படைகள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :roll: :!: :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 19:47 ஈழம்)
சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் தமது நிவாரணப்பணிகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பத்தயாராகி வருகிறார்கள் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிக்கென பாதிக்கப்ட்ட ஏழு நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா தற்போது படிப்படியாக படைகளைத் தாயகத்துக்குத் திருப்பியழைத்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக சுமார் 1600 படையினருக்கு மேல் சிறீலங்காவிலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையானோரே தற்போது சிறீலங்காவில் உள்ளனர். அவர்களும் தற்போது தாயகம் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர் என்றும் அவ்வட்டாரஙகள் தெரிவித்திருக்கின்றன.
ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து சுமார் 12ற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகள் நிவாரணப் பணிகளுக்காக சிறீலங்காவுக்கு வந்தன. அவற்றில் பல நாட்டுப்படைகள் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டன.
ஒஸ்ரியா கனடா பெல்ஜியம் கிரீஸ் இத்தாலி பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாட்டுப்படைகள் கடந்த சில நாட்களில் தமது படைகளில் பெரும் பகுதியினர் தாயகம் திரும்பிவிட்டனர்
நன்றி: புதினம்
( தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 12:43 ஈழம்)
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அடுத்தமாத இறுதியில் சிறீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இந்தியப் பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் மூலம் இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்காக முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி 1987 இலும் சார்க் மாநாட்டுக்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1988ம் ஆண்டிலும் விஜயம் செய்த பின்னர் 18 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு வரும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை டொக்டர் மன்மோகன் சிங் பெறுகிறார்.
சிறீலங்காவின் அரசுப்பீடம் இந்தியா தொடர்பான கொள்கையில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள இந்நேரத்தில் இலங்கைக்கு வருகை தருவது சாலப்பொருந்தும் எனக்கருதியே இந்தியப் பிரதமர் தனது விஜயத்தை முடிவுவெய்துள்ளார் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரச உயர்மட்டத் தலைவர்களாக வெளிவிவகார அமைச்சர் ஐ.கே.குஜரால் ஜஸ்வந்த் சிங் ஜஸ்வந்த் சின்ஹா ஆகியோர் சிறீலங்காவிற்கு வருகைதந்துள்ளனர்.
சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பிரதமர்கள் ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அடிக்கடி இலங்கைக்கு சென்று வந்துள்ளபோதும் அந்த மட்டத்திலான பதில் விஜயங்கள் இந்தியாவிலிருந்து சிறீலங்காவிற்கு மேற்கொள்ளப்படவில்லை.
பிரதமரின் மன்மோகன் சிங்கின் வருகை தொடர்பாக இந்தியாவுக்கான சிறீலங்காவின் தூதுவர் மங்கள முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில் -
'சிறீலங்காவிற்கு இந்தியப் பிரதமர் விஜயம் தரவேண்டும் என 1998ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சிபீடத்திடம் முன்வைத்து வந்துள்ளோம். சிறீலங்காவில் இந்தியப் பிரதமரைக்காண ஆர்வமாக உள்ளோம். சிறீலங்காவின் தேசிய அரசமைப்பு இந்திய ஆதரவுடையதே."- என்று கூறியுள்ளார்.
தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதாக் கட்சியைத் தோற்கடித்து அமோக வெற்றியீட்டி ஆட்சிப் பீடமேறியுள்ள காங்கிரஸ்ää தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய ஈழத் தமிழரதும் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவான கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.
சிறீலங்கா அரசு இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்ய முயன்றபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்கட்சிகள் பிரதமர் மன்மோகனை நேரடியாகச் சென்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தன.
இத்தகைய ஆட்சிக்கூட்டணியின் தலைவரான பிரதமர் மன்மோகனின் சிறீலங்கா விஜயம் முக்கியதொன்றாகக் கருதப்படுகிறது. :? :roll:
--------- -------------- ----------- ------------- ------------- ----------
பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதமாக கைச்சாத்திட
இந்தியாவைக் கோருகிறார் அமைச்சர் கதிர்காமர்
(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 12:48 ஈழம்)
சிறீலங்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தம் தொடர்பில் துரிதமாகச் செயற்பட்டு கூடியவிரைவில் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு இந்திய அரசைக் கோரியுள்ளார் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்.
அடுத்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விஜயம் செய்யவுள்ள நிலையில் கதிர்காமர் இப்படியொரு அறிவிப்பை விடுத்துள்ளார்.
புலனாய்வுத் தகவல் பரிமாற்றம் சிறீலங்கா படையினருக்கு இந்திய இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் பயறற்சி போன்ற விடயங்களை உள்ளடக்கிய உத்தேச பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பலதரப்பிலுமிருந்து எழுந்த எதிர்ப்பை அடுத்து அந்தமுயற்சி கைவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் இதுபற்றி தமிழகக் கட்சிகளிடம் உறுதியளிக்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான எந்த செயலையும் இந்தியா செய்யாது என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி சந்திரிகாவுடன் பாகிஸ்தானுக்கு சென்றிருந்த கதிர்காமர் அங்கு அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
புலிகளின் மட்டு.-அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விடுதலைப்புலிகளின் தலைமைமையை கடும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ள நிலையில் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்து மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கலாம் என்ற பீதி அரசமட்டத்தில் எழுந்துள்ளது. இதனாலேயே அரசு முன் ஆயத்த நடவடிக்கைகளில் துரிதமாகியுள்ளது என்கிறார்கள் அரசியல் அவதானிகள். :? :roll:
--------- ---------- -------- ----------- ---------- -----
தயாகம் திரும்பத் தயாராகும் அமெரிக்கப் படைகள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :roll: :!: :?: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: (தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 19:47 ஈழம்)
சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் தமது நிவாரணப்பணிகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பத்தயாராகி வருகிறார்கள் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிக்கென பாதிக்கப்ட்ட ஏழு நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா தற்போது படிப்படியாக படைகளைத் தாயகத்துக்குத் திருப்பியழைத்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக சுமார் 1600 படையினருக்கு மேல் சிறீலங்காவிலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையானோரே தற்போது சிறீலங்காவில் உள்ளனர். அவர்களும் தற்போது தாயகம் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர் என்றும் அவ்வட்டாரஙகள் தெரிவித்திருக்கின்றன.
ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து சுமார் 12ற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகள் நிவாரணப் பணிகளுக்காக சிறீலங்காவுக்கு வந்தன. அவற்றில் பல நாட்டுப்படைகள் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டன.
ஒஸ்ரியா கனடா பெல்ஜியம் கிரீஸ் இத்தாலி பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாட்டுப்படைகள் கடந்த சில நாட்களில் தமது படைகளில் பெரும் பகுதியினர் தாயகம் திரும்பிவிட்டனர்
நன்றி: புதினம்

