Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த ....
#1
கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த அரச இராணுவ புலனாய்வுத்துறையினரே தாக்குதல் மேற்கொண்டனர்.
செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 நெருடன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் பயனம் செய்த வாகனத்தைப் பின்தொடர்ந்து பல மணிநேரம் பயணம் செய்த இலங்கை இராணுவ அதிரடிப்படையினரும் ää அரச புலனாய்வுத்துறையினரும் இணைந்தே தாக்குதலை மேற்கொண்டதாக இச்சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ää கௌசல்யன் பயணம் செய்த வாகனத்தை இராணுத்தினரின் வாகனமொன்று பின்தொடர்ந்து வந்தது ää இவர்கள் நாமல்கம என்ற சிங்களக் கிராமத்தடியில் கௌசல்யனின் வாகனத்தை முந்திக்கொண்டு முன்பக்கமாகச் சென்று வாகனத்தை வீதியின் குறுக்கே நிறுத்தியதுடன் கௌசல்யன் குழுவினரை வாகனத்தை விட்டு இறங்குமாறு சிங்களத்தில் வற்புறுத்தியுள்ளனர்ää சுமார் 6 இராணுவத்தினர் வாகனத்திற்குள் இருந்ததாகவும் அனைவரும் அரச அதிரடிப்படையினரின் சீருடையுடனும் ஆயுதங்களுடனும் காணப்பட்டதாகவும் இவர்களின் கோரிக்கையினை சந்திரநேருவின் மெய்ப்பாதுகாவலர்கள் ஏற்க மறுத்த போது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஓவ்வொருவர் மீதும் பல டசின் ரவைகள் பாய்ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் பயணம் செய்த வாகனத்திற்கு சுமார் 50 க்கு மேற்பட்ட ரவைகள் பாந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Source : http://www.nitharsanam.com/?art=8666
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
கௌசல்யனின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த .... - by Vaanampaadi - 02-08-2005, 06:08 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 06:17 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 06:26 PM
[No subject] - by Malalai - 02-08-2005, 09:27 PM
[No subject] - by ramani - 02-08-2005, 10:05 PM
[No subject] - by shiyam - 02-09-2005, 02:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)