02-07-2005, 06:57 PM
காலமெல்லாம் காதல் வாழ்க.
காதல் கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடங்குதலன்று, எதிர்பார்த்த வெறியில் எதிர்பாராத சொடுக்கில் கிடத்தலன்று, இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதலன்று, தேடல்கள் நம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்து சந்தித்து உள்திரும்பி திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி ஒற்றை மறதிக்குள் அமிழ்வது. அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா மொட்டின் மீது வழிந்து விடுகிறது பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கின்றது? காதலால் வாழ்ந்து கொள்ள எத்தனை பேருக்கு நேர்மையிருக்கின்றது?
கவிஞர் - அறிவுமதி
காதல் தென்றலை துணைக்கு அழைத்துக்கொண்டு பறக்கின்ற பறவை. இன்னும் சொல்லப்போனால் சிறகு முளைத்த மென்மையான இதயக்குஞ்சு. அது தத்தித் தத்தி உயரப் பறந்து காதல் தேசத்து கண்ணாடிக் கோட்டைகளை உடைக்கின்ற பறவை. உடைத்துவிட்டால் உல்லாசம்தான்
கவிஞர் - பாரதிராஜா
காதல் எழுத்துக்களால் அடக்கமுடியாத வார்த்தை. அடுக்கமுடியாத வார்த்தை. வார்த்தைக்குள் அடக்கமுடியாத அர்த்தம். அர்த்தமின்றி பேசமுடியாத பாஷை. பாஷை என்ற ஓசை நசுங்கி உயிர் பிதுங்கும் மௌனம். மௌனத்தை எப்படி வரைவது? அது உணர்வது
கவிஞர் - பார்த்திபன்.
காதல் கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடங்குதலன்று, எதிர்பார்த்த வெறியில் எதிர்பாராத சொடுக்கில் கிடத்தலன்று, இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதலன்று, தேடல்கள் நம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்து சந்தித்து உள்திரும்பி திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி ஒற்றை மறதிக்குள் அமிழ்வது. அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா மொட்டின் மீது வழிந்து விடுகிறது பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கின்றது? காதலால் வாழ்ந்து கொள்ள எத்தனை பேருக்கு நேர்மையிருக்கின்றது?
கவிஞர் - அறிவுமதி
காதல் தென்றலை துணைக்கு அழைத்துக்கொண்டு பறக்கின்ற பறவை. இன்னும் சொல்லப்போனால் சிறகு முளைத்த மென்மையான இதயக்குஞ்சு. அது தத்தித் தத்தி உயரப் பறந்து காதல் தேசத்து கண்ணாடிக் கோட்டைகளை உடைக்கின்ற பறவை. உடைத்துவிட்டால் உல்லாசம்தான்
கவிஞர் - பாரதிராஜா
காதல் எழுத்துக்களால் அடக்கமுடியாத வார்த்தை. அடுக்கமுடியாத வார்த்தை. வார்த்தைக்குள் அடக்கமுடியாத அர்த்தம். அர்த்தமின்றி பேசமுடியாத பாஷை. பாஷை என்ற ஓசை நசுங்கி உயிர் பிதுங்கும் மௌனம். மௌனத்தை எப்படி வரைவது? அது உணர்வது
கவிஞர் - பார்த்திபன்.
----------

