02-07-2005, 04:53 PM
கமலுக்கு ஜெயலலிதா பணம் - எதிரிகளின் புதிய அஸ்திரம்
திடீர் தமிழ் காவலர்கள் தங்களை மதிக்காதவர்களுக்கு எதிராக சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்த தீர்மானித்து விட்டனர். அதன் முதல்கட்ட வதந்தி, கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு ஜெயலலிதா பைனான்ஸ் செய்திருக்கிறார் என்பது.
அரசியல்வாதிகளாவது பரவாயில்லை, தமிழ்த் தாய்க்கு சோறு போட்டே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் தங்கர்பச்சான், சீமான், புகழேந்தி தங்கராஜ் வகையறாக்களின் வயிற்றெரிச்சல்தான் தாங்கமுடியவில்லை.
தயாரிப்பாளர்கள் விரும்பும் பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்கலாம் என்ற முதல்வரின் உத்தரவு குறித்து, மகனுக்கு இத்தாலி பீட்ஸா வாங்கிக்கொடுக்கும் தங்கர்பச்சான் சொல்வதைக் கேளுங்கள்: "தமிழ் குறித்து விவாதம் ஏற்பட இந்த
அறிக்கை வழி வகுத்திருக்கிறது. இதுவே தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றிதான். முதல்வரின் அறிக்கை எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை. 'வலி'யில்தான் மகிழ்ச்சி பிறக்கும். இப்போது 'வலி' வந்துவிட்டது. சீக்கிரமே மகிழ்ச்சி வரும்" என்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை பேசியிருக்கிறார்.
சீமான் தனது ட்ரேட் மார்க் 'மைக் முழுங்கிய' குரலில் 'நியூ' படத்தையும், '7ஜி ரெயின்போ காலனி' படத்தையும் திட்டி தீர்க்கிறார். இந்த இரு படங்களிலும் தமிழ்க் கலாச்சாரம் காணவில்லை என்பது இவர் குற்றச்சாட்டு. யதார்த்த தமிழ்நாட்டில, நாளைக்கு மூன்று கள்ளக்காதலர்கள், கற்பழிப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது, சமூகத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களில் கண்ணகிகளையும், ராமன்களையும் இவர்கள் எதிர்பார்ப்பது... இவர்கள் எத்தனை தூரம் போலிகள் என்பதற்கு சின்ன உதாரணம்.
இவர்கள் அணியிலிருந்து இப்போது கிளம்பியிருக்கும் வதந்திதான் நாம் முதல் பாராவில் சொன்னது. 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு முதல்வர் எட்டுகோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருக்கிறார். ஆகவே தான் இந்த கரிசனம் என புதுக்காமெடி கதையொன்றை பரப்பி வருகிறார்கள்.
பத்த வைத்த வதந்தி வெடிக்குமா இல்லை பத்த வைத்த கையை கடிக்குமா? விரைவில் தெரியவரும்!
சினி சவுத்
திடீர் தமிழ் காவலர்கள் தங்களை மதிக்காதவர்களுக்கு எதிராக சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்த தீர்மானித்து விட்டனர். அதன் முதல்கட்ட வதந்தி, கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு ஜெயலலிதா பைனான்ஸ் செய்திருக்கிறார் என்பது.
அரசியல்வாதிகளாவது பரவாயில்லை, தமிழ்த் தாய்க்கு சோறு போட்டே தீருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கும் தங்கர்பச்சான், சீமான், புகழேந்தி தங்கராஜ் வகையறாக்களின் வயிற்றெரிச்சல்தான் தாங்கமுடியவில்லை.
தயாரிப்பாளர்கள் விரும்பும் பெயர்களை தங்கள் படங்களுக்கு வைக்கலாம் என்ற முதல்வரின் உத்தரவு குறித்து, மகனுக்கு இத்தாலி பீட்ஸா வாங்கிக்கொடுக்கும் தங்கர்பச்சான் சொல்வதைக் கேளுங்கள்: "தமிழ் குறித்து விவாதம் ஏற்பட இந்த
அறிக்கை வழி வகுத்திருக்கிறது. இதுவே தமிழுணர்வாளர்களுக்கு கிடைத்த வெற்றிதான். முதல்வரின் அறிக்கை எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை. 'வலி'யில்தான் மகிழ்ச்சி பிறக்கும். இப்போது 'வலி' வந்துவிட்டது. சீக்கிரமே மகிழ்ச்சி வரும்" என்று குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை கதை பேசியிருக்கிறார்.
சீமான் தனது ட்ரேட் மார்க் 'மைக் முழுங்கிய' குரலில் 'நியூ' படத்தையும், '7ஜி ரெயின்போ காலனி' படத்தையும் திட்டி தீர்க்கிறார். இந்த இரு படங்களிலும் தமிழ்க் கலாச்சாரம் காணவில்லை என்பது இவர் குற்றச்சாட்டு. யதார்த்த தமிழ்நாட்டில, நாளைக்கு மூன்று கள்ளக்காதலர்கள், கற்பழிப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது, சமூகத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களில் கண்ணகிகளையும், ராமன்களையும் இவர்கள் எதிர்பார்ப்பது... இவர்கள் எத்தனை தூரம் போலிகள் என்பதற்கு சின்ன உதாரணம்.
இவர்கள் அணியிலிருந்து இப்போது கிளம்பியிருக்கும் வதந்திதான் நாம் முதல் பாராவில் சொன்னது. 'மும்பை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு முதல்வர் எட்டுகோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருக்கிறார். ஆகவே தான் இந்த கரிசனம் என புதுக்காமெடி கதையொன்றை பரப்பி வருகிறார்கள்.
பத்த வைத்த வதந்தி வெடிக்குமா இல்லை பத்த வைத்த கையை கடிக்குமா? விரைவில் தெரியவரும்!
சினி சவுத்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

