02-07-2005, 03:01 PM
இலங்கை இராணுவத்துக்கு அமெரிக்கா பயிற்சி வழங்குவது குறித்து இந்தியா கடும் கவலை
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அமெரிக்கா அதீத அக்கறை காட்டி வருவது குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்து இலங்கை இராணுவம் தனது உயர் அதிகாரிகளை ஹவாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பசுபிக்குக்கான கட்டளைப் பீடம் ஹவாயிலேயே அமைந்துள்ளது. இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் பிரிகேடியர் ஹேந்திர வித்தாரனவை ஹவாய்க்கு பயிற்சிக்கு அனுப்புமாறு அமெரிக்கா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமையை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வழமை நடைமுறைகளின்படி ஒரு அதிகாரிக்கு இவ்வாறு விசேட பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பான இறுதி முடிவினை விசேட குழுவொன்றே எடுக்க வேண்டியிருக்கும். இதனால் பிரிகேடியர் வித்தாரனவை ஹவாய்க்கு அனுப்புவதா என்பது குறித்து விசேட குழுவொன்று கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் குழு பிரிகேடியர் குலதுங்கவே இவ்வாறான பயிற்சிக்கு அனுப்புவதற்குப் பொருத்தமானவர் என தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் ரிச்சட் கிர்வினிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க தூதரகம் பிரிகேடியர் வித்தாரனவை பயிற்சிக்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் வித்தாரன ஹவாய் செல்லவுள்ளார். இதேவேளை புலனாய்வுப் பிரிவிவைச் சேர்ந்த இன்னொரு அதிகாரியும் ஹவாய்க்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். இராணுவ பாரம்பரியத்தின் படி தேசிய புலனாய்வு பணியக தலைவர் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவதில்லை என சுட்டிக் காட்டப்படுகின்றது.
-------------------------------------- ----------------------------------------
இந்திய உயர்மட்ட பாதுகாப்பு குழுவினர் இலங்கையில் பல்வேறு தரப்புடனும் சந்திப்பு
இலங்கை பாதுகாப்பு தரப்புடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழு கொழும்பு வந்துள்ளது.
தடைப்பட்டிருக்கும் இலங்கை இந்திய பாதுகாப்பு உடன்பாடு குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காகவே இவர்கள் இங்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கு இவர்கள் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். எனினும் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென இந்திய ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையுடனான பாதுகாப்பு உடன்பாட்டிற்கு இந்தியா தயங்கிய நிலையில் இலங்கை அரசுஇ பாதுகாப்பு குறித்து வேறு நாடுகளுடன் உடன்பாடுகளைச் செய்து வருவதையடுத்தே இந்திய பாதுகாப்பு தரப்பினர் இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடல்கோளினால் இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போது இந்தியாவே முதன் முதலில் உதவிக்கு வந்தது. கடற்படை போர்க்கப்பல்களில் அவசர உதவிப் பொருட்கள் உடனடியாக பெருமளவில் அனுப்பி வைக்கப்பட்டன.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இந்தியப் படையினர் உடனடியாக வெளியேறிய போதிலும் தற்போது காலியில் எண்பது பேரைக் கொண்ட அணியொன்று புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அந்தப் பணிகளும் முடிவடைந்ததும் இந்தியப் படையினர் உடனடியாக வெளியேறி விடுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினக்குரல்
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் அமெரிக்கா அதீத அக்கறை காட்டி வருவது குறித்து இந்தியா கடும் கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்து இலங்கை இராணுவம் தனது உயர் அதிகாரிகளை ஹவாய்க்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் பசுபிக்குக்கான கட்டளைப் பீடம் ஹவாயிலேயே அமைந்துள்ளது. இலங்கையின் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் பிரிகேடியர் ஹேந்திர வித்தாரனவை ஹவாய்க்கு பயிற்சிக்கு அனுப்புமாறு அமெரிக்கா தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமையை இந்தியா கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வழமை நடைமுறைகளின்படி ஒரு அதிகாரிக்கு இவ்வாறு விசேட பயிற்சிக்கான சந்தர்ப்பம் கிடைத்தால் இது தொடர்பான இறுதி முடிவினை விசேட குழுவொன்றே எடுக்க வேண்டியிருக்கும். இதனால் பிரிகேடியர் வித்தாரனவை ஹவாய்க்கு அனுப்புவதா என்பது குறித்து விசேட குழுவொன்று கூடி ஆராய்ந்துள்ளது. இந்தக் குழு பிரிகேடியர் குலதுங்கவே இவ்வாறான பயிற்சிக்கு அனுப்புவதற்குப் பொருத்தமானவர் என தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் ரிச்சட் கிர்வினிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க தூதரகம் பிரிகேடியர் வித்தாரனவை பயிற்சிக்கு அனுப்புமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் வித்தாரன ஹவாய் செல்லவுள்ளார். இதேவேளை புலனாய்வுப் பிரிவிவைச் சேர்ந்த இன்னொரு அதிகாரியும் ஹவாய்க்கு பயிற்சிக்கு சென்றுள்ளார். இராணுவ பாரம்பரியத்தின் படி தேசிய புலனாய்வு பணியக தலைவர் வெளிநாடுகளுக்குப் பயிற்சிக்கு அனுப்பப்படுவதில்லை என சுட்டிக் காட்டப்படுகின்றது.
-------------------------------------- ----------------------------------------
இந்திய உயர்மட்ட பாதுகாப்பு குழுவினர் இலங்கையில் பல்வேறு தரப்புடனும் சந்திப்பு
இலங்கை பாதுகாப்பு தரப்புடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக இந்திய உயர்மட்ட பாதுகாப்புக் குழு கொழும்பு வந்துள்ளது.
தடைப்பட்டிருக்கும் இலங்கை இந்திய பாதுகாப்பு உடன்பாடு குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காகவே இவர்கள் இங்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இங்கு இவர்கள் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். எனினும் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதென இந்திய ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையுடனான பாதுகாப்பு உடன்பாட்டிற்கு இந்தியா தயங்கிய நிலையில் இலங்கை அரசுஇ பாதுகாப்பு குறித்து வேறு நாடுகளுடன் உடன்பாடுகளைச் செய்து வருவதையடுத்தே இந்திய பாதுகாப்பு தரப்பினர் இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடல்கோளினால் இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போது இந்தியாவே முதன் முதலில் உதவிக்கு வந்தது. கடற்படை போர்க்கப்பல்களில் அவசர உதவிப் பொருட்கள் உடனடியாக பெருமளவில் அனுப்பி வைக்கப்பட்டன.
நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இந்தியப் படையினர் உடனடியாக வெளியேறிய போதிலும் தற்போது காலியில் எண்பது பேரைக் கொண்ட அணியொன்று புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அந்தப் பணிகளும் முடிவடைந்ததும் இந்தியப் படையினர் உடனடியாக வெளியேறி விடுவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினக்குரல்

