02-07-2005, 12:57 PM
மீண்டும் தாக்குதலுக்கு திட்டமா?
விடுதலைப்புலிகளிடம் நவீன போர் விமானம்
கொழும்பு, பிப்.7-
விடுதலைப்புலிகளிடம் நவீன போர் விமானம் இருப்பதால், மீண்டும் தாக் குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகளின்
நவீன போர் விமானம்
இலங்கை ராணுவ இலாகா புதிய செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக ஜெய வர்த்தனே நியமிக்கப்பட்டுள் ளார். அவர் முப்படை தளபதி களுடன் ஆலோசனை செய்த போது ஒரு முக்கியமான தகவல் தெரிய வந்தது.
இலங்கை உளவுப் படையின் ஆள் இல்லாத வேவு விமானம் கிளிநொச்சி பகுதியில் வானத் தில் வட்டமிட்டு பறந்தபோது, கிளிநொச்சி அருகே உள்ள இரணை மடு கிராமத்தில் விடு தலைப்புலிகள் புதிதாக கட்டி உள்ள ராணுவ விமான தளத்தில் நவீன ரக போர் விமானம் நிறுத் தப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து தகவல் அனுப்பியது.
இந்த நவீன போர் விமா னங்கள் 1,200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடர்ந்து 4 மணி 40 நிமிடங்கள் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை என்ற விவரமும் தெரிய வந்துள் ளது. இது போன்ற நவீன போர் விமானங்கள் தற்போது அங் கோலா, ஆஸ்திரியா, பெலிவியா, போட்ஸ்வானா, புருனை, சிலி, பிரான்சு, ஈரான், மலேசியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் விமானப் படைகளில் உள்ளன.
சக்தி வாய்ந்த கடற்படை
விடுதலைப்புலிகளிடம் ஏற் கனவே சக்தி வாய்ந்த கடற்படை உள்ளது. இதற்கு ``கடல் புலிகள்" என்று பெயர். இலங்கை அரசு கப்பல் படைக்கு சவால்விடும் வகையில் விடுதலைப்புலிகளின் கடல்புலி கப்பல் படை மிகவும் சக்தி வாய்ந்தது. பல ஆண்டு களாக இலங்கை கடற்படை யுடன் மோதி துப்பாக்கி ஏந்திய சிங்கள படகுகளை விடுதலைப் புலிகளின் கடற்படை அழித்து விட்டது.
மீண்டும் தாக்குதல்
நடத்த திட்டமா?
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் நவீன போர் விமானம் வாங்கி இருப்பதால், மீண்டும் இலங்கையில் போர் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி இலங்கை முப்படை தளபதிகளுடன் ராணுவ இலாகா புதிய செயலாளர் அசோக ஜெய வர்த்தனே ஆலோசனை நடத்தி வருகிறார்.
Dailythanthi
விடுதலைப்புலிகளிடம் நவீன போர் விமானம்
கொழும்பு, பிப்.7-
விடுதலைப்புலிகளிடம் நவீன போர் விமானம் இருப்பதால், மீண்டும் தாக் குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகளின்
நவீன போர் விமானம்
இலங்கை ராணுவ இலாகா புதிய செயலாளராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அசோக ஜெய வர்த்தனே நியமிக்கப்பட்டுள் ளார். அவர் முப்படை தளபதி களுடன் ஆலோசனை செய்த போது ஒரு முக்கியமான தகவல் தெரிய வந்தது.
இலங்கை உளவுப் படையின் ஆள் இல்லாத வேவு விமானம் கிளிநொச்சி பகுதியில் வானத் தில் வட்டமிட்டு பறந்தபோது, கிளிநொச்சி அருகே உள்ள இரணை மடு கிராமத்தில் விடு தலைப்புலிகள் புதிதாக கட்டி உள்ள ராணுவ விமான தளத்தில் நவீன ரக போர் விமானம் நிறுத் தப்பட்டு இருப்பதை கண்டு பிடித்து தகவல் அனுப்பியது.
இந்த நவீன போர் விமா னங்கள் 1,200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொடர்ந்து 4 மணி 40 நிமிடங்கள் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை என்ற விவரமும் தெரிய வந்துள் ளது. இது போன்ற நவீன போர் விமானங்கள் தற்போது அங் கோலா, ஆஸ்திரியா, பெலிவியா, போட்ஸ்வானா, புருனை, சிலி, பிரான்சு, ஈரான், மலேசியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் விமானப் படைகளில் உள்ளன.
சக்தி வாய்ந்த கடற்படை
விடுதலைப்புலிகளிடம் ஏற் கனவே சக்தி வாய்ந்த கடற்படை உள்ளது. இதற்கு ``கடல் புலிகள்" என்று பெயர். இலங்கை அரசு கப்பல் படைக்கு சவால்விடும் வகையில் விடுதலைப்புலிகளின் கடல்புலி கப்பல் படை மிகவும் சக்தி வாய்ந்தது. பல ஆண்டு களாக இலங்கை கடற்படை யுடன் மோதி துப்பாக்கி ஏந்திய சிங்கள படகுகளை விடுதலைப் புலிகளின் கடற்படை அழித்து விட்டது.
மீண்டும் தாக்குதல்
நடத்த திட்டமா?
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் நவீன போர் விமானம் வாங்கி இருப்பதால், மீண்டும் இலங்கையில் போர் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி இலங்கை முப்படை தளபதிகளுடன் ராணுவ இலாகா புதிய செயலாளர் அசோக ஜெய வர்த்தனே ஆலோசனை நடத்தி வருகிறார்.
Dailythanthi
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

