02-04-2005, 02:53 AM
cannon Wrote:நன்றி! முதலில் அணைவருக்கும்,
இங்கு வெட்டி ஒட்டுவது சம்பந்தமாக "கவிப்பிரியன்" வித்தியாசமான கருத்தை முன்வைத்திருக்கிறார். நிச்சயமாக பல அறியாச் செய்திகளை இதன் மூலம் அறியலாம்தான் ஆனால் நாம் அன்றாடம் பார்க்கும் ஏனைய தளங்களிலிருந்து செய்திகளை பிரசுரிப்பதால் களத்திற்கு வருபவர்களுக்குத்தான் களம் திகட்டப் பார்க்கும். மாறாக அச்செய்திகளை அறிந்தவரை திரட்டி நாமே எழுதுவதால், எமது எழுத்துத் திறனை கூட அதிகரிக்காலாம்? இல்லையேல் எம்மையறியாமலே நாமும் செய்திகளை வெட்டி ஒட்டுவதிலேயே காலத்தை கழித்து விடுவோம்!
மற்றும் சிலர் கூறியதைப் போல "BLOGS" பகுதியால் களத்தில் உள்ள சில திறமையானவர்கள் கருத்தாடல்களிலிருந்து ஒதுங்கத் தொடங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை "BLOGS" பகுதியை அகற்றுவது அல்லது களத்தில் எழுதியதைத்தான் அப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியுமென்ற மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
இதில் மோகன் உட்பட மற்றைய கண்காணிப்பாளர்களும் தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து செய்யப்பட வேண்டிய மாற்றங்களைச் செய்தால் களத்திற்கு நன்மை பயக்குமென நினைக்கிறேன்.
கனொன் அண்ணா...
வெட்டி ஒட்டுவதை பொறுத்த வரையில் அது தவறு என எனக்கு படவில்லை... ஏனெனில், இங்கு முக்கியமான செய்திகளை மட்டும் தான் வெட்டி ஒட்டுகிறார்கள். எனவே இங்குவந்தே ஒரே பார்வையில் அனைத்து செய்திகளையும் பார்த்து விடலாம் அல்லாவிட்டால் பத்து தளத்துக்கும் அலைந்துதான் அந்த செய்திகளை படிக்க வேண்டி இருக்கும்.
என் கணிப்பின் படி அவர்கள் ஒதுங்கவில்லை.. தொடர்ச்சியாக களத்தில் கருத்தாடுகிறார்கள். அவர்கள் அங்கே கவிதைகள் சிலவற்றை தான் இடுகிறார்கள், அத்தோடு அதனை களத்திலும் இடுகிறார்கள். எனவே இது பெரிதாக களத்தை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை.
சமீப காலமக பல உறவுகள் களத்துக்கு புதிதாக வந்திருக்கிறார்கள். அவர்கள் களத்தின் ஓட்டத்துக்கு பழக வேண்டும். அத்தோடு நல்ல திறமையாகா நகைச்சுவையாகவும் கருத்துக்களை வைக்கிறார்கள். சிலவேளைகளில் கருத்து மாறி செல்கிறது. இது அன்று தொட்டு இன்றுவரை நடந்து கொண்டு தான் இருகிறது. முடிந்தால் ஒரு நாள் இரண்டு நாள் அவ்வாறு போகாமல் தவிர்க்கலாம் ஆனால், திரும்ப வழமைக்கு வந்துவிடும். அத்தோடு இதனை கட்டுப்படுத்த நினைத்தால் உங்கள் 10 பதில் 1 ஆகும் அப்போது கூட இப்படி எழுதினால் சரியா... அப்படி எழுதினால் சரியா.. என சிந்தித்து எழுதும் போது .. கருத்தை சிந்திப்பதோடு, களதில் ஒரு முழு சுதந்திரத்துடன் எழுத முடியாது. அப்படிதான் நீங்கள் சொல்லும் சிலரும் தங்களை கட்டுப்படுத்தி கருத்துக்களை குறைத்து எழுத முற்படுகிறார்கள், அதனால் தான் நீங்கள் சொல்கிறீர்கள் அவர்கள் களத்தில் கருத்து எழுதவில்லை.. எழுதுவதை குறைத்து விட்டார்கள் என்று. ஆனால் உண்மை என்ன என்றால் சில கருத்தாடல்களில் பங்குபற்றும் போது அது அலட்டலாக போதுதோ அல்லது தலைப்புக்கு பொருத்தமின்றி போகுதோ.. அப்போது அவப்பேச்சுக்கு உள்ளாவது இவர்களே. எனவே அவர்கள் சில இடங்களில் ஏதாவது நகைச்சுவையாக கதைத்தாலும் பல இடங்களில் மிக அரிய கருத்துக்களை எழுதுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து களத்தோடு இணைந்திருக்க வேண்டும்.
[b][size=18]

